சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 111
2 அவனுடைய சந்ததி பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்@ நேர்மையுள்ளோரின் சந்ததி ஆசி பெறும்.
3 செழுமையும் செல்வமும் அவன் இல்லத்தில உலவும். அவனுடைய ஈகை என்றென்றும் நிலைக்கும்.
4 இருளில் ஒளியென அவன் நேர்மையுள்ளவரிடையே விளங்குவான்: கருணை, இரக்கம், நீதி உள்ளவனாய் இருப்பான்.
5 மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.
6 எந்நாளும் அவன் அசைவுறான்: என்றென்றும் அவன் மக்கள் நினைவில் வாழ்வான்.
7 தீமையான செய்தி எதுவும் அவனை வருத்தத்துக்குள்ளாக்காது: அவன் இதயம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து எதையும் தாங்கக் கூடியது.
8 அவன் நெஞ்சம் நிலையாய் இருக்கும்@ அவனுக்கு அச்சம் மேலிடாது: தன் எதிரிகிள் சிதறுண்டு போவதை அவன் பார்ப்பான்.
9 ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பான்@ அவனது ஈகை என்றும் நிலைத்திருக்கும்: அவனது வலிமை மகிமை பெற்று விளங்கும்.
10 பாவியோ அதைப் பார்த்துச் சினம் கொள்வான்@ பல்லைக் கடித்துக் கொண்டு தளர்வுறுவான்: பாவிகள் ஆசையெல்லாம் அழியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, அவன், ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், இருக்கும்@, என்றென்றும், அவனது, வலிமை, அவனுடைய, திருவிவிலியம், ஆன்மிகம், சந்ததி