பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 4.05. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
4.05. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
1083 |
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லையில் கருணைத் தாய் ஆனாள் தனி ஆயின தலைவரைத் தழுவ ஆயு நான்மறை போற்ற நின்று அரும் தவம் புரியத் தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு | 4.5.1 | 1084. | நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த தன்மை மேவிய தலைமை சால் பெருங்குடி தழைப்ப வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு | 4.5.2 | 1085. | நற்றிறம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்து உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால் சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச் சொல்லையே காக்கப் பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டை நாடு | 4.5.3 | 1086. | ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் சேண் உலாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு வாண் நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை பேண நீடிய முறையது பெரும் தொண்டை நாடு | 4.5.4 | 1087. | கறை விளங்கிய கண்டர் பாற் காதல் செய் முறைமை நிறை புரிந்திட நேர் இழை அறம் புரிந்த அதனால் பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டை நாட்டு முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்தால் | 4.5.5 | 1088. | தாவில் செம்மணி அருவியாறு இழிவன சாரல் பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம் வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் | 4.5.6 | 1089. | குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம் பறவை தாமரை இருந்து இற வருந்துவ பழனம் சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல் | 4.5.7 | 1090. | கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால் தண்டு உணர்க் கொன்றை பொன் சொரி தள வயற்பால் வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயற்பால் கண்டல் முன் துறைக் கரி சொரி வனகலங் கடற்பால் | 4.5.8 | 1091. | தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலைச் சீறூர் பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர் மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் | 4.5.9 | 1092. | குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை மழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம் நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல் | 4.5.10 | 1093. | மல்கும் அப்பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் பல் பெரும் புனம் பயில்வன படர் சிறைத் தோகை சொல்லும் அப்புனங் காப்பவும் சுரி குழல் தோகை | 4.5.11 | 1094. | அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல் மூழ்கிப் போகாச் செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும் மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் | 4.5.12 | 1095. | பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து மாறில் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும் ஆறுசூழ் சடை அண்ணலார் திரு விடைச் சுரமும் கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி | 4.5.13 | 1096 | அம்பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர் வம்புலா மலர்ச் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக் கழுக் குன்றமும் உடைத்தால் கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவங்குறை உளதோ? | 4.5.14 | 1097. | கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்லிடங்கள் நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து கால வேனிலில் கடும் பகல் பொழுதினைப் பற்றிப் பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு | 4.5.15 | 1098. | சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும் பல் பெரும் புனல் கானியாறிடை இடை பரந்து கொல்லை மெல் இணர்க் குருந்தின் மேற் படர்ந்த பூம்பந்தர் முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை | 4.5.16 | 1099. | பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றைக் களவு கொண்டது அளவு எனக் களவலர் தூற்றும் அளவு கண்டவர் குழல் நிறம் கனியும் அக் களவைத் தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று | 4.5.17 | 1100. | மங்கையர்க்கு வாள் விழியிணை தோற்ற மான் குலங்கள் எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர்க் கொடி எங்கும் அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந் தமிழ் உரைக்கும் செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில் | 4.5.18 | 1101. | நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல் மாறில் கங்கை தான் அவர்க்கு மஞ்சனந்தர அணைந்தே ஊறு நீர் தரும் ஒளி மலர்க் கலிகை மா நகரை வேறு தன் பெரு வைப்பு என விளங்கு மாமுல்லை | 4.5.19 | 1102. | வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் வீசு தெண்டிரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி பாசடைத் தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும் பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ | 4.5.20 | 1103. | துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால் பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசைப் போந்தே அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள் பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி | 4.5.21 | 1104. | பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய் போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி | 4.5.22 | 1105. | அனையவாகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் கனை நெடும் புனல் நிறைந்து திண் கரைப் பெருங்குளங்கள் புனை இருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம் போய் வினைஞர் ஆர்ப்பொலி எடுப்ப நீர் வழங்குவ வியன்கால் | 4.5.23 | 1106. | மாறில் வண் பகட்டேர் பல நெருங்கிட வயல்கள் சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன வேறு பல் வினை உடைப் பெரும் கம்பலை மிகுமால் | 4.5.24 | 1107. | வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை பெருங்குலைப்பட விலங்குவ பிறங்கு நீர்ப் பழனம் நெருங்கு சேற்குலம் உயர்த்துவ நீள் கரைப் படுத்துச் சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி | 4.5.25 | 1108. | தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரைத் தவிசின் இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்படை ஊர் கோள் வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு | 4.5.26 | 1109. | ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக் கரும்பு பூங்கரும்பு அயல் மிடைவன பூகம் அப்பூகப் பாங்கு நீள் குலைத் தெங்கு பைங்கதலி வண் பலவு தூங்கு தீங்கனிச் சூத நீள் வேலிய சோலை | 4.5.27 | 1110. | நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும் பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும் மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள் | 4.5.28 | 1111 | தொல்லை நான்மறை முதல் பெரும் கலையொலி துவன்றி இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள் | 4.5.29 | 1112 | தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்கு நதார் தாம் அருள் புரிந்தது நல்வினைப் பயன் செய் மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம் பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும் | 4.5.30 | 1113. | அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின் மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறாம் பொருவில் கோயிலும் சூழ்ந்தப் பூம்பணை மருதம் | 4.5.31 | 1114. | விரும்பு மேன்மையென் பகர்வது விரி திரை நதிகள் அருங்கரைப் பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து பருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர் மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் | 4.5.32 | 1115 | . பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர் தாமருங் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து மா மருங்கு தண்ணீழலின் மருத யாழ் முரலும் காமர் தண் பணைப் புறத்தது கருங்கழி நெய்தல் | 4.5.33 | 1116 | . தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள் சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி ஆய பேர் அளத் தளவர்கள் அளப்பன உப்பு சாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம் | 4.5.34 | 1117 | .கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன் படு மணற் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர் தம் வடு வகிர்க் கண்மங்கையர் குளிப்பன மணற்கேணி | 4.5.35 | 1118 | .கழிப் புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணிய வழிக் கரைப் பொதி பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை விழிக்கு நெய்தலின் விரை மலர்க் கட்சுரும்பு உண்ணக் கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடற்கைதை | 4.5.36 | 1119 | . காயல் வண் கரைப் புரை நெறி அடைப்பன கனி முட் சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும் முண்டகங்கள் ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் தாய முன்றுறைச் சூழல் சூழ் ஞாழலின் தாது | 4.5.37 | 1120 | . வாம் பெருந் திரைவளாக முன் குடி பயில் வரைப்பில் தாம் பரப்பிய கயல்களின் விழிக் கயல் தவிரக் காம்பி நேர் வருந் தோளியர் கழிக் கயல் விலை செய் தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் | 4.5.38 | 1121 | .மருட்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த திருப் பரப்பையும் உடைய அத் திரைக் கடல் வரைப்பு | 4.5.39 | 1122 | .மெய் தரும் புகழ்த் திரு மயிலா புரி விரை சூழ் மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலாப் பை தரும் பணி அணிந்தவர் பதி எனைப் பலவால் நெய்தல் எய்த முன் செய்த அம் நிறை தவம் சிறிதோ | 4.5.40 | 1123 | . கோடு கொண்டு எழும் திரைக் கடல் பவள மென் கொழுந்து மாடு மொய் வரைச் சந்தனச் சினை மிசை வளரும் நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால் ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய | 4.5.41 | 1124 | .மலை விழிப்பன என வயல் சேல் வரைப் பாறைத் தலையுகைப்பவும் தளைச் செறு விடை நெடுங் கருமான் குதிப்பன கரும் பகட்டேர் நிகர்ப்பவுமாய் அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் | 4.5.42 | 1125 | .புணர்ந்த ஆனிரை புற விடைக் குறு முயல் பொருப்பின் அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து மணங்கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரைக்கார் இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் | 4.5.43 | 1126 | .கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள் அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம் | 4.5.44 | 1127 | .அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி இயலும் அன்னமும் தோகையும் எதிர் எதிர் பயில வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு | 4.5.40 | 1128 | .