ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 19
2 எபிரேயர்களுக்குப் புறப்பட்டுப்போக விடை கொடுத்துவிட்டு, அவர்களை வெளியேறும்படி விரைவு படுத்திய அதே எகிப்தியர் பிறகு தங்கள் மனத்தை மாற்றிக் கொண்டு அவர்களைப் பின்னாலேயே துரத்தி வருவர் என்பதை அறிந்திருந்தார்.
3 எகிப்தியர் தங்களுள் செத்தவர்களின் கல்லறைகளில் புலம்பி, அவர்களுக்காக இன்னும் துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கையிலேயே மற்றொரு மடமையான தீர்மானம் செய்து கொண்டு, முன்பு வெளியேறும்படி யாரை மன்றாடி வற்புறுத்தினார்களோ அவர்களையே தப்பியோடும் அடிமைகளை விரட்டுவது போல் பின்னாலேயே துரத்திக் கொண்டு போனார்கள்.
4 அவர்களுடைய நடத்தைக்குப் பொருத்தமான விதியே அவர்களை இந்த முடிவுக்கு வரும்படி செய்தது@ ஏற்கெனவே நடந்ததையெல்லாம் மறக்கச் செய்தது@ அவர்களுடைய வேதனைகளில் குறையாயிருந்த தண்டனையை நிறைவு செய்யவே இவ்வாறு நடந்தது.
5 இவ்வாறு உம் மக்கள் வியப்புக்குரிய வகையில் கடலைக் கடந்தனர்@ அவர்களின் பகைவர்களோ புதுமையான வகையில் சாவைக் கண்டனர்.
6 உம் பிள்ளைகள் இடையூறின்றிக் காக்கப்படும்படிக்கு உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து படைப்பு முழுவதும் தன் இயல்பில் புதிதாக உருப்பெற்றது.
7 அவர்களது பாசறைக்குக் கார்மேகம் நிழல் கொடுத்தது@ முன்பு தண்ணீரிருந்த இடத்தில் இப்பொழுது உலர்ந்த தரை தோன்றிற்று@ செங்கடலில் செம்மையான வழியும் மோதியடிக்கும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின.
8 உமது கையால் காப்பாற்றப்பட்டவர்கள் ஓரினமாய் அவ்வழியே கடந்து சென்றனர்@ வியப்புக்குரிய விந்தைச் செயல்களைக் கண்டு கொண்டே போயினர்.
9 நல்ல மேய்ச்சலைக் கண்ட குதிரைகளைப் போல் மகிழ்ந்து, ஆட்டுக் குட்டிகளைப் போல் துள்ளிக் கொண்டு தங்களை மீட்ட ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்தார்கள்@
10 தாங்கள் அந்நியராகக் குடியிருந்த நாட்டில் நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்@ விலங்கினங்களுக்குப் பதிலாகத் தரையானது கொசுக்களைத் தோற்றுவித்ததையும், ஆறுகளிலிருந்து மீன்களுக்குப் பதிலாகத் தவளைக் கூட்டங்கள் புறப்பட்டதையும் அவர்கள் மறக்கவில்லை.
11 பின்பு சுவையான இறைச்சியுணவு வேண்டுமென அவர்கள் விருப்பங் கொண்டு கேட்ட போது, ~புதியதொரு வகையில் பறவைகள் உண்டாவதை அவர்கள் கண்டார்கள்.
12 அவர்களுடைய விருப்பத்தை நிறைவு செய்யக் கடலிலிருந்து காடைகள் எழுந்து வந்தன! இடியோசையின் பேரடையாளங்கள் முன் செல்ல பாவிகள்மீது தண்டனைகள் விழுந்தன@ தாங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நீதியான முறையில் தான் துன்புற்றார்கள்.
13 ஏனெனில் அந்நியர்கள் மீது மிகுதியான வன்மத்தை எகிப்தியர் கொண்டிருந்தார்கள். சோதோம் நகரத்தார் அந்நியர்கள் தங்களிடம் வந்த போது அவர்களுக்கு இடம் கொடுக்க மறுத்தார்கள்@ இந்த எகிப்தியரோ தங்களுக்கு நன்மை செய்த விருந்தினரை அடிமைகளாக ஆக்கிவிட்டார்கள்.
14 அதுமட்டுமன்று@ முன் சொல்லப்பட்டவர்கள் முதலிலிருந்தே அந்நியர்களிடம் வெறுப்புக் கொண்டிருந்தார்கள்- அதற்காக அவர்களுக்குத் தண்டனை கிடைக்காமற் போகாது-
15 ஆனால் இவர்கள் அப்படியில்லையே: முதலில் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் அந்நியரை ஏற்றுக் கொண்டு விட்டு, அவர்களையும் தங்களைப் போல் சம உரிமையுள்ளவர்களாய் ஆக்கிய பிறகும் கொடிய வேதனைகள் தந்து அவர்களைத் துன்புறுத்தினார்கள்.
16 முன் சொன்னவர்கள் நீதிமானின் கதவருகில் ஆனது போலவே, இவர்களும் கவ்விய காரிருளால் சூழப்பட்டுக் கண்பார்வையை முற்றிலும் இழந்து போய்த் தத்தம் கதவைத் தடவிப் பார்த்து வழி தேட முயன்றனர்.
17 கின்னரத்தில் சுருதிகள் தாங்கள் மாறாமலே இருந்து கொண்டு பண்ணின் இயல்பை மாற்றுவது போலவே, இயற்கையின் ஆற்றல்களும் செய்தன. நிகழ்ந்தவற்றைக் கண்டு இவ்வுண்மையைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
18 நிலத்தில் வாழும் விலங்குகள் நீர்வாழ் விலங்குகளாக மாறின@ நீந்தித் திரியும் உயிரினங்கள் நிலத்திற்கு ஏறிவந்தன.
19 தண்ணீரிலும் நெருப்பு தன் இயல்பான ஆற்றலைக் கொண்டிருந்தது@ தண்ணீரும் தீயணைக்கும் தன் இயல்பை மறந்து விட்டது.
20 மாறாக, நெருப்புத் தணல் தனக்குள் நுழைந்த உயிரினங்களின் மென்மையான சதையைக் கூடச் சுட்டெரிக்காமல் விட்டு விட்டது@ பனிக்கட்டியைப் போல மிக எளிதில் உருகிப் போகும் அந்த விண்ணக உணவையும் நெருப்பு உருக்கவில்லை. ஆம், ஆண்டவரே, எல்லா வகையிலும் உம் மக்களை நீர் மேன்மைப்படுத்தினீர்@ மகிமைப்படுத்தினீர்@ எக்காலத்திலும் எவ்விடத்திலும் நீர் அவர்களைப் புறக்கணிக்காமல் துணை நின்றீர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, கொண்டு, ஏற்பாடு, போல், பழைய, ஆகமம், தாங்கள், முன், எகிப்தியர், வகையில், அவர்களுடைய, திருவிவிலியம், செய்த, போது, பதிலாகத், ஆன்மிகம், அந்நியர்கள், கொண்டிருந்தார்கள், நெருப்பு, நீர், இயல்பை, போலவே, விட்டு, கண்டு, ஏனெனில், இன்னும், முன்பு, பின்னாலேயே, அவர்களைப், அவர்களை, ஏற்கெனவே, பிறகு, வியப்புக்குரிய, இவ்வாறு, நிறைவு, செய்தது@, வெளியேறும்படி