சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 115
2 எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவனல்லன்~ என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்.
3 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்?
4 மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்.
5 ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும், அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
6 ஆண்டவர் தம் அடியாரின் மரணம், அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது.
7 ஆண்டவரே, நான் உம் ஊழியன்@ உம் அடியேன்@ உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
8 புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்@ ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்.
9 ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும் அவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
10 ஆண்டவருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், யெருசலேமே, உன் நடுவிலும் ஆண்டவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஆண்டவருடைய, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், நான், செலுத்துவேன், அவருக்கு, பொருந்தனைகளைச், அனைவரிடையேயும், ஆண்டவர், திருவிவிலியம், ஆன்மிகம், மக்கள்