சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 9
2 உன்னதமானவரே, உம்மை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: உம் பெயருக்குப் புகழ் பாடுவேன்.
3 ஏனென்றால், என் எதிரிகள் பின்னடைந்து போயினர்: உம் திருமுன்னே தடுமாறி ஒழிந்து போயினர்.
4 ஏனெனில், நீர் என் வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்க முன்வந்தீர்: நேர்மையுள்ள நீதிபதியாய் உம் அரியணையில் அமர்ந்தீர்.
5 புற இனத்தாரை அதட்டினீர், தீயோரை அழித்துவிட்டீர்: அவர்களுடைய பெயரையே அடியோடு எடுத்துவிட்டீர்.
6 எதிரிகளின் நகரங்களைத் தரைமட்டமாக்கினீர், அவர்கள் தொலைந்து போயினர், தலையெடுக்காமல் ஒழிந்தே போயினர்: அவர்களுடைய நினைவே இல்லாமற் போய்விட்டது.
7 ஆண்டவரோ என்றும் தம் அரியணையில் அமர்ந்துள்ளார்: நீதி வழங்கத் தம் அரியணையை நிறுவியுள்ளார்.
8 அவர் தாமே உலகினர்க்கெல்லாம் நீதியுடன் தீர்ப்புக் கூறுவார்: நேர்மையோடு மக்களனைவர்க்கும் நீதி வழங்குவார்.
9 ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் அடைக்கலமாயிருப்பார்: இடுக்கண் நேரும் போதெல்லாம் ஏற்ற சரண் அவரே.
10 உம் பெயரை அறிந்தோர் உம்மீது நம்பிக்கை கொள்வர்: உம்மைத் தேடுவோரை நீர் கைநெகிழ்வதில்லை, ஆண்டவரே.
11 சீயோனில் உறையும் ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: மக்களினங்களிடையே அவருடைய அருஞ் செயல்களை அறிவியுங்கள்.
12 இரத்தப் பழிவாங்கும் அவர் அவர்களை நினைவில் கொண்டுள்ளார்: எளியோரின் கூக்குரலைக் கேட்க மறவார்.
13 ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்: மரண வாயிலிலிருந்து என்னைக் கைதூக்கிவிடுபவரே, என் எதிரிகளின் கையில் நான் படும் துன்பத்தைப் பாரும்.
14 அப்போது சீயோன் நகர வாயில்களில் நான் உம் புகழ்ச்சிகளைச் சாற்றுவேன்: நீர் எனக்களித்த உதவியை நினைத்து அக்களிப்பேன்.
15 புறவினத்தார் தாங்கள் வெட்டிய குழியில் தாங்களே விழுந்தனர்: அவர்கள் மறைவாக வைத்த கண்ணியில் அவர்களுடைய கால்களே சிக்கிக்கொண்டன.
16 ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தினார், நீதி வழங்கினார்: தான் செய்த செயல்களிலேயே பாவியானவன் அகப்பட்டுக் கொண்டான்.
17 பாவிகள் கீழுலகுக்குப் போய் ஒழிவார்களாக: கடவுளை மறக்கும் புற இனத்தார் அனைவரும் அங்ஙனமே ஒழிவார்களாக.
18 ஏழைகளை இறுதி வரை மறந்து போகமாட்டார் ஆண்டவர்: எளியோர் அவர் மேல் கொண்ட நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது.
19 ஆண்டவரே எழுந்தருளும், மனிதனின் கை ஒங்கவிடாதேயும்: உம் திருமுன் புற இனத்தார் எல்லாருக்கும் தீர்ப்பு வழங்கப்படட்டும்.
20 ஆண்டவரே அவர்கள் அனைவரையும் திகிலுறச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்று அவர்கள் உணரட்டும்.
21 ஆண்டவரே, ஏன் தொலைவிலுள்ளீர்? நெருக்கடியான வேளையில் ஏன் ஒளிந்து கொள்கிறீர்?
22 தீயோர் செருக்குற, எளியவரோ அவதிப்படுகிறார்கள்: அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளில் எளியோர் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்.
23 தன் தீய நாட்டத்தைப்பற்றி பாவியானவன் பெருமை கொள்கிறான்: பேராசைக்காரன் ஆண்டவரைப் பழிக்கிறான், புறக்கணிக்கிறான்.
24 கடவுளே இல்லை, எங்கே பழிவாங்கப்போகிறார்!" என்று தீயவன் செருக்குடன் சொல்கிறான்: இதுவே அவன் நினைவாயிருக்கிறது.
