2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 8
2 எல்லாராலும் துன்புறுத்தப்பட்ட மக்களின் மேல் கண்ணோக்கும்படியாகவும், அக்கிரமிகளால் தீட்டுப்படுத்தப் பட்ட ஆலயத்தின் மீது இரக்கம் கொள்ளவும்,
3 விரைவில் தரைமட்டமாக்கப்படும் நகரத்தின் அழிவின் மேல் தயவு கூரவும், தம்மை நோக்கி முறையிடும் இரத்தத்தின் குரலுக்குச் செவிமடுக்கவும்,
4 மாசற்ற குழந்தைகளின் அநியாய மரணத்தையும், அவருடைய பெயருக்குச் செய்யப்பட்ட நிந்தைகளையும் நினைவு கூரவும், தீமைகளின் மீது கோபம் கொள்ளவும் ஆண்டவரை மன்றாடினார்கள்.
5 ஆதலால், மக்கபேயுஸ் திரளான படைகளைச் சேர்க்க, புறவினத்தாரால் அவரை எதிர்த்து நிற்க முடியவில்லை. ஏனென்றால், ஆண்டவருடைய கோபம் இரக்கமாக மாறிற்று.
6 யூதாஸ் திடீரென்று கோட்டைகளிலும் நகரங்களிலும் புகுந்து, அவைகளைக் கொளுத்தி விட்டார்@ தகுதியான இடங்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு, பகைவருக்குப் பற்பல துன்பங்களை வருவித்தார்.
7 சிறப்பாக, இரவு வேளைகளில் இவ்வாறு பகைவர்களைத் தாக்கினார். அவருடைய வலிமையின் புகழ் எங்கும் பரவிற்று.
8 பிலிப்பு என்பவன், மக்கபேயுஸ் சிறிது சிறிதாய் முன்னேறுவதையும், அவர் தம் காரியங்களில் அடிக்கடி வெற்றி பெறுவதையும் கண்டு, தனக்கு உதவி செய்யும்படி செலெசீரியா, பெனிசியா நாடுகளின் படைத் தலைவனான தோலெமேயுசுக்கு எழுதினான்.
9 ஆதலால், அவன் தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவனான பாத்திரோகிளசின் புதல்வனான நிக்கானோரை அனுப்பினான். யூத இனம் முழுவதையும் அழிப்பதற்காகப் பல இனத்தாரைச் சேர்ந்த இருபதினாயிரம் போர் வீரரையும், சிறந்த வீரனும் போர்க்காரியங்களில் மிக்க அனுபவமுள்ளவனுமான கோர்ஜியாவையும் அவனுடன் சேர்த்து அனுப்பினான்.
10 உரோமையருக்கு அரசன் கப்பமாகக் கொடுக்க வேண்டிய இரண்டாயிரம் தாலேந்துகளை, யூத அடிமைகளை விற்றுச் செலுத்தி விடுவதாக நிக்கானோர் தீர்மானித்துக் கொண்டான்.
11 எல்லாம் வல்லவர் தன்னைப் பழிவாங்குவார் என்பதை அறியாமல், தாலேந்து ஒன்றுக்குத் தொண்ணுறு அடிமைகளைத் தான் கொடுப்பதாக வாக்களித்து, யூத அடிமைகளை வாங்க வரும்படி கடலோர நகரங்களுக்கு உடனே சொல்லி அனுப்பினான்.
12 நிக்கானோரின் வருகையை அறிந்தவுடனே, யூதாஸ் தம்முடன் இருந்த யூதருக்கு அதை அறிவித்தார்.
13 அவர்களில் சிலர் கடவுளுடைய நீதியின் மேல் நம்பிக்கையற்று, பயந்து ஓட்டம் பிடித்தார்கள்.
14 வேறு சிலரோ தங்களிடம் மீதியாய் இருந்தவைகளை விற்று விட்டு தங்களிடம் வருவதற்கு முன்பே தங்களை விற்று விட்ட கொடியவனான நிக்கானோரிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி அதே நேரத்தில் ஆண்டவரை வேண்டினார்கள்.
15 தங்களை முன்னிட்டு அல்லாவிடினும், தங்கன் முன்னோருடன் செய்த உடன்படிக்கையை முன்னிட்டும், அவருடைய பெருமை மிக்க புனித பெயரை தாங்கள் வேண்டிக் கொண்டதை முன்னிட்டும் தங்களைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.
