1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 4
2 கோட்டையில் இருந்தவர்கள் அவனுக்கு வழிகாட்டினார்கள்,
3 இதைக் கேள்விப்பட்ட யூதாசும் தம் வீர சேனைகளோடு எம்மாவுசில் இருந்த பெரும்படையை எதிர்க்கச் சென்றார்.
4 ஏனென்றால் பாளையத்தில் இருந்த படை சிதறிப்போயிருந்தது.
5 கோர்ஜியா இரவில் யூதாசின் பாளையத்துக்கு வந்து, ஒருவரையும் காணாமல் அவர்களை மலையில் தேடினான். ஏனென்றால்: நம்மைக் கண்டு அவர்கள் ஓடி விட்டார்கள் என்று சொன்னான்.
6 பொழுது விடிந்த போது மூவாயிரம் ஆட்களோடு மட்டும் யூதாஸ் தம் பாளையம் திரும்பி வந்தார். அவர்களுக்குக் கேடயமும் இல்லை, வாளும் இல்லை.
7 பகைவர் பாளையமோ வலிமை படுத்தப்பட்டு, போருக்குப் பழக்கப்பட்ட கவசமணிந்த வீராராலும், குதிரைப் படையினராலும் சூழப்பட்டு இருக்கக் கண்டார்கள்.
8 யூதாஸ் தம்மோடு கூட இருந்தவர்களை நோக்கி: அக்கூட்டத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். அவர்கள் தாக்குவதைக் கண்டு பயப்படாதீர்கள்.
9 செங்கடலில் நம் முன்னோர் பார்வோனால் பெரிய படையோடு பின்தொடரப்பட்ட போது எவ்விதம் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.
10 இப்போது விண்ணை நோக்கி அபயக் குரலெழுப்புவோம். ஆண்டவர் நம்மீது இரக்கம் வைத்து, நம் முன்னோரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூர்வார். இன்றே நமக்கு முன்பாகப் படையை முறியடிப்பார்.
11 அப்பொழுது, இஸ்ராயேலை மீட்டுக் காப்பாற்றுகிறவர் ஒருவர் இருக்கிறார் என்று எல்லா இனத்தவரும் அறிவர், என்று சொன்னார்.
12 அன்னியர் தங்கள் கண்களை ஏறெடுத்து, எதிர்ப்பக்கத்தினின்று அவர்கள் வருவதைக் கண்டார்கள்.
13 போர் தொடுக்கத் தங்கள் பாளையத்தினின்று வெளிப்பட்டார்கள். யூதாசோடு இருந்தவர்களும் எக்காளத்தை ஊதினார்கள்.
14 ஒருவரையொருவர் தாக்கினார்கள். அன்னியர் சேனை முறியடிக்கப்படவே, அவர்கள் சமவெளிக்கு ஓட்டம் பிடித்தனர்.
15 கடைசியில் இருந்தவர்கள் எல்லாரும் வாளுக்கு இரையானார்கள். மற்றவர்களை ஜெசரோன் வரையிலும், இதுமேயா, அசோதுஸ், ஜாம்னிய சமவெளிகள் வரையிலும் துரத்திப்போனார்கள். அவர்களிலும் மூவாயிரம் பேர்வரை மடிந்தார்கள்.
16 யூதாஸ் தம் படைகள் பின்தொடரத் திரும்பி வந்தார்.
17 அவர் தம் மக்களை நோக்கி@ கொள்ளைப் பொருட்களின் மேல் ஆசை வேண்டாம். ஏனென்றால், போர் நமக்கு எதிராய் நடக்கிறது.
18 கோர்ஜியாவும் அவன் படைகளும் நமக்கு அருகிலேயே மலையில் இருக்கின்றனர். இப்போது பகைவர்களை எதிர்த்துப் போர் செய்யுங்கள்@ பிறகு தொல்லையின்றி கொள்ளையிடலாம் என்று சொன்னார்.
