யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 5
2 எனவே அவன் கடும் கோபமுற்றுக் கொதித்தெழுந்தான்@ மோவாபின் மக்கள் தலைவர்களையும், அம்மோனியப் படைத்தலைவர்களையும் தன்னிடம் வரவழைத்தான்,
3 அவர்களை நோக்கி, "மலைகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிற அந்த மக்கள் யார்? அவர்களின் நகர்கள் எவை? எப்படிப்பட்டவை? எத்துனைப் பெரியவை? அவர்களது படைப்பலம் யாது? அவர்கள் எத்தனை பேர்? அவர்களது படையை நடத்தி வரும் அரசன் யார்?
4 கீழ்நாட்டவர் அனைவரிலும் இவர்கள் மட்டும் எங்களை வெறுப்பது ஏன்? எங்களைச் சமாதானமாய் வரவேற்கும் பொருட்டு எங்களைச் சந்திக்க வராததன் காரணம் என்ன?" என்று கேட்டான்.
5 அப்பொழுது அம்மோனியர் அனைவருக்கும் தலைவனான ஆக்கியோர் அவனை நோக்கி, "தலைவா நீர் எனக்குச் செவிமடுக்க மனம் கொண்டால் மலைவாசிகளான இம்மக்கள் யார் என்று உமக்கு முன்பாக உண்மையைச் சொல்வேன்.
6 நான் சொல்வது பொய் இல்லை. இம் மக்கள் கல்தேயர் வழிவந்தோர் ஆவர்.
7 அவர்கள் கல்தேயா நாட்டிலிருந்த தங்கள் முன்னோர்களின் தெய்வங்களை வழிபட மனமில்லாததால் முதன் முதல் மெசொபோத்தேமியாவில் குடியேறினர்.
8 இவ்வாறு பற்பல தெய்வங்களை வழிபட்டு வந்த அவர்கள் தங்கள் முன்னோரின் வழிமுறைகளை விட்டு விட்டு, விண்ணகக் கடவுளான ஒரே ஆண்டவரை வழிபட்டனர்.
9 அவரோ அவர்களை அங்கிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டில் குடியேறக் கட்டளையிட்டார். பிறகு நாடெங்கும் பஞ்சம் ஏற்பட்டது. எனவே அவர்கள் எகிப்துக்குச் சென்று அங்கு நானூறு ஆண்டுகள் தங்கியிருந்தனர். அதற்குள் அவர்கள் எண்ணமுடியாத அளவுக்குப் பெருகிவிட்டனர்.
10 எகிப்திய அரசன் அவர்களை வாட்டி வதைத்துச் செங்கல், சுண்ணாம்பைக் கொண்டு தன் நகர்களைக் கட்டக் கட்டாயப்படுத்தினான். ஆதலால் அவர்கள் தங்கள் ஆண்டவரை நோக்கிக் கதறி அழுதனர். எனவே அவர் பற்பல கொள்ளை நோய்களால் எகிப்து நாட்டை வதைத்தார்.
11 எகிப்தியர் தங்கள் நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றின பின், அந்தக் கொள்ளை நோய்கள் அவர்களை விட்டு நீங்கின. அதைக்கண்ட எகிப்தியர் மீண்டும் அவர்களைப் பிடித்துத் தங்களுக்குக் கீழ்ப்படுத்த விரும்பினர்.
12 ஆனால் தப்பிச்சென்ற அவர்களுக்கு முன்பாக விண்ணகக் கடவுள் கடலை இரண்டாகப் பிரித்தார். உடனே இருமருங்கிலும் தண்ணீர் பலத்த சுவரைப் போல் நின்றது. அவர்களும் கால் நனையாமல் கடலைக் கடந்து சென்றார்கள்.
13 எண்ணற்ற எகிப்தியப் படைவீரர்கள் அவ்வழியே அவர்களைப் பின்தொடர்ந்தனர். அப்பொழுது தண்ணீர் திரும்பவும் ஒன்று திரண்டு எகிப்தியரை மூடிற்று. நடந்தது பற்றித் தம் சந்ததியாருக்குச் சொல்லும்படி அவர்களில் ஒருவன் கூட உயிர் தப்பவில்லை.
14 இஸ்ராயேலரோ செங்கடலைக் கடந்து அதுவரை மனிதர் வாழ இயலாததும், மனிதன் எவனும் வாழ்ந்திராததுமான சீனாய் மலைப் பாலைவனத்தில் குடியேறினர்.
15 அவ்விடத்துக் கசப்பான நீர் ஊற்றுகள் அவர்கள் குடிக்கத் தக்க இனிய நீரைச் சுரந்தன. மேலும் வானினின்று நாற்பது ஆண்டுகளாய் உணவு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
16 வில், வேல், கேடயம், வாள் முதலியன இன்றி அவர்கள் சென்றவிடமெல்லாம் அவர்களுடைய கடவுளே அவர்களோடு இருந்து எதிரிகளைத் தோற்கடித்தார்.
17 அவர்கள் தங்கள் ஆண்டவரான கடவுளை வழிபடாத நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் யாரும் அவர்களைத் தோற்கடித்தது கிடையாது.
18 எவ்வெப்போது அவர்கள் தங்கள் கடவுளை விட்டு அந்நிய தெய்வங்களை வழிபட்டார்களோ, அவ்வப்போதெல்லாம் அவர்கள் கொள்ளைக்கும் வாளுக்கும் நிந்தைக்கும் உள்ளானார்கள்.