16 மக்கபேயுஸ் தம்முடன் இருந்த ஏழாயிரம் பேரையும் அழைத்து, பகைவரோடு சமாதானமாகாதபடிக்கும், தங்கள் மீது அநியாயமாய்ப் படையெடுத்து வரும் பகைவர் கூட்டத்திற்கு அஞ்சாமால் அவர்களைத் துணிவுடன் எதிர்த்துப் போர்புரியும்படிக்கும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
17 அவர்களால் புனித இடத்துக்குச் செய்யப் பட்டிருந்த நிந்தையையும், நகரத்துக்கு உண்டான அவமானத்தையும், முன்னோருடைய சட்ட திட்டங்கள் மீறப்பட்டதையும் தங்கள் கண்முன் வைத்திருக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
18 மேலும்: அவர்கள் தங்கள் ஆயுதங்கள் மீதும் துணிவின் மீதும் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். நாமோவென்றால், நம்மேல் வருகிறவர்களையும் உலகம் முழுவதையும் ஓர் இமைப்பொழுதிலே அழிக்கக் கூடிய எல்லாம் வல்ல ஆண்டவர் மீது நமது நம்பிக்கையை வைத்திருக்கிறோம் என்று கூறினார்.
19 தங்கள் முன்னோருக்குச் செய்யப்பட்ட உதவிகளைப் பற்றியும், சென்னாக்கெரிபு என்பவன் காலத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர் அழிந்தார்களெறும்,
20 பபிலோனியாவில் கலாத்தியருக்கு எதிராய்த் தாங்கள் செய்த போரில் அவர்களுக்கு உதவியாய் வந்திருந்த மசேதோனியர் தத்தளித்து ஓடிப்போக அவர்கள் ஆறாயிரம் பேர் மட்டும் விண்ணினின்று தங்களுக்கு அளிக்கப் பட்ட உதவியைக் கொண்டு இலட்சத்து இருபதினாயிரம் பேர்களைக் கொன்றார்களென்றும், இவைகளை முன்னிட்டு அவர்கள் பற்பல நன்மைகளைப் பெற்றார்களென்றும் அவர்களுக்கு நினைப்பூட்டினார்.
21 இவ் வார்த்தைகளால் அவர்கள் துணிவு பெற்று, கட்டளைகளுக்காகவும் நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கத் தயாராய் இருந்தார்கள்.
22 அவர் தம் சகோதர் சீமோன், சூசை, யோனத்தாஸ் என்பவர்களைப் படைத்தலைவர்களாக நியமித்து, ஒவ்வொருவனுக்கும் ஆயிரத்தைநூறு வீரர்களைக் கொடுத்தார்.
23 அதன் பிறகு எஸ்ரா என்பவரால் புனித நூல் வாசிக்கப்பட, கடவுள் உதவியின் அடையானம் கொடுக்கப்பட்ட பிறகு நிக்கானோரை எதிர்க்கத் தாமே படைத்தலைவனாய்ப் படைகளை நடத்திப்போனார்.
24 எல்லாம் வல்ல கடவுளைத் தங்களுக்கு உதவிசெய்பவராகக் கொண்டு, ஒன்பதாயிரம் பேர்களுக்கு அதிகமாகக் கொன்றார்கள்@ நிக்கானோருடைய படையில் பெரும் பகுதியினரைக் காயப் படுத்தித் திறனவற்றவர்களாக்கி, ஓட விரட்டினார்கள்.
25 தங்களை (அடிமைகளாக) வாங்க வந்தவர்களுடைய பணத்தையும் பறித்துக் கொண்டு, அவர்களையும் வெகுதூரம் துரத்திக் கொண்டு ஓடினார்கள்.
26 ஆனால், நேரமில்லாமையால் திரும்பினார்கள். ஏனென்றால், அது ஓய்வுநாளுக்கு முந்திய நாளாய் இருந்தது. ஆதலால், பின்தொடர்ந்து போவதை விட்டு விட்டார்கள்.
27 அவர்களுடைய ஆயுதங்களையும் பொருட்களையும் சேர்த்து வைத்து விட்டு, ஓய்வு நாளை அனுசரித்து, அன்று தங்களைக் காப்பாற்றித் தங்கள் மீது இரக்கம் காட்டத் தொடங்கிய ஆண்டவரைப் போற்றினார்கள்.
28 சேர்த்து வைத்தப் பொருட்களை, ஓய்வு நாளுக்குப் பிறகு, வலிமை குன்றியவர்களுக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்@ மிதியானவைகளைத் தாங்களே தம்மவர்களோடு வைத்துக் கொண்டார்கள்.