19 யூதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே சில படை வீரர் மலை மீது காணப்பட்டனர்.
20 கோர்ஜியா தன் படைகள் துரத்தப்பட்டதையும், தன் கூடாரங்கள் தீக்கிரையானதையும் கண்டான். ஏனென்றால், காணப்பட்ட புகை, காரியம் முடிந்து விட்டது என விளக்கியது.
21 அவர்கள் இதைப் பாத்ததனால் மிகவும் பயந்து, யூதாசும் அவர் படைகளும் போருக்கு ஆயத்தமாய் இருப்பதையும் கண்டு நடுங்கினார்கள்.
22 அன்னிய நாடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
23 யூதாசோ அவர்கள் பாளையத்தைக் கொள்ளையிடுவதற்குத் திரும்பினார். இவர்கள் திரண்ட பொன், வெள்ளி, விலையுயர்ந்த பட்டாடைகள், கடற்சிப்பி, முத்துகள், விலையேறப்பெற்ற பொருட்கள் இவற்றைக் கைப்பற்றினார்கள்.
24 திரும்புகையில், நன்மை மிக்கவரும், என்றென்றும் இரக்கமுள்ளவருமான விண்ணகக் கடவுளை இன்னிசை பாடி வாழ்த்தினார்கள்.
25 அன்று இஸ்ராயேலிடையே பெரிய மீட்பு உண்டாயிற்று.
26 அன்னியர்களில் தப்பித்தவர்கள் எல்லாரும் வந்து, நடந்த யாவற்றையும் லீசியாசிடம் அறிவித்தார்கள்.
27 அவன் அவற்றைக் கேள்வியுற்று மனம் நொந்து ஊக்கம் இழந்தான். ஏனென்றால், இஸ்ராயேல் மீது தான் கொண்டிருந்த எண்ணமும், அரசன் கட்டளையும் நிறைவேறாமற் போனதால் வருந்தினான்.
28 அடுத்த ஆண்டு அவன் அவர்களோடு சண்டை செய்வதற்கெனத் தேர்ந்தெடுத்த அறுபதினாயிரம் வீரரையும், ஐயாயிரம் குதிரை வீரரையும் படைதிரட்டினான்.
29 அவர்கள் யூதேயா நாட்டுக்கு வந்து பெத்தோரோனில் பாளையம் இறங்கவே, யூதாசும் பதினாயிரம் வீரரோடு அவர்களை எதிர்த்து நின்றார்.
30 பகைவருடைய வலிமை மிக்க சேனையைப் பார்த்து, அவர் கடவுளை மன்றாடிச் சொன்னதாவது: உம் ஊழியனாகிய தாவீதின் கையால் அரக்கனுடைய வலிமையை அழித்தவரும், சவுலின் புதல்வன் யோனத்தாசுடையவும் அவன் துணைவனுடையவும் கையால் அன்னியருடைய பாளையங்களை அழித்தொழித்தவருமான இஸ்ராயேலரின் மீட்பரே, உமக்குப் புகழ்ச்சி உண்டாகக்கடவது.
31 இந்தப் பகைவர் படையை உம் மக்களாகிய இஸ்ராயேல் கையில் காட்டிக் கொடுத்தருளும். அவர்கள் படைகளும் குதிரை வீரரும் வெட்கித் தோல்வி அடையக்கடவார்கள்.
32 அவர்களிடத்தில் பயத்தை வருவித்து, அச்சத்தால் அவர்கள் துணிவை அடக்கியருளும். நடுக்கத்தால் அவர்கள் குன்றிப்போவார்களாக.
33 உம்மை நேசிக்கிறவர்களுடைய வாளால் அவர்களை அழித்து விடும். உமது பெயரை அறிந்த யாவரும் இன்னிசைகளால் உம்மைத் துதிப்பார்களாக.
34 அவர்கள் போர்த்தொடுத்தார்கள். லிசியாஸ் படையில் ஐயாயிரம் பேர் மாண்டார்கள்.
