2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 13
2 அவனுடன் அவன் அமைச்சனும் செயலனுமான லிசியாஸ் இலட்சத்துப் பதினாயிரம் காலாட்களோடும், ஐயாயிரம் குதிரை வீரரோடும், இருபத்திரண்டு யானைகளோடும், வீச்சு வாள்கள் நிறைந்த முந்நூறு தேர்களோடும் வருவதாகவும் யூதாஸ் கேள்விப்பட்டார்.
3 அவர்களுடன் மெனேலாவுசும் சேர்ந்து கொண்டான்@ தன் நாட்டின் நலனை முன்னிட்டன்று, ஆனால், தான் தலைவனாக்கப்படலாம் என்ற நம்பிக்கையினாலேயே கபடமாய் அந்தியோக்கசை மன்றாடினான்.
4 ஆனால், அரசர்க்கரசர் அந்தப் பாவியின் மீது அந்தியோக்கசின் கோபத்தைத் தூண்டி விட்டார். லிசியாசும் இவனே எல்லாத் தீமைகளுக்கும் காரணமென்று அரசனிடம் சொல்ல, அவன் அவ்விடத்து வழக்கம் போல் அவனைப் பிடித்து அவ்விடத்திலேயே கொலை செய்யக் கட்டளையிட்டான்.
5 அவ்விடத்தில் சாம்பல் குவியல்களால் சூழப்பட்ட ஐம்பது முழ உயரமுள்ள ஒரு கோபுரமும் உண்டு. அதைச் சுற்றிலும் பள்ளமாக இருந்தது.
6 கடவுளைப் பழித்த மெனேலாவுசை அவ்விடத்தினின்று சாம்பலில் தள்ளி விடும்படி அரசன் கட்டளையிட்டான். எல்லாருமே சேர்ந்து அவனைச் சாவுக்குத் தள்ளி விட்டார்கள்,
7 (கடவுள்) கட்டளையை மீறியவன் இத்தகைய கட்டளையால் சாகும்படி நேரிட்டது. மெனேலாவுஸ் அடக்கம் செய்யப் படவில்லை.
8 இது முற்றிலும் முறையே. ஏனென்றால் புனித நெருப்பும் புனித சாம்பலும் இருக்கும் கடவுளுடைய பீடத்திற்கு எதிராகப் பல பாவங்களைக் கட்டிக்கொண்ட அவன் சாம்பல் மரணத்துக்கே தீர்ப்பிடப்பட்டான்.
9 ஆயினும், அரசன் தன் தந்தையை விடக் கொடுமையுள்ளவனாகத் தன்னை யூதருக்குக் காண்பிக்க, தன் மனத்தில் கோபங்கொண்டு வந்தான்.
10 இதை அறிந்த யூதாஸ், எப்போதும் போல் இப்போதும் தங்களுக்கு உதவி புரிய ஆண்டவரை இரவும் பகலும் மன்றாட மக்களுக்குக் கட்டளையிட்டார்.
11 கட்டளையும் நாடும் கடவுள் ஆலயமும் தங்களிடமிருந்து எடுபட்டுப் போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். சிறிது காலம் சமாதானத்தில் வாழ்ந்த மக்கள் திரும்பவும் கடவுளைப் பழிக்கும் நாட்டவர்களுக்கு அடிமைகளாகுமாறு விடாதபடி, மன்றாடக் கட்டளையிட்டார்.
12 எல்லாரும் அவ்வாறே செய்து, மூன்று நாள் வரையிலும் இடைவிடாமல் நெடுங்கிடையாக விழுந்து, அழுகையிலும் நோன்பிலும் ஆண்டவருடைய இரக்கத்தை மன்றாடின பிறகு, போருக்குக் தயாராகும்படி யூதாஸ் அவர்களைத் தூண்டினார்.
13 அவர் மூத்தோரோடு கலந்து, அரசன் யூதேயா நாட்டிற்குள் தன் படைகளை நடத்தி நகரைப் பிடித்துக் கொள்வதற்கு முன்பே, தாமே புறப்பட்டுப் போகவும், முடிவை ஆண்டவரின் தீர்ப்பிற்கு விட்டு விடவும் தீர்மானித்தார்.
14 ஆகையால் உலகத்தை உருவாக்கிய கடவுளிடம் அனைத்தையும் ஒப்படைத்து, தம்முடன் இருந்தவர்கள் துணிவுடன் போர் புரிந்து, சாகுமட்டும் தங்கள் கட்டளைக்கும் கடவுளின் ஆலயத்துக்கும் நகரத்துக்கும் நாட்டிற்கும் நகரத்தாருக்கும் உறுதியாக நிற்க வேண்டுமென்று திடஞ் சொல்லி, மோதின் நகருக்கு அருகில் பாளையம் இறங்கினார்.
