தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 5
2 ஆனால் அப்பணத்தை மட்டும் எப்படித் திரும்பப் பெறுவது என்று அறியேன். கபேலுசுக்கு என்னைத் தெரியாது@ எனக்கு அவனைத் தெரியாது. அவன் என்னை அறிந்துகொள்ளும் பொருட்டு நான் அவனுக்கு என்ன அடையாளம் காட்ட முடியும்? அதுமட்டுமன்று@ அவ்வூருக்குப் போகிற வழி முதலாய் எனக்குத் தெரியாதே" என்று மறுமொழி சொன்னான்.
3 அதைக் கேட்ட அவனுடைய தந்தை அவனைப் பார்த்து, "அவன் எழுதிக் கொடுத்த கடன் சீட்டு என்னிடம் இருக்கிறது. நீ அதை அவனுக்குக் காண்பித்தாலே போதும். அவன் தாமதமின்றி உன்னிடம் பணத்தைக் கொடுத்து விடுவான்.
4 ஆயினும் நான் உயிரோடுடிருக்கும் போதே நீ அவனிடம் சென்று கொடுத்த கடனைப் பெற்று வரும் பொருட்டு இப்போதே நம்பிக்கைக்குரிய ஒருவனைத் தேடிப்பார். உன்னோடு வருவதற்கு அவன் கேட்கும் கூலியையும் விசாரித்து வா" என்றார்.
5 எனவே, தோபி புறப்பட்டுப்போய், தன் இடையை வரிந்து கட்டிக்கொண்டு பயணத்துக்குத் தயாராயிருக்கிறவனைப் போல் நின்று கொண்டிருந்த அழகிய இளைஞர் ஒருவரைக் கண்டான்.
6 அவர் கடவுளின் தூதர் என்று அறியாத தோபி அவரை வாழ்த்தி, "தம்பி, நீ யார்?" என்று வினவ, அவர், "இஸ்ராயேல் மக்களுள் ஒருவன் நான்" என்றார்,
7 தோபி மறுபடியும், "மோதியருடைய நாட்டுக்குப் போகும் வழி உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.
8 அதற்கு அவர், "தெரியும்@ பலமுறை நான் அவ்வழியே போய் வந்நிருக்கிறேன். ஏக்பாத்தானிசு மலை மீதுள்ள மேதியருடைய இராஜேசு நகருக்கும் போயிருக்கிறேன். அங்கே நம் சகோதரரில் ஒருவனான கபேலுசு என்பவன் இருக்கிறான். நான் அவன் வீட்டிலே தங்கியுமிருக்கிறேன்" என்றார்.
9 அதைக்கேட்டுத் தோபி, "தயவுசெய்து சற்று நேரம் இங்கேயே இரு@ நான் போய் என் தந்தையிடம் இவற்றைத் தெரிவித்து விட்டு வருகிறேன்" என்றான்.
10 தோபி போய்த் தன் தந்தைக்கு அவற்றை எல்லாம் அறிவித்தான். இதைக் கேட்ட தந்தை வியப்புற்று அவரைத் தம்மிடம் அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.
11 எனவே அவரும் வந்து, "மகிழ்ச்சி உம்மோடு என்றும் இருப்பதாக" என்று தொபியாசை வாழ்த்தினார்.
12 அதற்குத் தொபியாசு, "இருளில் உழன்றுக்கொன்டு விண்ணக ஒளியைக் காணாதிருக்கும் எனக்கு என்ன மகிழ்ச்சி!" என்று சொன்னார்.
13 அதற்கு அவர், "திடமாயிரும்@ கடவுள் விரைவில் உமக்கு நலம் அளிப்பார்" என்றார்.
14 தொபியாசு அவரை நோக்கி, "மேதியருடைய இராஜேசு நகரிலிருக்கிற கபேலுசிடம் என் மகனைக் கூட்டிச்செல்ல உன்னாலே கூடுமா? நீ திரும்பி வந்த பின் உனக்குக் கூலி தருவேன்" என்றார்.
15 கடவுளின் தூதர் அவரைப்பார்த்து, "நான் அவனை அழைத்துப் போய்த் திரும்பவும் உம்மிடம் கூட்டிவருவேன்" என்று மறுமொழி கூறினார்.
