சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 113
2 யூதா குலம் அவருக்குத் திருத்தலமாயிற்று: இஸ்ராயேல் அவரது ஆட்சிக்கு உட்பட்டது.
3 கடல் அவரைக் கண்டது@ கண்டு பின்வாங்கியது: யோர்தான் திசை திரும்பி ஓடியது.
4 மலைகள் செம்மறிகள் எனத் துள்ளின@ குன்றுகள் ஆட்டுக் குட்டிகள் போலக் குதித்தன.
5 கடலே, உனக்கென்ன நடந்தது? ஏன் பின்வாங்கினாய்? யோர்தானே, உன்கென்ன ஆயிற்று? ஏன் திசை திரும்பிச் சென்றாய்?
6 மலைகளே, நீங்கள் ஏன் செம்மறிகள் போலத் துள்ளினீர்கள்? குன்றுகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் குட்டிகளெனக் குதித்தீர்கள்?
7 மாநிலமே, ஆண்டவர் திருமுன் நடுநடுங்கு: யாக்கோபின் இறைவனின் திருமுன் நடுக்கமுறு!
8 கற்பாறையை நீர்க் குளமாக்க வல்லவர் அவர்: பாறையை நீரூற்றாக ஆக்க வல்லவர் அவர்.
9 எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று@ அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது.
10 அவர்களுடைய கடவுள் எங்கே?" எனப் புறவினத்தார் சொல்வது ஏன்?
11 நம் இறைவனோ வானுலகில் உள்ளார்: தாம் விரும்பிய யாவும் செய்துள்ளார்.
12 அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே.
13 அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண்கள் உண்டு, பார்ப்பதில்லை.
14 செவிகள் உண்டு, கேட்பதில்லை@ நாசி உண்டு, முகர்வதில்லை.
15 கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை@ தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை.
16 அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே.
17 இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
18 ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
19 ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
20 ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார்.
21 தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி அளிப்பார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி அளிப்பார்.
22 ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்@ நீங்களும் உங்கள் மக்களும் வளரச் செய்வார்.
23 ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார்.
24 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது@ மண்ணகத்தையோ அவர் மனுமக்களுக்கு அளித்துள்ளார்.
25 இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: கீழுலகம் செல்வோரும் அவரைப் புகழ்வதில்லை.
26 உயிர் வாழும் நாமே ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இன்றும் என்றும் வாழ்த்துகிறோம்.
சங்கீதம் 114
1 அல்லேலூயா! ஆண்டவர் மீது அன்பு வைத்தேன்@ ஏனெனில், என் மன்றாட்டின் குரலை அவர்
கேட்டருளினார்.
2 ஏனெனில், அவரை நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தருளினார்.
3 மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன@ பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.
4 நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: ~ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்~ என்று வேண்டினேன்.
5 ஆண்டவர் கருணையும் நீதியுமுள்ளவர்: நம் இறைவன் இரக்கமுள்ளவர்.
6 எளியோரை ஆண்டவர் காக்கின்றார்: துயர் மிக்கவனான எனக்கு மீட்பளித்தார்.
7 நெஞ்சே நீ மீளவும் அமைதிகொள்: ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்.
8 ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.
9 நான் ஆண்டவர் திருமுன் நடந்திடுவேன்: வாழ்வோர் நாட்டில் வாழ்ந்திடுவேன்.
2 ஏனெனில், அவரை நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தருளினார்.
3 மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன@ பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.
4 நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: ~ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்~ என்று வேண்டினேன்.
5 ஆண்டவர் கருணையும் நீதியுமுள்ளவர்: நம் இறைவன் இரக்கமுள்ளவர்.
6 எளியோரை ஆண்டவர் காக்கின்றார்: துயர் மிக்கவனான எனக்கு மீட்பளித்தார்.
7 நெஞ்சே நீ மீளவும் அமைதிகொள்: ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்.
8 ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.
9 நான் ஆண்டவர் திருமுன் நடந்திடுவேன்: வாழ்வோர் நாட்டில் வாழ்ந்திடுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஆண்டவர், உண்டு, அவர், அளிப்பார், ஏற்பாடு, ஏனெனில், இஸ்ராயேல், பழைய, நான், அவர்களுக்குத், திருமுன், துணையும், நீங்கள், நம்பிக்கை, மீது, அவரே, ஆசியை, கேடயமுமாவார், சங்கீதங்கள், மக்களுக்கு, ஆரோனின், புகழ்வதில்லை, அளித்துள்ளார், உங்கள், ஆண்டவரை, கால்கள், உரியது, வெளியேறிய, போது, யாக்கோபின், அல்லேலூயா, சங்கீதம், திருவிவிலியம், ஆன்மிகம், திசை, செம்மறிகள், அவர்களுடைய, வெறும், மகிமை, ஆண்டவரே, ஆட்டுக், வல்லவர், அவைகளுக்கு
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->