சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 121
2 யெருசலேமே, இதோ உன் வாயிலில் வந்து நிற்கின்றோம்.
3 மாநகராய் அமைக்கப்பட்டுள்ளது யெருசலேம்: எல்லாம் இசைவாகப் பொருத்தப்பட்டுள்ள நகர் அது.
4 கோத்திரங்கள் அங்குச் செல்கின்றன, ஆண்டவருடைய கோத்திரங்கள் அங்குச் செல்கின்றன: இஸ்ராயேலின் சட்டப்படி ஆண்டவருடைய திருப்பெயரைப் போற்றச் செல்கின்றன.
5 நீதி இருக்கைகள் அங்கே அமைக்கப்பட்டுள்ளன: தாவீதின் இல்லத்து அரியணைகள் அங்குள்ளன.
6 யெருசலேமில் அமைதி நிலவ வேண்டுங்கள்: ~யெருசலேமே, உன் மீது அன்பு வைத்தவர்களுக்கு எத்துன்பமும் இல்லாதிருப்பதாக.
7 உன் மதில்களுக்குள் அமைதி இருப்பதாக: உன் மாளிகைகள் பாதுகாப்புடன் விளங்குவனவாக.
8 அமைதி உன்னகத்து விளங்குவதாக~ என்பேன்: என் சகோதரர், நண்பர் பொருட்டு அவ்வாறு சொல்வேன்.
9 உனக்கு எல்லா நன்மையும் உண்டாக நான் மன்றாடுவேன்: ஆண்டவராகிய நம் இறைவனின் இல்லத்தின் பொருட்டு வேண்டுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், அமைதி, செல்கின்றன, ஆண்டவருடைய, பொருட்டு, நான், திருவிவிலியம், ஆன்மிகம், கோத்திரங்கள், அங்குச்