பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 4.03. உருத்திர பசுபதி நாயனார் புராணம்
4.03. உருத்திர பசுபதி நாயனார் புராணம்
1036 |
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம் மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டுக் குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித் தலத்தின் மேம் படு நலத்தது பெருந் திருத் தலையூர் | 4.3.1 | 1037 | வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர் தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும் | 4.3.2 | 1038 | அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத் துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார் | 4.3.3 | 1039 | ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும் தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார் | 4.3.4 | 1040 | கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும் நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி | 4.3.5 | 1041 | தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத் தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார் கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் | 4.3.6 | 1042 | அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே திருமலர்ப் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் | 4.3.7 | 1043 | காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம் தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார் | 4.3.8 | 1044 | நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப் பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம் கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற | 4.3.9 | 1045 | அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால் பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம் செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் | 4.3.10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 4.03. உருத்திர பசுபதி நாயனார் புராணம் , உருத்திர, புராணம், அளிப்பன, உருத்திரம், திருமுறை, நாயனார், பசுபதி, எல்லையில், அன்பினில், பசுபதியார், சேவடி, மருங்கு, புனல், பெரிய, பன்னிரண்டாம், ஓங்கிய, பெரும், அருமறை, திறம்