35 லிசியாஸ் தன்னவர்கள் ஓடுவதையும், யூதர்கள் வாழவும் மாளவும் துணிந்திருப்பதையும் கண்டு, அந்தியோக்கிய நகரம் போய், திரும்பவும் திரளான படையோடு யூதேயா நாட்டை எதிர்த்துவர வீரர்களைச் சேர்த்தான்.
36 யூதாசும் அவர் சகோதரரும்: இதோ, நம் பகைவர் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது கடவுள் ஆலயத்தைத் தூய்மைப் படுத்திப் புதுப்பிப்போமாக, என்றார்கள்.
37 படைவீரர் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலை மீது ஏறினார்கள்,.
38 பாழடைந்திருந்த பரிசுத்த இடத்தையும், தீட்டுப்படுத்தப்பட்ட பீடத்தையும், நெருப்பினாலே எரிந்து போன கதவுகளையும், காட்டிலும் மலைகளிலும் இருப்பது போல முட்செடிகள் அடர்ந்த முகப்பு வாயிலையும், இடிபட்டிருந்த அறைகளையும் பார்த்து,
39 தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் புலம்பி, தங்கள் தலைகளில் சாம்பலைப் போட்டுக் கொண்டார்கள்.
40 தரையில் குப்புற விழுந்து, எக்காளங்களை ஊதி, வானத்தை நோக்கி உரத்த சத்தமாய் கூவினார்கள்.
41 கடவுள் ஆலயம் தூய்மைப் படுத்தப்படும் வரையிலும் கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதாஸ் தம் படைகளுக்குக் கட்டளையிட்டார்.
42 கடவுள் கட்டளை மீது நன்மனம் கொண்டவர்களான குற்றமற்ற குருக்களைத் தேர்ந்துகொண்டார்.
43 அவர்களும் கடவுள் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி, தீட்டுப்படுத்தப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் எறிந்துவிட்டார்கள்.
44 தீட்டுப்படுத்தப்பட்ட பலிபீடத்தை என்ன செய்வதென்று அவர் யோசித்தார்.
45 அதைப் புறவினத்தார் தீட்டுப் படுத்தியிருந்தமையால், அதனால் தங்களுக்கு யாதொரு கெடுதியும் வராதபடிக்கு அதை அழித்துவிட வேண்டுமென்ற நல்ல யோசனை பிறந்தது. அப்படியே அதனை அழித்து விட்டார்கள்.
46 அக்கற்களை என்ன செய்யவேண்டுமென்று ஓர் இறைவாக்கினர் தங்களுக்கு அறிவிக்கும் வரையில், அவைகளைக் கடவுள் ஆலயமிருந்த மலையில் ஒரு தகுந்த இடத்தில் பத்திரப்படுத்தினார்கள்.
47 கட்டளைப்படி முழுக்கற்களைக் கொண்டு முன்னிருந்த வண்ணம் புதிதான பீடத்தைக் கட்டினார்கள்.
48 புனித இடத்தையும் கடவுள் ஆலயத்துள் இருந்த மற்றக் கட்டடங்களையும் கட்டினார்கள். ஆலயத்தையும் முகப்பு வாயிலையும் புனிதப்படுத்தினார்கள்,
49 புதிதான பாத்திரங்களைச் செய்து புனிதப்படுத்தி, விளக்குத் தண்டுகளையும், சாம்பிராணிப் பீடத்தையும், மேசையையும் ஆலயத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
50 பீடத்தின் மீது சாம்பிராணி ஏற்றி, தண்டுகளின் மேலிருந்த விளக்குகளைக் கொளுத்தவே கடவுள் ஆலயம் ஒளிர்ந்தது.
51 மேசையின் மேல் அப்பங்களை வைத்து அலுவல்களையெல்லாம் முடித்தார்கள்.
