சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 117
2 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்~ என்று இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக.
3 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்~ என்று ஆரோனின் குலத்தார் சாற்றுவார்களாக.
4 என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்~ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக.
5 துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்: ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலை அளித்தார்.
6 ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? எவன் எனக்கு என்ன செய்ய முடியும்?
7 எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்: சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன்.
8 மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.
9 தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.
10 புறவினத்தார் எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.
11 எப்பக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.
12 தேனீக்களைப் போல் என்னை வளைத்துக் கொண்டனர்@ நெருப்பில் அகப்பட்ட முட்களைப் போல் எரிந்தனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.
13 என்னைத் தள்ளினார்கள்@ விழத்தாட்டத் தள்ளிப் பார்த்தார்கள்: ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை செய்தார்.
14 ஆண்டவர் என் வலிமையும் திடமுமாய் உள்ளார்: எனக்கு அவர் மீட்பரானார்.
15 நீதிமான்களின் கூடாரங்களில் இதோ மீட்புக்குறித்து மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது.
16 ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலற்றியது.
17 இறந்தொழியன், உயிர் வாழ்வேன்: ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்.
18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்: ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.
19 நீதிமான்கள் நுழையும் வாயில்களை திறந்து விடுங்கள்: உள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20 ஆண்டவரது வாயில் இது@ இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21 என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: எனக்கு நீர் மீட்பரானதால் உமக்கு நன்றி செலுத்துவேன்.
22 வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று.
23 ஆண்டவர் செயலிது: நம் கண்ணுக்கு வியப்பே!
24 ஆண்டவர் குறித்த நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.
25 ஆண்டவரே மீட்டருளும்: ஆண்டவரே வெற்றியைத் தாரும்.
26 ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்@ ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27 ஆண்டவராகிய இறைவனே, நம்மீது ஒளிவீசினார்: மரக் கிளைகளைக் கையிலேந்தி விழாப்பவனி நடத்துங்கள், பீடத்தின் மூலை வரைக்கும் செல்லுங்கள்.
28 என் இறைவன் நீரே, உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்: என் இறைவா, உம்மைப் புகழ்ந்தேத்துகிறேன்.
29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஆண்டவர், நான், நன்றி, உள்ளது, ஆண்டவரது, அவரது, ஏற்பாடு, என்றென்றும், பழைய, ஆண்டவருக்கு, பெயரால், எனக்கு, வலக்கரம், விட்டேன், அவர்களை, நொறுக்கி, சங்கீதங்கள், சாற்றுவார்களாக, உமக்கு, அவர், செலுத்துவேன், இரக்கம்~, நீர், கொண்டனர், ஆண்டவரே, என்னை, கண்டித்தார், வலிமையாய்ச், என்னைக், சூழ்ந்து, போல், மீது, இரக்கம், பக்கம், எனக்குத், ஏனெனில், செலுத்துங்கள், திருவிவிலியம், ஆன்மிகம், துணை, உள்ளார், புகுவதே, நலம், தஞ்சம், ஆண்டவரிடம், நம்பிக்கை, வைப்பதை, என்னைச்