2 அரசர் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 15
2 அப்பொழுது அவனுக்கு வயது பதினாறு. யெருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். யெருசலேம் நகரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் எக்கேலியா.
3 அவன் தன் தந்தை அமாசியாசு செய்தபடி ஆண்டவர் திருவுளத்தையே நிறைவேற்றி வந்தான்.
4 ஆயினும் (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அங்கே பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
5 இதனால் ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்தார். அவன் தன் இறுதி நாள் வரை தொழுநோய்ப்பட்டு, தனியே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தான். அரசனின் மகன் யோவாத்தான் அரண்மனையில் அதிகாரியாய் இருந்து நாட்டு மக்களுக்கு நீதி வழங்கினான்.
6 அசாரியாசின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் யூதாவின் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
7 அசாரியாசு தன் முன்னோரோடு துயில் கொள்ள, அவனைத் தாவீதின் நகரில், அவனுடைய முன்னோருக்கு அருகே அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோவாத்தான் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
8 யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில் எரோபோவாமின் மகன் சக்கரியாசு சமாரியாவில் இஸ்ராயேலை ஆறுமாதம் ஆண்டான்.
9 இவனும் தன் முன்னோர்கள் செய்தது போல் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து வந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமுடைய பாவ வழிகளை விட்டு அவன் விலகவில்லை.
10 ஜாபேசின் மகன் செல்லும் அவனுக்கு எதிராய்ச் சதி செய்து அவனை வெளிப்படையாய்க் கொன்று விட்டு, ஆட்சியைக் கைப்பற்றினான்.
11 சக்கரியாசின் மற்றச் செயல்கள் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
12 உன் புதல்வர் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருப்பர்" என்று ஆண்டவர் ஏகுவுக்குக் கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.
13 யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஜாபேசின் மகன் செல்லும் அரசன் ஆனான். ஆனால் சமாரியாவில் அவன் ஒரு மாதந்தான் ஆட்சி புரிந்தான்.
14 காதின் மகன் மனோகேம் தேர்சாவிலிருந்து புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்து, ஜாபேசின் மகன் செல்லுமைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பதிலாக அரியணை ஏறினான்.
15 செல்லுமினுடைய மற்ற எல்லாச் செயல்களும் அவன் செய்த சதியும் இஸ்ராயேல் மன்னர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
16 அக்காலத்தில் மனோகேம் தாப்சா நகரை அழித்துவிட்டு, தேர்சா முதல் அதன் எல்லைகள் வரையுள்ள குடிகளையும் கொன்றான். அன்றியும் கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.
17 யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் காதின் மகன் மனோகேம் இஸ்ராயேலின் அரசனாகி சமாரியாவில் பத்து ஆண்டுகள் அரசாண்டான்.
18 ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அன்றியும் தன் வாழ்நாள் முழுதும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளைவிட்டு அவன் விலகினானில்லை.
19 அசீரியாவின் அரசன் பூல் இஸ்ராயேல் நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்போது மனாகேம் பூலின் உதவியால் தன் ஆட்சி நிலைபெறும் பொருட்டு, ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளிக்காசுகள் கொடுத்தான்.
20 மனோகேம் இப்பணத்தை இஸ்ராயேலிலுள்ள வலியோர், செல்வந்தர் முதலியவர்களிடமிருந்து வசூல் செய்திருந்தான். ஆள் ஒன்றுக்கு ஐம்பது சீக்கல் வெள்ளி வீதம் அசீரியா அரசனுக்குக் கொடுக்கும்படி பணித்தான். எனவே அசீரியா அரசன் நாட்டில் சிறிதும் தாமதியாது திரும்பிவிட்டான்.
21 மனாகேமின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் இஸ்ராயேல் அரசருடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
22 மனாகேம் தன் முன்னோரோடு துயில் கொண்டான். அவனுடைய மகன் பசேயா அவனுக்குப்பின் அரசனானான்.
23 யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் ஐம்பதாம் ஆண்டில் மனாகேமின் மகன் பசேயா இஸ்ராயேலுக்கு அரசனாகி சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி புரிந்தான்.
24 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளைவிட்டு அவன் விலகவில்லை.
25 ரொமேலியாவின் மகனும், படைத்தலைவனுமான பாசே அவனுக்கு எதிராகச் சதி செய்து தன்னோடு இருந்த ஐம்பது காலாத்தியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோபுரத்திற்கு வந்து, அக்கோப், அரியே ஆகியவர்களின் முன் அரசனைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
26 பசேயாவின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் எழுதப் பட்டுள்ளன.