15 வெற்றியின் கடவுள் என்ற அடையாளத்தைத் தம் மக்களுக்குக் கொடுத்து, வீரமிக்க இளைஞரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இரவில் அரசனின் கூடாரத்தைத் தாக்கி, பாளையத்தில் நாலாயிரம் பேர்களையும் யானைகளில் பெரிதானவற்றையும் அதன்மேல் இருந்தவர்களையும் கொன்றார்.
16 மிக்க பயத்தையும் கலக்கத்தையும் பாளையத்தில் உண்டாக்கித் தாங்கள் விரும்பியபடி நிறைவேற்றி விட்டுப் போய் விட்டார்கள்.
17 இது ஆண்டவரின் உதவியால் பொழுது விடியும் போது நடந்தது.
18 ஆனால், அரசன் யூதருடைய துணிவைக் கண்டு கொண்டமையால், தந்திரத்தால் வலிமை மிக்க அரண்களைப் பிடிக்க முயன்றான்.
19 யூதருடைய வலிமை பொருந்திய கோட்டையாகிய பெத்சூராவைத் தாக்கிப் படையெடுத்துப் போனான். ஆனால், துரத்தியடிக்கப்பட்டான்@ பெரும் சேதத்தோடு தோல்வியடைந்தான்.
20 நகருக்குள் இருந்தவர்களுக்குத் தேவையான பொருட்களை யூதாஸ் அனுப்பினார்.
21 யூதர் படையிலிருந்த ரோதோக்கஸ் என்னும் ஒருவன் பகைவர்களுக்கு இரகசியங்களை அறிவித்தான். அவன் விசாரிக்கப்பட்ட பிறகு பிடித்து அடைக்கப்பட்டான்.
22 திரும்பவும் அரசன் பெத்சூராவில் இருந்தவர்களுடன் கலந்து பேசி, உடன்படிக்கை செய்து கொடுத்தான்@ அவர்களுடைய உடன்படிக்கையை ஒப்புக்கொண்டான்@ திரும்பிப் போனான்.
23 அவன் யூதாசோடும் போர்புரிந்து தோல்வியடைந்தான்@ அந்தியோக்கியாவில் காரியங்களைக் கவனிக்க தான் விட்டுவந்த பிலிப்பு என்பவன் கலகம் செய்வதாகக் கேள்விப்பட்டு, மனத்தில் கலக்கமுற்று யூதர்களை மன்றாடி, அவர்களுக்குத் தன்னைத் தாழ்த்தி, நீதியாய்த் தோன்றுவன எல்லாவற்றிற்கும் தான் இணங்குவதாக ஆணையிட்டுக் கூறினான்@ சமாதானமாகிப் பலி ஒப்புக்கொடுத்தான்@ கடவுள் ஆலயத்தை மகிமைப்படுத்தினான்@ காணிக்கைகளும் கொடுத்தான்.
24 மக்கபேயுசைத் தழுவிக் கொண்டான். தோலெமாயிதா முதல் ஜெர்ரேனா நாடு வரையிலும் அவரைப் படைத்தலைவராகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினான்.
25 அவன் தோலெமாயிதாவுக்கு வந்த போது, தோலெமேயர் அச்சமாதான உடன்படிக்கையை விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ளவில்லை@ ஏனென்றால், சிலவேளை உடன்படிக்கை மீறப்படுமென்று கோபம் கொண்டார்கள்.
26 அப்போது லிசியாஸ் மேடையின் மேல் ஏறி நியாயத்தை விளக்கி மக்களை அமர்த்தினான்@ பின் அந்தியோக்கியா திரும்பினான். அரசனுடைய படையெடுப்பும் திரும்புதலும் இவ்வாறு முடிவு பெற்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏற்பாடு, அரசன், யூதாஸ், பழைய, கடவுள், மக்கபே, ஆகமம், தான், புனித, உடன்படிக்கை, பிறகு, வரையிலும், உடன்படிக்கையை, திரும்பவும், செய்து, கலந்து, ஆண்டவரின், போனான், யூதருடைய, போது, கட்டளையிட்டார், பாளையத்தில், மிக்க, வலிமை, விட்டார்கள், லிசியாஸ், சேர்ந்து, வருவதாகவும், பெரும், திருவிவிலியம், ஆன்மிகம், போல், பிடித்து, ஏனென்றால், மனத்தில், தள்ளி, கடவுளைப், கட்டளையிட்டான், சாம்பல், மக்களுக்குக்