சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 109
2 வலிமை மிக்க உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார் உம் எதிரிகளிடையே அதிகாரம் செலுத்தும்.
3 புனிதம் சிறப்புற்றோங்க, நீர் உதித்த நாளிலே ஆட்சியுரிமையும் உம்மோடு உதித்தது: விடிவெள்ளி தோன்று முன் பனியைப் போல் உம்மை ஈன்றெடுத்தேன்.
4 மெல்கிசெதேக் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்: சொன்ன சொல்லை மாற்றமாட்டார்.
5 ஆண்டவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: தம் கோபம் மூண்டெழும் நாளில் அரசர்களை நொறுக்குவார்.
6 நாடுகளுக்கு அவர் தீர்ப்பளிப்பார்@ எதிரிகளைக் கொன்று குவிப்பார்@ உலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
7 வழியில் உள்ள நீரோடையில் அவர் பருகுவார்: ஆகவே தலை நிமிர்ந்து நடப்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, ஆண்டவர், பழைய, சங்கீதங்கள், அவர், நீர், நொறுக்குவார், வலப்பக்கத்தில், ", திருவிவிலியம், ஆன்மிகம்