சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 101
2 இடுக்கண் உற்ற நாளில் உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதேயும்: என் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும்@ உம்மைக் கூவியழைக்கும் போது விரைவாக என் வேண்டுதலைக் கேட்டருளும்.
3 ஏனெனில், என் வாழ்நாள் புகை போல் மறைகின்றது: என் எலும்புகள் நெருப்புப் போல் எரிகின்றன.
4 என் இதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலருகின்றது: உணவு உண்ணவும் நான் மறந்து போகிறேன்.
5 நான் வெகுவாய்ப் புலம்புகிறேன்: அதனால் என் எலும்புகள் தோலோடு ஒட்டிக் கொள்கின்றன.
6 பலைவனத்தில் இருக்கும் பெலிக்கானுக்கு நான் ஒப்பானேன்: பாழடைந்த இடத்தில் உலவும் ஆந்தை போலானேன்.
7 கூரைமீது, தனித்தமர்ந்த பறவைப் போல், தூக்கமின்றிப் புலம்புகின்றேன்.
8 என் எதிரிகள் என்னை எந்நேரமும் பழிக்கின்றனர்: என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் என் பெயரைச் சொல்லிச் சபிக்கின்றனர்.
9 சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: நான் குடிக்கும் பானம் என் கண்ணீரோடு கலந்துள்ளது.
10 உமது வெகுளிக்கும் வெஞ்சினத்துக்குமுன் நடுங்குகின்றேன்: ஏனெனில் என்னை வெகுவாய் உயர்த்தினீர், பின்னர் தூக்கி எறிந்து விட்டீர்.
11 என்னுடைய வாழ்நாள் மாலை நிழலுக்கு ஒப்பாயிற்று: நானும் புல்லைப்போல் உலருகின்றேன்.
12 நீரோ ஆண்டவரே, என்றென்றும் நிலைத்துள்ளீர்: உமது பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
13 நீர் எழுந்து சீயோனுக்கு இரக்கம் காட்டும்: அதன் மீது இரக்கம் காட்ட காலம் வந்தது@ இதோ ஏற்ற வேளை வந்துள்ளது.
14 அதன் கற்கள் மீது உம் ஊழியர் பற்றுக் கொண்டுள்ளனர்: அதன் அழிவை நினைத்துத் துயருகின்றனர்.
15 ஆண்டவரே, புற இனத்தார் உமது பெயரைக் கேட்டு அச்சம் கொள்வர்@ மாநிலத்து அரசர்கள் அனைவரும் உமது மாட்சிமை கண்டு மருள்வர்.
16 ஆண்டவர் சீயோனை மீளவும் எழுப்பும் போது, நம் மாட்சிமையில் அவர் விளங்கும் போது,
17 எளியோர் செய்யும் செபத்தைத் தள்ளாமல் செவியேற்பார்: அவர்களுடைய வேண்டுதலைப் புறக்கணியார்.
18 பின் வரும் சந்ததிக்கென இதெல்லாம் எழுதப்படட்டும்: உருவாகி வரும் மக்கள் ஆண்டவரைப் புகழ்வார்களாக.
19 சிறைப்பட்டவர்களின் புலம்புதல்களைக் கேட்கவும், சாவுக்கனெ குறிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும்,
20 உன்னதங்களிலுள்ள தம் திருத்தலத்தினின்று ஆண்டவர் தம் பார்வையைத் திருப்பினார்: வானினின்று வையகத்தை நோக்கினார்.
21 இவ்வாறு ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் படி மக்களினங்கள். அரசுகள் அனைத்தும் ஒன்றாய்க் கூடும் போது,
22 ஆண்டவருடைய திருப்பெயர் சீயோனில் போற்றப்படும்: அவருடைய புகழ் யெருசலேமிலும் சாற்றப்படும்.
23 பாதி வழியில் என் பலத்தை எடுத்துவிட்டார்: என் வாழ்நாளைக் குறுக்கி விட்டார்.
24 நானோ வேண்டுதல் செய்தது: "என் இறைவா, என் வாழ்நாளின் பாதியில் என்னை எடுத்து விடாதீர்: உம் காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ!"
25 ஆதியிலே நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்: வானங்கள் உம் கைவேலை. இவையெல்லாம் அழிந்துவிடும், நீரோ நிலைநிற்பீர்: அனைத்துமே ஆடையைப் போல் பழமையடையும், துணிமணி போல் நீர் அவற்றை மாற்றுகிறீர்@ அவையும் மாறிப்போம்.
26 நீரோவெனில் ஒரே நிலையாய் உள்ளீர்: உம் காலத்துக்கு முடிவே இல்லை.
27 உம் ஊழியரின் மக்கள் அச்சமின்றி வாழ்வார்கள்: அவர்கள் மக்கள் உம் முன்னே நிலைத்திடுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, போல், உமது, நான், ஏற்பாடு, பழைய, போது, நீர், சங்கீதங்கள், மக்கள், என்னை, ஆண்டவரே, காலம், மீது, இரக்கம், செய்யும், ", வரும், ஆண்டவர், நீரோ, ஏனெனில், கேட்டருளும், ஆன்மிகம், வாழ்நாள், எலும்புகள், தலைமுறை, புகழ், திருவிவிலியம், தலைமுறையாய்