சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 12
2 என் வருத்தங்களை எவ்வளவு காலம் எனக்குள்ளேயே தாங்கிக்கொண்டிருப்பேன்? நாள் தோறும் எழுகின்ற மனக்கவலையே எத்தனை நாள் பொறுத்துக்கொண்டிருப்பேன்? எவ்வளவு காலம் என் எதிரி என் மீது வெற்றிகொள்வான்?
3 என் ஆண்டவராகிய இறைவா, என்னைக் கண்ணோக்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.
4 மரண உறக்கத்தில் நான் ஆழ்ந்துவிடாமல் என் கண்களுக்கு உமது ஒளியை வீசும்: ~அவனை மேற்கொண்டேன்~ என்று என் எதிரி சொல்ல விடாதேயும்@ நான் வீழ்ச்சியுற்றதைக் கண்டு என் எதிரிகளை அக்களிக்க விடாதீர்.
5 உமது இரக்கத்தையே நான் நம்பியிருக்கிறேன் அன்றோ! உம்மிடமிருந்து வரும் உதவியை நினைத்து என் நெஞ்சம் அக்களிப்பதாக: எனக்கு நன்மையே செய்யும் ஆண்டவருக்கு நான் இன்னிசை பாடுவேனாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, நான், பழைய, சங்கீதங்கள், உமது, எதிரி, திருவிவிலியம், நாள், காலம், எவ்வளவு, ஆன்மிகம்