சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 105
2 ஆண்டவர் செய்த வல்லமை மிக்க செயல்களை யார் எடுத்துரைக்க இயலும்? அவருடைய புகழனைத்தையும் யார் விளம்ப இயலும்?
3 அவர் தந்த கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் பேறு பெற்றோர்: நீதியானதை எந்நாளும் செய்பவர் பேறு பெற்றோர்.
4 ஆண்டவரே, நீர் உம் மக்களின் மீது காட்டிய கருணைக்கேற்ப என்னை நினைவுகூரும்: உமது உதவியை எனக்குத் தாரும்.
5 அப்போது உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்குள்ள பெரும் பேற்றைக் கண்டு நான் இன்புறுவேன்: உம் மக்களின் மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சியுறுவேன்@ உம் உரிமைப் பேறான மக்களோடு நான் பெருமை அடைவேன்.
6 எங்கள் முன்னோர்களைப் போல நாங்களும் பாவம் செய்தோம், அக்கிரமம் செய்தோம்: தீமைகள் புரிந்தோம்.
7 எங்கள் முன்னோர்கள் எகிப்தில் நீர் செய்த அற்புதச் செயல்களை உணரவில்லை@ உமது இரக்கப் பெருக்கை அவர்கள் நினைவு கூரவில்லை: மாறாக, உன்னதரை எதிர்த்துச் செங்கடலருகில் கலகம் விளைவித்தனர்.
8 ஆனால் ஆண்டவர் தம் வல்லமையை வெளிப்படுத்த, தம் பெயரின் பொருட்டு அவர்களுக்கு மீட்பளித்தார்.
9 செங்கடலை அதட்டினார், அது உலர்ந்து போயிற்று: பாலை வெளியில் நடப்பது போல் அவர்களைக் கடல் வழியே அழைத்துச் சென்றார்.
10 எதிரியின் கையினின்று அவர்களைக் காத்தார்: பகைவனின் பிடியினின்று அவர்களை விடுவித்தார்.
11 அவர்களுடைய எதிரிகளைக் கடல் வெள்ளம் மூழ்கடித்தது: அவர்களுள் ஒருவன் கூடத் தப்பவில்லை.
12 அப்போது அவர் சொன்ன வாத்தையை நம்பினர்: அவரைப் புகழ்ந்து பாடினர்.
13 ஆனால் அவர் செய்த செயல்களை விரைவிலேயே மறந்து விட்டனர் அவரது திட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.
14 பாலைவெளியில் அவர்கள் தங்கள் இச்சைக்கு இடம் தரலாயினர்: கடவுளை அவர்கள் அங்கே சோதிக்கலாயினர்.
15 அவர்கள் விரும்பியதை அவர்களுக்குத் தந்தார்: ஆனால் கொடிய நோய்க்கு அவர்களை உள்ளாக்கினார்.
16 பாசாறையில் வாழ்ந்த காலத்தில் மோயீசன் மீது பொறாமை கொண்டனர்: ஆண்டவருக்கு உகந்தவரான ஆரோனின் மீதும் பொறாமை கொண்டனர்.
17 பூமி பிளந்து, தாத்தானை விழுங்கியது: அபிரோனின் கூட்டத்தை அப்படியே விழுங்கி விட்டது.
18 அவர்கள் கூட்டத்தின்மீது நெருப்பு வந்து விழுந்தது: தீயோர் அதனால் எரிக்கப்பட்டனர்.
19 ஓரேப் மலையில் கன்றுக்குட்டியை உருவாக்கினர்: பொன்னால் வார்த்த சிலையை வணங்கலாயினர்.
20 புல்மேயும் காளையின் சிலைக்குக் கடவுளின் மாட்சியை ஈடாக்கினர்.
21 தங்களை மீட்டுக்கொண்ட கடவுளை அவர்கள் மறந்தனர்: எகிப்தில் புதுமை செய்தவரை மறந்தனர்.
22 காமின் நாட்டில் நிகழ்ந்த அற்புதங்கள் ஆற்றியவரை, செங்கடலருகே வியப்புக்குரியன செய்தவரை மறந்தனர்.
23 இறைவன் அவர்களை அடியோடு தொலைத்து விட எண்ணினார்: ஆனால் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோயீசன் குறுக்கிட்டார். அவரிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார்: அவர் கொண்ட சினத்தை அமர்த்தலானார்@ அவர்களை அழித்து விடாதபடி செய்தார்.
24 அவர்களோ அருமையான நாட்டினுள் செல்ல மறுத்தனர்: அவரது சொல்லை நம்பவில்லை.
25 தங்கள் கூடாரங்களில் இருந்து கொண்டு முறுமுறுக்கலாயினர்: ஆண்டவருக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை.
26 ஓங்கிய கையுடன் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியது@ "பாலைவெளியில் உங்களை வீழ்த்துவேன்.
27 உங்கள் சந்ததியை உலகெங்கும் சிதறடிப்பேன்: நாடுகள் தோறும் நீங்கள் சிதறுண்டு போவீர்கள்!"
