எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 42
2 எரெமியாஸ் இறைவாக்கினரிடம் வந்து, அவரைப் பார்த்து, "எங்கள் தாழ்மையான கோரிக்கையைக் கேளும்@ எங்களுக்காகவும், எஞ்சியிருக்கும் இவர்கள் அனைவருக்காகவும் உம்முடைய கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்@ (ஏனெனில் இப்பொழுது நீரே காண்பது போல, மிகச் சிலரே எஞ்சியிருக்கிறோம்)
3 உம்முடைய கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் ஒழுக வேண்டிய நெறியையும், செய்யவேண்டிய செயல்களையும் எங்களுக்குக் காட்டும்படி கேளும்" என்றார்கள்.
4 இறைவாக்கினரான எரெமியாஸ் அவர்களை நோக்கி, "நீங்கள் சொன்னதைக் கேட்டேன்@ நீங்கள் என்னைக் கேட்டுக் கொண்டவாறே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவேன்@ அவர் என்ன மறுமொழி சொல்லுகிறாரோ, அதை மறைக்காமல் உங்களுக்கு முற்றிலும் தெரிவிப்பேன்" என்றார்.
5 அப்போது அவர்கள் எரெமியாசைப் பார்த்து, "உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் பேரால் நீர் எங்களுக்குச் சொல்லும் எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்றபடி நடப்போம்@ இதற்கு உண்மையும் பிரமாணிக்கமும் உள்ள சாட்சியாக ஆண்டவரே இருக்கட்டும்!
6 நன்மையோ தீமையோ எதுவாயினும், ஆண்டவராகிய நம் கடவுளுடைய வார்த்தைக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்@ அவரிடமே நாங்கள் உம்மை அனுப்புகிறோம்@ நாங்கள் ஆண்டவராகிய நம் கடவுளின் வார்த்தையைக் கேட்டு நலமாயிருப்பதே எங்கள் பேரவா" என்றார்கள்.
7 பத்து நாட்களுக்குப் பிறகு, ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது@
8 அவர் காரை மகன் யோகானானையும், அவனோடிருந்த எல்லாப் போர்வீரர்களுடைய தலைவர்களையும், சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லா மக்களையும் அழைத்து, அவர்களுக்கு அறிவித்த செய்தி இதுவே:
9 உங்கள் தாழ்மையான கோரிக்கையைத் தெரிவிக்குமாறு நீங்கள் என்னை அனுப்பிய இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்:
10 நீங்கள் இந்நாட்டிலேயே தங்குவீர்களாகில், உங்களை உறுதியாய்க் கட்டியெழுப்புவோம்@ அழிக்கமாட்டோம்@ உங்களை நிலைநாட்டுவோம்@ பிடுங்கி ஏறிய மாட்டோம்@ இந்நேரம் வரையில் உங்களுக்கு நாம் அனுப்பிய துன்பங்களை முன்னிட்டு நாம் மனம் வருந்துகிறோம்.
11 நீங்கள் பயந்து நடுங்கும் பபிலோனிய அரசனுக்கு இனி அஞ்ச வேண்டாம்@ அவனுக்குப் பயப்பட வேண்டாம்@ ஏனெனில் உங்களை மீட்கவும், அவன் கைகளிலிருந்து உங்களை விடுவிக்கவும் உங்களோடு நாம் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
12 நாம் உங்கள்மேல் நம் இரக்கத்தைப் பொழிவோம்@ உங்கள்மேல் மனமிரங்கி, உங்களை உங்கள் நாட்டிலேயே குடியிருக்கச் செய்வோம்.