29 இவைகளுக்குப் பின் எல்லாரும் ஒருமிக்க செபித்து, தம்முடைய ஊழியரோடு என்றென்றைக்கும் உறவாகும்படி இரக்கமுள்ள ஆண்டவரை மன்றாடினார்கள்.
30 அவர்கள் திமோத்தேயுஸ், பாக்கீது என்பவர்களோடு தங்களுக்கு எதிராய்ப் போர் செய்தவர்களில் இருபதினாயிரம் பேர்களுக்கு மேல் கொன்றார்கள்@ வலிமை மிக்க கோட்டைகளைப் பிடித்தார்கள்@ கொள்ளையடித்த பற்பல பொருட்களை வலிமை குன்றியவர்களுக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும், இன்னும் முதியவர்களுக்கும் சம அளவில் கொடுத்தார்கள்.
31 அவர்களுடைய ஆயுதங்களைக் கவனத்தோடு சேர்த்து, எல்லாவற்றையும் தகுந்த இடங்களில் பத்திரப்படுத்தி, மீதியான பொருட்களை யெருசலேம் கொண்டு போனார்கள்.
32 திமோத்தேயுசோடு இருந்து யூதர்களுக்குப் பல தொல்லைகள் வருவித்த கயவனான பிலார்ககெஸ் என்பவனைக் கொன்றார்கள்.
33 மேலும், யெருசலேமில் நன்றிப் புகழ் புரியும் போது, புனித இடத்தின் கதவுகளைக் கொளுத்தி விட்ட கலிஸ்தெனெஸ் என்பவன் ஒரு வீட்டுக்குள்ளே ஓடி ஒளிந்த போது, அவன் செய்த தீச்செயல்களுக்கு ஏற்ப அவனை நெருப்புக்கு இரையாக்கினார்கள்.
34 யூதரை (அடிமைகளாக) விலைக்குவாங்க ஆயிரம் வணிகரைக் கூட்டி வந்த பெரும் துரோகியான நிக்கானோரோ,
35 தன்னால் கீழானவராகக் கருதப்பட்டவர்களுடைய வல்லமை மிக்கக் கடவுளால் தாழ்த்தப் பட்டு, அலங்கார ஆடையைக் களைந்தெறிந்து விட்டு மத்திய நாடுகள் வழியாய்த் தப்பி ஓடி, தன் படையின் அழிவினால் பெரிதும் அவமானமடைந்து தனியாய் அந்தியோக்கியா நகரம் வந்து சேர்ந்தான்.
36 யெருசலேம் மக்களை அடிமைகளாக விற்று உரோமையருக்குக் கப்பம் செலுத்தி விடுவதாக வாக்குறுதி வழங்கிய அவன், கடவுளை யூதர் தங்கள் காவலராகக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளை அவர்கள் பின்பற்றுவதனால் அவர்கள் தேற்கடிக்கப்பட மாட்டார்கள் என்றும் இப்போது வெளிப்படையாய் அறிவித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, கொண்டு, தங்கள், மீது, புனித, ஏற்பாடு, சேர்த்து, விட்டு, பழைய, மேல், என்பவன், மக்கபேயுஸ், ஆதலால், அடிமைகளாக, பற்பல, பிறகு, இருபதினாயிரம், மிக்க, தங்களுக்கு, அனுப்பினான், அவன், மன்றாடினார்கள், எல்லாம், அவருடைய, தங்களைக், ஆண்டவரை, தம்முடன், யூதாஸ், ஆகமம், செய்த, வலிமை, தங்களை, விற்று, மக்கபே, பொருட்களை, இலட்சத்து, மீதும், அவர்களைக், மேலும், நம்பிக்கையை, வல்ல, பெரும், பிள்ளைகளுக்கும், அனாதைப், விதவைகளுக்கும், யெருசலேம், என்றும், போது, குன்றியவர்களுக்கும், ஓய்வு, பேர்களுக்கு, அவர்களுக்கு, கொன்றார்கள்@, தாங்கள், அவர்களுடைய, பேர், செலுத்தி, கூரவும், கொள்ளவும், செய்யப்பட்ட, கோபம், ஏனென்றால், இரக்கம், பட்ட, ஆன்மிகம், திருவிவிலியம், அழைத்து, ஆறாயிரம், போனார்கள், கொளுத்தி, புகழ், தங்களிடம், இருந்த, விட்ட, காப்பாற்றும்படி, முன்னிட்டு, வாங்க, விடுவதாக, நிக்கானோரை, அவர், முழுவதையும், போர், அடிமைகளை, முன்னிட்டும்