52 நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு காஸ்பேயு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் பொழுது விடியு முன் எழுந்திருந்து,
53 கட்டளைப்படி தாங்கள் செய்திருந்த புதுப்பீடத்தின் மேல் பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
54 புறவினத்தார் கடவுள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தின நேரத்திலும் நாளிலும், இன்னிசைகளாலும் வீணைகளாலும் இசைக் கருவிகளாலும் மணிகளாலும் கடவுள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
55 எல்லா மக்களும் முகம் குப்புற விழுந்து, தங்களுக்கு உதவியாய் இருந்த கடவுளை ஆராதித்து வானமட்டும் வாழ்த்தினார்கள்.
56 எட்டு நாள் வரையிலும் பீடக் காணிக்கை செலுத்தி, மகிழ்ச்சியோடு பலிகளை ஒப்புக்கொடுத்து, நன்றிக்கு அடையாளமாகவும், வாழ்த்துக்காகவும் காணிக்கை செலுத்தினார்கள்.
57 பொன்முடிகளாலும் பதக்கங்களாலும் கடவுள் ஆலயத்தின் முகப்பை அலங்கரித்து, நிலைகளையும் பக்கத்து அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.
58 மக்களுக்குள் நிறைந்த அக்களிப்பு உண்டாக, அதுவரையிலும் அவர்கள் பட்ட அவமானம் நீங்கினது.
59 யூதாசும் அவர் சகோதரரும் இஸ்ராயேலர் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் ஆண்டு தோறும் காஸ்லேயு மாதம் இருபத்தைந்தாம் நாள் முதல் எட்டு நாள் வரையிலும் அக்களிப்போடும் அகமகிழ்ச்சியோடும் பீடக்காணிக்கை கொண்டாடப்பட வேண்டுமென்று தீர்மனித்தார்கள்.
60 அக்காலத்திலேயே சீயோன் மலையை வலுப்படுத்தி, சுற்றிலும் உயர்ந்த மதில்களையும் உறுதியான கோபுரங்களையும், முன்போலத் திரும்பவும் புறவினத்தார் தீட்டுப்படுத்தாத விதமாய்க் கட்டினார்கள்.
61 அதைக் காக்கும்படி படைகளை அவ்விடத்தில் நிறுத்தி. இதுமேயா நாட்டினரை எதிர்த்துத் தள்ள பெத்சூராவையும் அவர் வலுப்படுத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, கடவுள், அவர், ஏனென்றால், கண்டு, யூதாஸ், யூதாசும், மீது, வரையிலும், ஏற்பாடு, இருந்த, அவன், பழைய, தங்கள், கொண்டு, நாள், ஐயாயிரம், படைகளும், போர், நமக்கு, எல்லாரும், மக்கபே, ஆண்டு, புறவினத்தார், தங்களுக்கு, கட்டினார்கள், ஆலயம், தீட்டுப்படுத்தப்பட்ட, இப்போது, ஆகமம், ஆலயத்தைத், கடவுளை, மேல், மலையில், பகைவர், கோர்ஜியா, வந்து, அவர்களை, நோக்கி, பீடத்தையும், வாயிலையும், அறைகளையும், முகப்பு, இடத்தையும், சகோதரரும், திரும்பவும், புனித, தூய்மைப், சீயோன், குப்புற, இடத்தில், இருபத்தைந்தாம், மாதம், கோட்டையில், எட்டு, காணிக்கை, இருந்தவர்கள், புதிதான, லிசியாஸ், என்ன, ஆன்மிகம், கட்டளைப்படி, விழுந்து, கையால், வலிமை, அன்னியர், இல்லை, வந்தார், படைகள், இதுமேயா, சொன்னார், எல்லா, வைத்து, படையோடு, செய்து, கண்டார்கள், படையை, திரும்பி, பாளையம், குதிரை, வீரரையும், யூதேயா, பார்த்து, பெரிய, விட்டார்கள், இஸ்ராயேல், மூவாயிரம், திருவிவிலியம், போது, பொழுது, வாழ்த்தினார்கள், அழித்து