மீளும் ஓதமுன் கொழித்த வெண் தரளமும் கமுகின் பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் தோளும் உழத்தியர் மகளிர் மாறாடி முன் தொகுக்கும் நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள் | 4.5.46 | 1129 | .ஆய நானிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கித் தீய என்பன கனவிலும் நினைவு இலாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ? | 4.5.47 | 1130 | . இவ் வளம் தரு பெரும் திருநாட்டிடை என்றும் மெய் வளந் தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப எவ்வுகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் | 4.5.48 | 1131 | .ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை மான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டு ஊனமில் அறம் அனேகமும் உலகுய்ய வைத்த மேன்மை பூண்ட அப் பெருமையை அறிந்தவா விளம்பில் | 4.5.49 | 1132 | .வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து அருளித் துள்ளு வார் புனல் வேணியர் அருள் செயத் தொழுது தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரிய உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் | 4.5.50 | 1133 | . எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் பெண்ணின் நல்லவள் ஆயின பெருந் தவக் கொழுந்து | 4.5.51 | 1134 | . நங்கை உள் நிறை காதலை அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி 4.5.52
| 1135 . தேவ தேவனும் அது திருவுள்ளஞ் யாவரும் தனை அடைவது மண் மேல் மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு 4.5.53
| 1136 . ஏதமில் பலயோனி எண் பத்து பேதமும் புரந்து அருளும் அக் கருணைப் போது நீர்மையில் தொழுதனள் போதப் மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த 4.5.54
| 1137 . துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி அன்னையாய் உலகு அனைத்தையும் மன்னு கோயில் கொண்டு அருளுவாய் 4.5.55
| 1138 . அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப திங்கள் தங்கிய புரி சடையார்க்குத் எங்கும் நாடவும் திரு விளையாட்டால் பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே 4.5.56
| 1139 . நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி அஞ்செழுத்துமே ஆக ஆளுடைய தஞ்சம் ஆகிய அரும் தவம் புரியத் வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் 4.5.57
| 1140 . கண்ட போதில் அப்பெரும் தவப் வண்டு உலாங் குழல் கற்றை முன் தாழ கொண்ட காதலின் விருப்பளவு இன்றிக் தொண்டையங்கனி வாய் உமை நங்கை 4.5.58
| 1141 . உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன 4.5.59
| 1142 . கொய்த பன்மலர் கம்பை மா நதியில் நெய் தரும் கொழும் தூப தீபங்கள் மெய் தரும்படி வேண்டின எல்லாம் எய்த ஆகம விதி எலாம் செய்தாள் 4.5.60
| 1143 . கரந்தரும் பயன் இது என உணர்ந்து நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு வரம் தரும் பொருளாம் மலை வல்லி சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும் 4.5.61
| 1144 . நாதரும் பெரு விருப்பொடு நயந்து காதல் மிக்கவோர் திரு விளையாட்டில் ஓத மார் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி மீது செல்வது போல் வரக் கம்பை 4.5.62
| 1145 . அண்ணலார் அருள் வெள்ளத்தை விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் உண்ணிலாவிய பதைப்புறு காதலுடன் தண்ணிலா மலர் வேணியினாரைத் 4.5.63
| 1146 . மலைக் குலக் கொடி பரிவுறு பயத்தால் முலைக்குவட்டொடு வளைக் கையால் சிலைத் தனித் திருநுதல் திரு முலைக்கும் கொலைக் களிற்றுரி புனைந்த தம் மேனி 4.5.64
| 1147 . கம்பர் காதலி தழுவ மெய் குழைய உம்பரே முதல் யோனிகள் எல்லாம் எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் வம்புலா மலர் நிறைய விண் பொழியக் 4.5.65
| 1148 . பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு காதில் வெண் குழை கண்டிகை தாழக் ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ் மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு 4.5.66
| 1149 . கோதிலா அமுது அனையவள் முலைக் மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேத காரணராய ஏகம்பர் விரை மலர்ச் ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை 4.5.67
| 1150 . அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும் கொண்ட இற்றை என் பூசனை இன்னும் வண்டு வார் குழல் மலை மகள் கமல வதனம் முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் 4.5.68
| 1151 . மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன ஈறிலாத இப்பதியினுள் எல்லா அறமும் வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல் பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப் 4.5.69
| 1152 . விடையின் மேலவர் மலைமகள் வேண்ட இடையறா அறம் வளர்க்கும் வித்தாக கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்காம் 4.5.70
| 1153 . எண்ண அரும் பெரும் வரங்கள் முன் மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க புண்ணிய திருக் காம கோட்டத்துப் 4.5.71
| 1154 . அலகில் நீள் தவத்து அறப் பெரும் உலகில் வந்து உறு பயன் அறிவிக்க நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் மலர் பெரும் திருக் காம கோட்டத்து 4.5.72
| 1155 . தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் பாங்கு மூன்றுலகத்தில் உள்ளோரும் வாங்கு தெண் திரை வேல்கை மேகலை ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் 4.5.73