16 அதைக் கேட்ட தொபியாசு, "தம்பி, நீ யார்? எந்தக் குலத்தைச் சேர்ந்தவன்? தயவு செய்து சொல்" என, தூதர் அவரை நோக்கி, "உம் மகனுடன் போக ஒரு கூலியாளைத் தானே நீர் தேடுகிறீர்?
17 கூலியாளின் குலத்தைப் பற்றி உமக்குக் கவலை ஏன்? ஆயினும் நான் உமக்கு மனவருத்தம் கொடுக்க விரும்பவில்லை.
18 நான் பெரிய அனானியாசின் மகன்@ என் பெயர் அசாரியாசு" என்றார்.
19 அதற்குத் தொபியாசு, "நீ பெரிய குடும்பத்தில் தோன்றியவன். உனது குலத்தைப் பற்றி நான் அறிய விரும்பினதற்காகக் கோபம் கொள்ள வேண்டாம்" என்று வேண்டினார்.
20 கடவுளின் தூதர் அவரை நோக்கி, "நான் உம் மகனை நலமே கூட்டிப் போய்த் திரும்பவும் நலமே உம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்றார்.
21 அதற்குத் தொபியாசு, "நல்லது, நலமே போய் வாருங்கள். உங்கள் பயணத்தின் போது கடவுள் உங்களோடு இருப்பாராக! அவருடைய தூதரும் உங்களுக்குத் துணையாய் இருப்பாராக!" என்று சொல்லி வாழ்த்தினார்.
22 பயணத்திற்குத் தேவையான அனைத்தும் தயாரனபின், தோபி தன் தாய் தந்தையிடம் விடை பெற்றான். இருவரும் புறப்பட்டு வழி நடந்தனர்.
23 அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், அவனுடைய தாய் கண்ணீர் விட்டு அழுது, "நமது முதிர்ந்த வயதில் நமக்கு ஊன்றுகோலாய் இருக்க வேண்டிய மகனை நம்மை விட்டுத் தூரமாய்ப் போகும்படி ஏன் அனுப்பினீர்?
24 பணத்தை வாங்குவதற்காக நீர் அவனை அனுப்பியிருக்கிறீரே@ அப்பணம் ஒருபோதும் இல்லாதிருந்திருந்தால் எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்!
25 ஏனெனில் நமது ஏழ்மை நிலையே நமக்குப் போதுமென்று இருந்திருக்க வேண்டும்! நம் மகன் நம்மோடு இருப்பதே நமக்குப் பெரும் செல்வம் என்று எண்ணியிருந்திருக்க வேண்டும்!" என்றாள்.
26 அதற்குத் தொபியாசு, "அழாதே, நம் மகன் நலமே சென்று நலமே நம்மிடம் திரும்பி வருவான்@ நீயும் அவனைக் கண்ணாரக் காண்பாய்.
27 ஏனெனில், ஆண்டவருடைய நல்ல தூதர் அவனோடு இருக்கிறார் என்றும், நம் மகன் நம்மிடம் மகிழ்ச்சியோடு திரும்பும் பொருட்டு அவரே வேண்டிய எல்லாவற்றையும் நல்ல முறையிலே அவனுக்குச் செய்து முடிப்பார் என்றும் நான் நம்புகிறேன்" என்றார்.
28 இவ்வார்த்தைகளைக் கேட்ட தோபியின் தாய் அழுவதை நிறுத்தி அமைதியுற்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு, ", நான், தொபியாசு, என்றார், தோபி, ஏற்பாடு, நலமே, தூதர், அவன், அதற்குத், அவர், அவரை, நோக்கி, கேட்ட, பழைய, போய்த், போய், கடவுளின், என்றும், தாய், மகன், நீர், செய்து, பொருட்டு, ஆகமம், திரும்பவும், கடவுள், உம்மிடம், உமக்கு, நல்ல, குலத்தைப், அவனை, திரும்பி, பற்றி, ஏனெனில், இருப்பாராக, வேண்டிய, மகனை, நமக்குப், நமது, பெரிய, வேண்டும், நம்மிடம், அதற்கு, மறுமொழி, அதைக், அவனுடைய, தந்தை, என்ன, எனக்கு, திருவிவிலியம், ஆன்மிகம், எல்லாம், கொடுத்த, ஆயினும், தந்தையிடம், விட்டு, வந்து, மகிழ்ச்சி, இராஜேசு, மேதியருடைய, சென்று, தம்பி, யார், வாழ்த்தினார்