25 அவன் செய்யும் முயற்சிகள் எபபோதும் வெற்றிகரமாக முடிகின்றன: உம் தீர்ப்புகள் அவன் மனத்திற்குச் சிறிதும் எட்டாதவை@ தன் எதிரிகளையெல்லாம் அவன் புறக்கணிக்கிறான்.
26 யாரும் என்னை அசைக்க முடியாது: தலைமுறை தலைமுறையாக நான் இன்பமாகவே வாழ்வேன்!" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
27 அவன் பேசுவதெல்லாம் சாபனையும் கபடமும் வஞ்சகமுமே: அவன் நாவில் ஒலிப்பது தீமையும் இன்னலுமே.
28 சிற்றூர்களுக்கருகில் கண்ணி வைத்துப் பதுங்கியிருப்பான், மறைவான இடங்களில் குற்றமற்றவர்களைக் கொலை செய்கிறான்: எளியவர்களுக்குத் தீமை செய்வதிலேயே அவன் கண்ணாயிருக்கிறான்.
29 புதரில் பதுங்கியிருக்கும் சிங்கம்போல அவன் மறைவாகப் பதுங்கிக்கிடந்து, எளியவரைப் பிடிக்கக் கண்ணி வைக்கிறான்: எளியோரைத் தன் வலையில் விழச்செய்து பிடித்துக்கொள்கிறான்.
30 எளியவர் மீது பாய்வதற்காகத் தரை மீது படுத்துப் பதுங்கிக்கிடக்கிறான்: அவனுடைய கொடுமையால் எளியோர் வீழ்ச்சியுறுகின்றனர்.
31 கடவுள் மறந்துவிட்டார், தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்: ஒருகாலும் பார்க்கமாட்டார்" என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.
32 ஆண்டவராகிய இறைவா, எழுந்தருளும், உம் கரத்தை உயர்த்தும்: எளியோரை மறவாதேயும்.
33 கெட்டவர்கள் கடவுளைப் புறக்கணிப்பதேன்? "அவர் பழிவாங்க நினைக்கமாட்டார்" என்று தமக்குள் சொல்லிக் கொள்வதேன்?
34 ஆனால் ஆண்டவரே, நீர் எல்லாம் பார்க்கிறீர்! துன்புறுவோரையும் வேதனைப்படுவோரையும் நீர் கவனித்துக் கொள்கிறீர்: அவர்களை உம்மிடம் ஏற்றுக்கொள்கிறீர்@ எளியவன் தன்னை உம்மிடம் ஒப்படைக்கிறான்@ அநாதைக்கு நீரே துணை.
35 பாவிகள், தீமை செய்வோர் இவர்களுடைய பலத்தை நொறுக்கிவிடும்: இவர்களுடைய அக்கிரமத்திற்கேற்பப் பழிவாங்கும், அவ்வக்கிரமம் தொலைந்தே போகட்டும்.
36 ஆண்டவர் என்றென்றும் அரசராவார்: அவருடைய நாட்டினின்று புறவினத்தார் ஒழிந்துபோயினர்.
37 அநாதைகளுக்கும் அவதியுறுவோர்க்கும் நீதி வழங்கவும், உலகைச் சார்ந்த மனிதர் இனி அச்சம் விளைவிக்காதிருக்கவும்,
38 தாழ்வுற்றோருடைய மன்றாட்டை ஆண்டவரே, நீர் கேட்டருளினீர்: அவர்களுடைய உள்ளத்திற்கு ஊக்கமளித்து அவர்களுக்குச் செவிசாய்த்தீர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, அவன், ஆண்டவரே, நீர், நீதி, ஏற்பாடு, அவர்களுடைய, ஆண்டவர், அவர், போயினர், நான், பழைய, செய்யும், சங்கீதங்கள், எளியோர், ", எழுந்தருளும், கொள்கிறீர், கொள்கிறான், புறக்கணிக்கிறான், தீமை, உம்மிடம், இவர்களுடைய, சொல்லிக், மீது, கண்ணி, தனக்குள், அவர்களை, அரியணையில், எதிரிகளின், அக்களிப்பேன், நினைத்து, திருவிவிலியம், ஆன்மிகம், நம்பிக்கை, அவருடைய, பாவிகள், ஒழிவார்களாக, பாவியானவன், புறவினத்தார், பழிவாங்கும், இனத்தார்