தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 10
2 அவன் அங்கே நிறுத்தப்படக் காரணம் என்ன? கபேலுசு தான் செத்து விட்டானோ? அதனால் பணம் கொடுக்க யாருமில்லாமல் போயிற்றோ?" என்று தமக்குள் சொல்லி, தம் மனைவி அன்னாளோடு சேர்ந்து மிகவும் வருந்தினர்.
3 தங்கள் மகன் குறித்த காலத்திற்குள் தங்களிடம் திரும்பி வராதது பற்றி இருவருமே கண்ணீர் விட்டு அழத் தொடங்கினர்.
4 அவனுடைய தாய் ஆறாத்துயரில் முழ்கி, கண்ணீர் சிந்தினாள். "ஐயோ! மகனே! நாங்கள் உன்னைப் பிற நாட்டுக்குப் போகும்படி ஏன் அனுப்பினோம்? எங்கள் கண்ணொளியும், முதுமையின் ஊன்றுகோலும், வாழ்வின் ஆறுதலும், எங்கள் சந்ததி பலுகிப்பெருகும் என்ற நம்பிக்கையும் நீயே அன்றோ!
5 நீ தானே எங்களுக்கு எல்லாம். அப்படியிருக்க நாங்கள் உன்னைத் (தூர நாட்டிற்கு) அனுப்பி வைத்தது எங்கள் குற்றம் அன்றோ?" என்று புலம்பி அழுவாள்.
6 தொபியாசு அவளைப் பார்த்து, "அமைதியாய் இரு@ ஏன் கலங்குகிறாய்? நம் மகன் நலமாய்த் தான் இருப்பான். ஏனெனில் அவனோடு நாம் துணைக்கு அனுப்பி வைத்த மனிதன் நம்பிக்கைக்குரியவன்" என்று சொல்வார்.
7 அப்படியிருந்தும் அவள் ஒரு விதத்திலும் ஆறுதல் கொள்ளாமல் நாள்தோறும் வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்துத் தொலையில் அவன் வருவதைக் காணலாம் என்று, அவன் வரக் கூடிய வழிகளை எல்லாம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பாள்.
8 இதற்கிடையில், இரகுவேல் தம் மருமகனைப் பார்த்து, "நீ இங்கேயே தங்கியிரு. நீ நலமாயிருக்கிறாய் என்று ஆள் அனுப்பி உன் தந்தை தொபியாசுக்குச் செய்தி சொல்லச் சொல்வேன்" என்றார்.
9 அதற்குத் தோபி, "என் தாயும் தந்தையும் நாட்களை எண்ணி எண்ணி ஆறாத்துயரால் மனம் நொந்து போயிருப்பார்கள். இது உண்மை" என்றான்.
10 இரகுவேல் தோபியை எவ்வளவோ கெஞ்சி மன்றாடியும் இவன் ஒருவிதத்திலும் இணங்காததைக் கண்டு சாராளையும், தமக்குள்ள ஊழியர், வேலைக்காரிகள், ஆடுமாடு, ஒட்டகம், பசு மாடு, சொத்து முதலியவற்றில் சரி பாதியையும் ஏராளமான பணத்தையும் அவனுக்குக் கொடுத்து, தோபியைப் பத்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் அனுப்பிவைத்தார்.
11 கடவுளின் புனித தூதர் வழியில் உங்களோடு இருந்து சுகத்தோடு உங்களைக் கூட்டிக் கொண்டு போவாராக! உங்கள் தாய் தந்தையர் எல்லா விதத்திலும் நலமே இருக்கக் கண்டு நீங்கள் களிகூர்வீர்களாக! நான் சாகுமுன் உங்கள் பிள்ளைகளைக் காணும் பேறு எனக்குக் கிடைப்பதாக!" என்று வாழ்த்தி வழியனுப்பினார்.
12 சாராளின் தாய் தந்தையர் தங்கள் மகளைக் கட்டி முத்தமிட்டனர்@
13 மாமன், மாமியை மதிக்கவும், கணவனுக்கு அன்பு செய்யவும், குடும்பத்தை நலமுற நடத்தவும், வீட்டை முறையாக ஆளவும், தன் மேல் எவனும் குற்றம் சாட்டிப் பேசாத விதமாய் ஒழுக்கமுடன் நடக்கவும் வேண்டும் என்று தங்கள் மகளுக்கு அறிவுரை கூறி விடை கொடுத்து அனுப்பினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு, ", தொபியாசு, ஏற்பாடு, அவன், பழைய, தாய், அனுப்பி, எங்கள், ஆகமம், மகன், தங்கள், பார்த்து, குற்றம், எண்ணி, உங்கள், தந்தையர், கொடுத்து, கண்டு, இரகுவேல், விதத்திலும், கண்ணீர், தோபி, ஆன்மிகம், புனித, திருவிவிலியம், தந்தை, என்ன, அன்றோ, நாங்கள், தான், எல்லாம்