யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 35
2 நீர் கடவுளைப் பார்த்து, ~உமக்கென்ன? நான் பாவம் செய்தால், உமக்கென்ன செய்தேன்?~ என்கிறீரே.
3 இப்படி நீர் சொல்வது சரியென நம்புகிறீரோ? கடவுள் முன் இது உம்மைக் குற்றமற்றவராக்கும் என்கிறீரோ?
4 உமக்கு நான் விடை கூறுவேன், உம் நண்பர்களுக்கும் மறுமொழி சொல்வேன்.
5 வான்வெளியை அண்ணாந்து நோக்கும், உமக்கு மேலே இருக்கும் மேகங்களைப் பாரும்.
6 நீர் பாவம் செய்தால் அவருக்கெதிராய் நீர் செய்வது என்ன? உம் அக்கிரமங்கள் பெருகுவதால், அவருக்கு நேரும் தீங்கு யாது?
7 நீர் நேர்மையாய் இருந்தால், அவருக்கு என்ன கிடைக்கும்? உம் கையிலிருந்து அவர் என்ன ?
8 உம் அக்கிரமத்தால் உம் போன்றவனுக்கே தீங்கு, மனிதனுக்குத் தான் உம் நேர்மையால் ஆதாயம்.
9 கொடுமைகளின் மிகுதியால் தான் மக்கள் கூக்குரலிடுகின்றனர், வல்லவனின் கைக்குத் தப்பவே உதவி கேட்டுக் கூப்பிடுகின்றனர்.
10 ஆனால், ~என்னை உண்டாக்கிய கடவுள் எங்கே? இரவில் பாடல்கள் பாடச் செய்பவரும்,
11 காட்டு மிருகங்களுக்குக் கற்பிப்பதை விட எங்களுக்கு மிகுதியாய்க் கற்பிப்பவரும், வானத்துப் பறவைகளை விட எங்களை ஞானிகளாக்குபவருமான கடவுள் எங்கே?~ என்று எவனும் கேட்பதில்லை.
12 அப்போது அவர்கள் கூக்குரலிடுகின்றனர், ஆயினும் பொல்லாதவர்களின் செருக்கை முன்னிட்டு அவர் அதற்குச் செவிசாய்க்கிறதில்லை.
13 உண்மையில் வீண் சொற்களுக்குக் கடவுள் செவிமடுப்பதில்லை, எல்லாம் வல்லவர் அவற்றைப் பொருட்படுத்துகிறதில்லை.
14 அப்படியிருக்க, ~நான் அவரைக் காண்கிறதில்லை, என் வழக்கு அவர்முன் இருக்கிறது, அவருக்காக நான் காத்திருக்கிறேன்~ என்று நீர் சொல்லும் போது, அதற்கு எப்படி அவர் செவிமடுப்பார்?
15 இப்பொழுது நீர், ~அவரது சினம் தண்டிப்பதில்லை, மனிதனின் மீறுதலை அவர் அறிவதில்லை போலும்~ என்கிறீர்.
16 ஆதலால்தான் யோபு வாய் திறந்து உளறுகிறார், அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகிறார்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு, நீர், ஏற்பாடு, கடவுள், அவர், யோபு, பழைய, நான், என்ன, ஆகமம், தீங்கு, எங்கே, கூக்குரலிடுகின்றனர், தான், செய்தால், திருவிவிலியம், ஆன்மிகம், பாவம், உமக்கு, அவருக்கு