28 பேல்பேகோரின் வழிபாட்டில் ஈடுபட்டனர்: உயிரற்ற தேவர்களுக்குப் படைத்ததை உண்டனர்.
29 தாங்கள் செய்த அக்கிரமங்களால் ஆண்டவருக்குச் சினமூட்டினர்: கொள்ளைநோய் ஒன்று அவர்களைத் தாக்கியது.
30 பினேஸ் என்பவர் எழுந்தார், பாவத்துக்காகப் பழிவாங்கினார்: கொள்ளை நோய் நின்றது.
31 அது அவருக்குப் புண்ணியமெனக் கருதப்பட்டது: தலைமுறை தலைமுறைக்கும் அது புண்ணியமாக எண்ணப்பட்டது.
32 மெரிபா நீர் நிலையருகில் அவருக்குச் சினமூட்டினர்: அதனால் மோயீசனுக்கும் தீங்கு விளைவிந்தது.
33 அவருக்கு மனக்கசப்பு விளைவித்தனர்: அவரும் யோசனையின்றிப் பேசினார்.
34 புறவினத்தாரை அழிக்கும்படி ஆண்டவர் கட்டளையிட்டார்: ஆனால் அவர்கள் அழிக்கவில்லை.
35 அதோடு அவ்வேற்றினத்தாரோடு சேர்ந்து கொண்டனர்: அவர்கள் செய்த அக்கிரமங்களையே இவர்களும் செய்யலாயினர்.
36 அவர்கள் வழிபட்ட சிலைகளை வணங்கலாயினர்: அவையே அவர்களுக்குக் கண்ணிகள் ஆயின.
37 தம் ஆண் மக்களை அச்சிலைகளுக்குப் பலியிடலாயினர்@ தம் பெண் மக்களைப் பேய்களுக்குப் பலியிட்டனர்.
38 மாசற்ற இரத்தத்தை இப்படி அவர்கள் சிந்தினர்: தங்கள் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்தினர், கானான் நாட்டுச் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டனர்: நாடு முழுவதும் அந்த இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
39 தம் செயல்களால் அவர்கள் தீட்டு அடைந்தனர்: தங்கள் அக்கிரமங்களால் வேசித்தனம் செய்தனர்.
40 தம் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டெழுந்தார்: தம் உரிமைப் பொருளான அவர்களை வெறுத்துத் தள்ளினார்.
41 புறவினத்தார் கையில் அவர்களை விட்டுவிட்டார்: அவர்களைப் பகைத்தவர்களே அவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாயினர்.
42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை வாட்டி வதைத்தனர்: அவர்கள் அதிகாரத்தில் அவர்கள் நொறுங்குண்டனர்.
43 எத்தனையோ முறை அவர்களை விடுவித்தார்: அவர்கள் அவருக்கு மனக்கசப்பு உண்டாக்கினர்@ அவர்கள் செய்த அக்கிரமங்களின் பொருட்டு வதைக்கப்பட்டனர்.
44 எனினும் அவர் அவர்களின் துன்பங்களைப் பார்த்தார்: அவர்கள் கூக்குரலைக் கேட்டு ஏற்கலானார்.
45 அவர்களுக்கு அருள் கூரும் பொருட்டுத் தம் உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்@ தம் அருள் அன்பை நினைத்து இரக்கம் காட்டினார்.
46 அவர்களைச் சிறைப்படுத்தியவர்கள் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்தார்.
47 ஆண்டவரே, எம் இறைவா எங்களை மீட்டருளும்: எல்லா நாடுகளினின்றும் எங்களைக் கூட்டிச் சேர்த்தருளும். அப்போது நாங்கள் உமது பெயரைக் கொண்டாடுவோம்: உமக்குள்ள புகழை நினைத்துப் பெருமைப் படுவோம்.
48 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் என்றென்றும் போற்றி! அல்லேலூயா மக்கள் எல்லாரும் அதற்கு ~ஆமென்~ என்பார்களாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, அவர்களை, செய்த, அவர், ஆண்டவர், மீது, ஏற்பாடு, பழைய, தங்கள், அவர்களுக்கு, உமது, மறந்தனர், கொண்டனர், சங்கீதங்கள், அப்போது, நீர், இரக்கம், செயல்களை, அவரது, அவர்களைப், சிந்தினர், ஆண்டவருக்கு, மக்கள், கடவுளை, மோயீசன், அருள், பொறாமை, அதனால், செய்தவரை, மனக்கசப்பு, அக்கிரமங்களால், சினமூட்டினர், ", பலியிட்டனர், அவருக்கு, பேசினார், செய்தார், வணங்கலாயினர், விளைவித்தனர், பேறு, பெற்றோர், ஆண்டவரே, மக்களின், இயலும், யார், திருவிவிலியம், ஆன்மிகம், அல்லேலூயா, என்றென்றும், கண்டு, நான், அவர்களைக், கடல், விடுவித்தார், அவர்களுடைய, பொருட்டு, எகிப்தில், உரிமைப், எங்கள், செய்தோம், பாலைவெளியில்