| 1156 . அந்தம் இன்றி நல் அறம் புரிந்து வந்து சந்திர சூரியர் மீது வழிக் கொள்ளாத சந்த மாதிர மயங்கி எம் மருங்கும் இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் 4.5.74
| 1157 . கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில் சென்னியிற் பிறை அணிந்தவர் விரும்பும் மன்னு வெங் கதிர் மீது எழும் போதும் தன்னிழல் பிரியாத வண் காஞ்சித் தானம் 4.5.75
| 1158 . மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து முறைமையால் வரும் பூசனை செய்ய நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் 4.5.76
| 1159 . மன்னு கின்ற அத் திருநகர் வரைப் பின் துன்னும் யானையைத் தூற்றில் வாழ் முயல் தன்னிலத்து நின்று அகற்றுதல் செய்யும் எந் நிலைத்தினும் காண்பரும் இறவாத் 4.5.77
| 1160 . ஈண்டு தீவினை யாவையும் நீக்கி வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் நீண்ட காப்புடைத் தீர்த்தம் மூன்று உலகில் ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமரர் 4.5.78
| 1161 . தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும் நீள வார் புனல் குடதிசை ஓடி நீர் நாள் அலர்ந்து செங்குவளை பைங் கமலம் காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் 4.5.79
| 1162 . சாயை முன் பிணிக்கும் கிணறு மாயை இன்றி வந்துள்ளடைந்தார்கள் மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும் ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு 4.5.80
| 1163 . அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர் மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர்ப் நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்றுத் தரையின் எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் 4.5.81
| 1164 . சத்தி தற் பரசித்தி யோகிகளும் நித்தம் எய்திய ஆயுள் மெய்த் தவர்கள் சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் வித்தகக் கரி மேற் கொளும் காரி மேவும் 4.5.82
| 1165 . வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் அந்தமில் அறம் புரப்பவள் கோயில் எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை 4.5.83
| 1166 .தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் தீண்டில் யாவையும் செம் பொன் ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் 4.5.84
| 1167 .என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில் வன் திறற்புலி இமயமால் வரை மேல் சென்று வேடன் முன் கண்டு உரை செய்யது குன்று போலும் மா மதில் புடை போக்கிக் 4.5.85
| 1168 . தண் காஞ்சி மென் சினைப் பூம் கொம்பர் பண் காஞ்சி இசை பாடும் பழன வேலிப் திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த வண் காஞ்சி அல்குல் மலை வல்லி காக்க வளர் 4.5.86
| 1169 . கொந்தலர் பூங் குழல் இமயக் கொம்பு மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த அந்தமில் சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் 4.5.87
| 1170 .ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும் ஓங்கு நிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய தீங்கு நெறி அடையாத தடையும் ஆகிச்செந் தாங்குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட 4.5.88
| 1171 .மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த கூறுபடு நவ கண்டம் அன்றி மல்கக் கொண்ட வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன 4.5.89
| 1172. பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து தோகையர் தம் குழாம் அலையத் தூக்கு முத்தின் மாகமிடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு மேகமிடை கிழித்து ஒழுகும் தெய்வக் கங்கை 4.5.90
| 1173. . கிளர் ஒளிச் செங்கனக மயந்தானாய் கொள அமைத்து மீது ஒருபால் அன்ன சாலை அளவில் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு 4.5.91
| 1174. மின் பொலி பன் மணி மிடைந்த தவள பொன் புரையும் செக்கர் நிறப் பொழுது தோன்றும் வன் புலியின் உரியாடைத் திரு ஏகம்பர் வளர்சடையும் அன்பு உருகி மெய் பொழியக் கண்ணீர் வாரும் 4.5.92
| 1175. முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய நிகரில் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே நகில் உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்த 4.5.93
| 1176. பொன் களப மாளிகை மேல் முன்றில் வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் நற்கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை 4.5.94
| 1177. பூ மகளுக்கு உறையுள் எனும் மா மகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண் தூமணிப் பொன் புனை நாளத்துருத்தி வீசும் காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் 4.5.95
| 1178. இமம் மலிய எடுத்த நெடு வரைகள் சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர் அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு 4.5.96
| 1179. அரவ நெடுந் தேர் வீதி அருகு மாடத்து விரவு மரகதச் சோதி வேதித் திண்ணை குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கித் தோன்றும் 4.5.97
| 1180. வேம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்குந் பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப் 4.5.98
| 1181. அருமறை அந்தணர் மன்னும் பெரு மறுகு தொறும் வேள்விச் சாலை வருமுறைமை அழைக்க விடு மந்திரம் எம் திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் 4.5.99
| 1182. அரசர் குலப் பெரும் தெருவும் புரசை மதக் கரிகளொடு புரவி ஏறும் விரை செய் நறுந்தொடை அலங்கல் குமரர் நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும் 4.5.100
| 1183. வெயில் உமிழும் பன்மணிப் |