19 ஆனால் அவர்கள் எத்தனை முறை தங்கள் கடவுளின் வழிப்பாட்டைத் தவிர்த்ததற்காக மனம் வருந்தினார்களோ, அத்தனை முறையும் விண்ணகக் கடவுள் அவர்களுடைய எதிரிகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலை அவர்களுக்குக் கொடுத்தார்.
20 இவ்வாறு அவர்கள் கானானியர், யெபுசையர், பெரேசையர், ஏத்தையர், ஏவையர், அமோறையர் முதலியோரின் அரசர்களையும் ஏசேபோனின் எல்லா வலியோரையும் வென்று அவர்கள் நாடுகளையும் நகர்களையும் கைப்பற்றி வந்தனர்.
21 அவர்கள் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யாத வரையில் அவர்களுக்கு எல்லாம் நன்மையாகவே முடிந்தது@ ஏனெனில் அவர்களுடைய கடவுள் பாவத்தை வெறுக்கிறார்.
22 உண்மையிலேயே சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் நடந்தொழுக வேண்டுமென்று கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த நெறியை விட்டு விலகினதால், அவர்கள் பல நாட்டவரால் போரில் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சிறைப்படுத்தப்பட்டு அந்நிய நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டனர்.
23 சிறிது காலத்திற்குப் பின் அவர்கள் தங்கள் ஆண்டவரான கடவுளின் பக்கம் மனந்திரும்பவே அவர்கள் சிதறிக் கிடந்த நாட்டிலிருந்து வந்து மீண்டும் ஒன்று சேர்ந்து இம்மலைப்புறமெங்கும் குடியேறித் தங்கள் கடவுளின் ஆலயம் அமைந்திருந்த யெருசலேமை மறுபடியும் சொந்தமாக்கிக் கொண்டனர்.
24 இச் சூழ்நிலையில், என் தலைவ, அவர்கள் தங்கள் கடவுளுக்கு எதிராக ஏதாவது பாவம் செய்ததுண்டா என்று விசாரித்துப் பாரும்@ அப்படிச் செய்திருந்தால் இப்போதே நாம் அவர்கள்மீது படையெடுக்கலாம். அவர்களின் கடவுளும் அவர்களை நமது கையில் ஒப்புவிப்பார். இவ்வாறு அவர்கள் உமக்கு அடிமைகள் ஆவார்கள்.
25 அவர்கள் தங்கள் கடவுளுக்கு எதிராக யாதொரு பாவமும் செய்யாதிருப்பின், அவர்களை எதிர்த்து நிற்க நம்மால் இயலாது. ஏனெனில் அவர்களுடைய கடவுளே அவர்களைப் பாதுகாப்பார். அதனால் நாம் பூமி எங்கனும் இகழப்படுவோம்" என்றான்.
26 ஆக்கியோர் இதைச் சொல்லி முடிக்கவே, ஒலொபெர்னெசுடைய படையின் மேல் அதிகாரிகள் அனைவரும் சினம் கொண்டு அவனைக் கொல்ல எண்ணினர்.
27 ஒருவர் ஒருவரைப் பார்த்து, "ஆயுதமற்றவரும் ஆற்றலற்றவரும் போரிடுவதில் தேர்ச்சியற்றவருமான இஸ்ராயேல் மக்கள் நபுக்கோதனசார் அரசையும், அவரது படையையும் எதிர்த்து நிற்க முடியும் என்று சொல்ல இவன் யார்?
28 ஆக்கியோர் சொன்னது பொய் என்று அவனே அறிந்து கொள்ளும்படி நாம் இப்போதே மலைகள் மீது படையெடுத்துச் செல்வோம். அவர்களுள் வலியோரைச் சிறைப்பிடித்த பின், அவர்களோடு இவனையும் வாளுக்கு இரையாக்குவோம்.
29 இதன் மூலம் நபுக்கோதனசார் ஒருவரைத் தவிர மண்ணில் வேறு கடவுள் இல்லை என்று எல்லா மக்களும் அறிந்துகொள்வர்" என்று கத்தினார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யூதித் ஆகமம் - பழைய ஏற்பாடு, தங்கள், அவர்களை, விட்டு, மக்கள், கடவுள், ஏற்பாடு, பழைய, ", யார், அவர்களுடைய, யூதித், நாம், இவ்வாறு, தெய்வங்களை, கொண்டு, அவர்களைப், கடவுளுக்கு, கடவுளின், எதிர்த்து, அவர்களுக்கு, பின், விண்ணகக், ஆகமம், ஆக்கியோர், கடவுளை, தவிர, அந்நிய, இஸ்ராயேல், அவர்களோடு, அவர்களில், தலைவனான, கடவுளே, ஆன்மிகம், ஆண்டவரான, எல்லா, இப்போதே, நிற்க, நபுக்கோதனசார், எதிராக, ஏனெனில், ஒன்று, திருவிவிலியம், பாவம், அவர்களுக்குக், தண்ணீர், குடியேறினர், பற்பல, அப்பொழுது, எங்களைச், நீர், மனம், முன்பாக, பொய், இல்லை, ஆண்டவரை, அரசன், அவர்களது, அவர்களின், நோக்கி, உமக்கு, மீண்டும், எத்தனை, கொள்ளை, எகிப்தியர், நாட்டிலிருந்து, கடந்து