27 யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் ஐம்பத்திரண்டாம் ஆண்டில் ரொமேலியாவின் மகன் பாசே இஸ்ராயேலுக்கு அரசனாகி இருபது ஆண்டுகள் அரசாண்டான்.
28 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அன்றியும் அவன் இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளை விட்டு விலகவில்லை.
29 இஸ்ராயேல் அரசன் பாசேயுடைய ஆட்சி காலத்தில், அசீரியரின் அரசன் தெகிளாத்-பலசார் இஸ்ராயேல் நாட்டின் மீது படையெடுத்து வந்து அயியோனையும், மவாக்காவிலுள்ள அபேல் என்ற இடத்தையும், ஜானோயே, கேதஸ், அசோர், காலாத், கலிலேயா ஆகிய இடங்களையும், நெப்தலி நாடு முழுவதையும் பிடித்ததுமன்றி, அந்நாட்டுக் குடிகளையும் சிறைப்பிடித்து அசீரியா நாட்டிற்குக் கொண்டு போனான்.
30 ஏலாவின் மகன் ஒசேயோ ரொமேலியாவின் மகன் பாசேயுக்கு எதிராகச் சதி செய்து, பதுங்கியிருந்து கொண்டு அவனைத் தாக்கிக் கொன்று போட்டான். ஒசியாசின் மகன் யோவாத்தாமின் ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அவனுக்குப்பின் இவன் அரியணை ஏறினான்.
31 பாசேயின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் வரையப் பட்டுள்ளன.
32 இஸ்ராயேலின் அரசனும் ரொமேலியாவின் மகனுமான பாசேயினுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசன் ஒசியாசின் மகன் யோவாத்தான் தன் ஆட்சியைத் தொடங்கினான்.
33 அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. இவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சாதோக்கின் மகளான அவன் தாயின் பெயர் எருசா.
34 அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து கொண்டு, தன் தந்தை ஒசியாசு காட்டிய வழியைப் பின்பற்றினான்.
35 ஆயினும் (விக்கிரக ஆராதனைக்கென அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளின் மேல் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். ஆலயத்தின் உயர்ந்த வாயிலைக் கட்டியவன் இவனே.
36 யோவாத்தாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசருடைய நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
37 அந்நாட்களில் ஆண்டவர் சீரியாவின் அரசன் ரசீனையும் ரொமேலியாவின் மகன் பாசேயையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார்.
38 யோவாத்தாம் தன் முன்னோரோடு துயில் கொள்ள, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் ஆக்காசு அவனுக்குப் பின் அரசன் ஆனான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 அரசர் ஆகமம் - பழைய ஏற்பாடு, மகன், அவன், அரசன், யூதாவின், ஆண்டவர், இஸ்ராயேல், ஆட்சியின், ஆண்டில், நூலில், நடபடி, செயல்களும், மற்றச், ஆட்சி, புரிந்தான், அவனுடைய, திருமுன், யாவும், ரொமேலியாவின், அரியணை, எரோபோவாமின், ஏற்பாடு, ஏறினான், இஸ்ராயேலைப், சமாரியாவில், பழைய, பாவம், நாபாத்தின், இஸ்ராயேலின், செய்த, பாவத்திற்கு, அவனுக்குப்பின், அவனுக்கு, வந்தான், மனோகேம், ஆண்டுகள், எழுதப்பட்டுள்ளன, ஆகமம், முன்னோரோடு, துயில், செய்து, அன்றியும், அசாரியாசினுடைய, அரசர், அசாரியாசின், கொண்டு, ஆளாக்கிய, அசீரியா, விட்டு, ஜாபேசின், வந்து, அரசரின், விலகவில்லை, யோவாத்தான், அரசனாகி, கொன்றுவிட்டு, காதின், படையெடுத்து, எதிராகச், பாசே, இஸ்ராயேலுக்கு, பட்டுள்ளன, ஒசியாசின், செய்தவை, இவன், யோவாத்தாமின், பசேயா, அரசருடைய, வழிகளைவிட்டு, அரசாண்டான், கொன்றான், ஆனான், மனாகேம், மனாகேமின், ஐம்பது, குடிகளையும், கொள்ள, தந்தை, பெயர், ஆயினும், விக்கிரக, மேடுகளை, அமைக்கப்பட்டிருந்த, தாயின், யெருசலேமில், ஆன்மிகம், திருவிவிலியம், அசாரியாசு, வயது, பதினாறு, அழிக்கவில்லை, மக்கள், அடக்கம், நகரில், வழிகளை, செல்லும், வரையப்பட்டுள்ளன, கொன்று, தாவீதின், அவனைத், பலியிட்டும், இன்னும், தூபம், காட்டியும், வந்தனர், முப்பத்தொன்பதாம்