சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 27
2 உம்மை நோக்கி நான் கூவுகையில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளும்: உமது ஆலயத் தூயகத்தை நோக்கி என் கைகளை நான் உயர்த்தும் போது, என் குரலைக் கேட்டருளும்.
3 பாவிகளோடு என்னை ஒழித்துவிடாதேயும்@ தீமை செய்பவர்களோடு என்னைத் தொலைத்து விடாதேயும்: அவர்கள் அயலாரோடு சமாதானப் பேச்சு நிகழ்த்துவார்கள்@ ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருப்பவை தீய எண்ணங்களே.
4 அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குக் கூலி கொடும்@ அவர்களுடைய செயல்களின் தீமைக்கு ஏற்றவாறு அவர்களைத் தண்டியும்: அவர்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பலனளியும்@ தங்கள் செயல்களின் பயனை அவர்கள் அடையச் செய்யும்.
5 ஏனெனில், ஆண்டவருடைய செயல்களை அவர்கள் கவனிப்பதில்லை, அவருடைய கைவேலையை நினைப்பதில்லை: எனவே, ஆண்டவர் அவர்களை ஒழித்து விடுவாராக, மீளவும் எழும்பாதபடி செய்வாராக.
6 ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக: ஏனெனில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளினார்.
7 ஆண்டவர் என் வலிமையும் கேடயமுமாயிருக்கிறார்@ என் இதயம் அவர் மீது நம்பிக்கை கொண்டது: எனக்குதவி கிடைத்தது@ ஆகவே, என் இதயம் அக்களிக்கின்றது, இன்னிசை பாடி அவரைப் புகழ்கின்றேன்.
8 ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமை ஆவார்: தம்மால் அபிஷேகம் பெற்றவருக்கு மீட்புத்தரும் பாதுகாப்பும் அவரே.
9 ஆண்டவரே, உம் மக்களைக் காத்தருளும், உம் உரிமைப் பொருளான அவர்களுக்கு ஆசி அளித்தருளும்: மேய்ப்பனாக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக் கொள்ளும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, ஆண்டவர், ஏற்றவாறு, சங்கீதங்கள், குரலைக், நான், ஏனெனில், இதயம், கேட்டருளும், அவர்களைத், செயல்களின், நோக்கி, ஆன்மிகம், திருவிவிலியம், ஆண்டவரே, உம்மை, உமது, வேண்டுதலின்