சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 64
2 மன்றாட்டுகளுக்குச் செவிசாய்ப்பவரே, பாவங்களினிமித்தம் மனிதன் ஒவ்வொருவனும் உம்மிடம் வந்தாக வேண்டும்.
3 நாங்கள் செய்த பாவங்கள் எங்கள் மீது பெரும் சுமையாயுள்ளன: நீரோ அவற்றை மன்னிக்கின்றீர்.
4 நீர் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ளும் மனிதன் பேறு பெற்றவன்: உம் ஆலய முற்றங்களில் அவன் உறைந்திடுவான்.உமது இல்லத்தில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோமாக: உமது ஆலயத்தின் புனிதம் எமக்கு நிறைவளிப்பதாக.
5 எம் மீட்பாராகிய இறைவா, வியத்தகு அருங்குறிகளால் உமது நீதி நேர்மையைக் காட்டி எம் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறீர்@ உலகின் கடையெல்லைகளில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் நீரே நம்பிக்கை: தொலைவிலுள்ள தீவுகளில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கை.
6 உமது வல்லமையால் மலைகளுக்கு உறுதியளிக்கின்றீர்@ வல்லமையை உம் இடைக்கச்சையாகக் கொண்டுள்ளீர்.
7 கடலின் இரைச்சலை அடக்குகின்றீர்: அலைகளின் இரைச்சலையும் நாடுகளின் கொந்தளிப்பையும் அடக்குகின்றீர்.
8 உலகின் கடையெல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் உம் அருங்குறிகளைக் கண்டு அஞ்சுவார்கள்: கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையில் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டுகிறீர்.
9 மண்ணுலகைத் தேடி வந்தீர், அதற்கு நிறைய மழையைக் கொடுத்தீர்: அதற்கு நிறை வளம் தந்தீர். கடவுளின் ஆறு கரை புரண்டோடியது@ தானியங்கள் நிரம்ப விளையச் செய்தீர்: விளையச் செய்ததோ இவ்வாறு.
10 படைசால்களில் தண்ணீர் ஓடச் செய்தீர்@ மண் கட்டிகளைப் பரம்படித்து மழையால் அதை மிருதுவாக்கினீர்: முளைத்து வரும் விதையை ஆசீர்வதித்தீர்.
11 ஆண்டு முழுவதையும் உமது கருணையால் நிரப்பினீர்: நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துகிறது.
12 பாலைவெளியின் மேய்ச்சல் நிலம் கொழுமை கொண்டு விளங்குகிறது. குன்றுகளைச் சூழ்ந்து அக்களிப்பு காணப்படுகிறது.
13 மேய்ச்சல்களில் ஆடு மாடுகள் நிரம்பியிருக்கின்றன@ கணவாய்களில் தானியங்கள் மிகுந்துள்ளன: இவையெல்லாம் அக்களிப்புடன் பாடல்கள் இசைக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, உமது, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், நீரே, வாழும், நம்பிக்கை, அதற்கு, விளையச், தானியங்கள், கடையெல்லைகளில், அடக்குகின்றீர், நீர், ஆன்மிகம், திருவிவிலியம், இறைவா, தகுதியே, நாங்கள், மனிதன், உலகின்