13 ஆனால் நீங்கள், ~இந்த நாட்டில் நாங்கள் தங்கியிருக்க மாட்டோம்~ என்று சொல்லி, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தையை மீறினால்,
14 முடியாது, நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம்@ அங்கே போர் இருக்காது@ போர் முரசு கேட்காது@ உணவுப் பஞ்சம் இராது@ அங்கேயே நாங்கள் தங்கி வாழ்வோம்~ என்று சொல்வீர்களானால்,
15 யூதாவில் எஞ்சியிருப்பவர்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்: இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் எகிப்து நாட்டுக்குப் போய் அங்கே குடியிருக்க எண்ணுவீர்களானால்,
16 நீங்கள் இங்கு அஞ்சும் வாளே உங்களை எகிப்து நாட்டில் வந்து வளைத்துக் கொள்ளும்@ உங்களுக்கு இங்கே அச்சமூட்டும் பஞ்சம் எகிப்து நாட்டுக்கும் உங்களை விடாமல் தொடர்ந்து வரும்@ நீங்களோ அங்கேயே சாவீர்கள்.
17 எகிப்து நாட்டுக்குப் போய் அங்கேயே குடியிருக்கத் தீர்மானித்துப் புறப்படுகிறவர்கள் அனைவரும் அந்நாட்டிலேயே வாளாலும் பசியாலும் கொள்ளைநோயாலும் மடிவார்கள்@ நாம் அவர்கள் மேல் கொண்டு வரப்போகும் தீமையினின்று தப்பியவனோ எஞ்சியவனோ அவர்களுள் காணப்படமாட்டான்.
18 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் குடிகள் மேல் நம்முடைய கோபமும் ஆத்திரமும் மூண்டெழுந்தது போல, நீங்கள் எகிப்து நாட்டுக்குள் நுழையும் போது உங்கள் மேலும் நம் ஆத்திரம் மூண்டெழும்@ அங்கே நீங்கள் பகைமைக்கும் திகைப்புக்கும் சாபத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாவீர்கள்@ மீண்டும் இந்நாட்டை நீங்கள் என்றென்றைக்கும் பார்க்கவே மாட்டீர்கள்.
19 யூதாவில் எஞ்சியிருப்பவர்களே, ~எகிப்துக்குப் போகவேண்டாம்~ என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லி விட்டார்@ நானும் உங்களுக்கு இன்று எச்சரிக்கை செய்தேன் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்@
20 நீங்கள் எகிப்துக்குப் போனால் உங்கள் உயிருக்குத் தீங்கு தேடிக்கொள்வீர்கள்@ ஏனெனில் நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அனுப்பி, ~நம் கடவுளாகிய ஆன்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்@ நம் கடவுளாகிய ஆண்டவர் சொல்வதையெல்லாம் தெரியப்படுத்தும்@ நாங்கள் அவ்வாறே நடப்போம்~ என்று என்னிடம் சொன்னீர்கள்.
21 இன்று நான் அதை உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்@ நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்னவற்றில் எதையும் கேட்டு அதன்படி நடக்கவில்லை.
22 ஆதலால் இதைத் திண்ணமாய் அறிந்து கொள்ளுங்கள்: நீங்கள் குடியேறி வாழ நினைத்திருக்கும் அந்த இடத்திலேயே வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவீர்கள்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, நீங்கள், கடவுளாகிய, ஆண்டவர், உங்கள், நாங்கள், உங்களை, எகிப்து, நாம், உங்களுக்கு, ஏற்பாடு, பழைய, ", ஏனெனில், எரேமியாஸ், இஸ்ராயேலின், கூறுகிறார், ஆகமம், அங்கேயே, அங்கே, நாட்டுக்குப், போர், என்னை, மகன், உம்முடைய, பார்த்து, பஞ்சம், எங்கள், சொல்லி, வந்து, தாழ்மையான, யூதாவில், வாளாலும், மேல், இன்று, நீங்களோ, போய், எஞ்சியிருப்பவர்களே, சேனைகளின், நாட்டில், வேண்டாம்@, எல்லா, ஆண்டவராகிய, காரை, அவர், ஆன்மிகம், திருவிவிலியம், கேட்டு, ஆண்டவருடைய, ஆண்டவரிடம், என்றார்கள், மன்றாடும்@, அனுப்பிய, எரெமியாஸ், உங்கள்மேல்