சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 94
2 புகழ்ப்பாக்கள் இசைத்துக் கொண்டு அவர் திருமுன் செல்வோம்: இன்னிசைப் பாடல்களுடன் அவர் முன்னிலையில் அகமகிழ்வோம்.
3 ஏனெனில், ஆண்டவர் மகத்துவமிக்க கடவுள்: தேவர் அனைவருக்கும் பேரரசர்.
4 பூமியின் ஆழ்ந்த பகுதிகள் அவர் கையில் உள்ளன. உன்னத மலைகளும் அவருக்கு உரியவையே.
5 கடலும் அவருடையதே, அவரே அதைப் படைத்தவர்: உலர்ந்த தரையும் அவருடையது, அவர் கரங்களே அதை உருவாக்கின.
6 வாருங்கள் ஆராதிப்போம், தெண்டனிடுவோம், வணங்குவோம்: நம்மைப் படைத்த ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம்.
7 அவரே நம் கடவுள், நாமோ அவரால் மேய்க்கப்படும் மக்கள், அவர் அரவணைப்பிலுள்ள மந்தை: இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களா? அக்குரல் கூறுவதாவது:
8 அன்று மெரிபாவிலும் பாலை வெளியில் மாசாவிலும் நிகழ்ந்ததுபோல், உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தனர்: என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதனைக்குட்படுத்தினர்.
10 நாற்பது ஆண்டளவாக இற்த மக்களை நான் பொறுத்துக் கொண்டேன்: தவறிழைக்கும் இதயமுள்ள மக்கள் இவர்கள் என் வழிகளை அறியவில்லை.
11 எனவே என் இளைப்பாற்றியை அடைய மாட்டார்கள் என்று, சினமேலீட்டால் சபதம் செய்தேன்".
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, அவர், ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், அவரே, உங்கள், என்னைச், கடவுள், மக்கள், அவருக்கு, திருவிவிலியம், ஆன்மிகம், வாருங்கள், பாடுவோம், ஆண்டவர்