எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 35
2 நீ இரெக்காபித்தருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடு பேசி, அவர்களை ஆண்டவரின் கோயிலுக்கு, அதிலுள்ள கருவூல அறைகளுள் ஒன்றுக்கு அழைத்துக் கொண்டு போ@ அங்கே அவர்களுக்கு குடிக்க இரசம் கொடு" என்றார்.
3 அவ்வாறே நான் ஹப்சானியாசின் மைந்தன் எரெமியாசின் மகன் யேஜோனியாசையும், அவன் சகோதரர் எல்லாரையும், அவன் பிள்ளைகள் அனைவரையும், இரெக்காபித்தர் வீட்டார் யாவரையும் அழைத்துக் கொண்டு,
4 கடவுளுக்கு உகந்த யேஜேதேலியாசின் மகனான ஹானான் என்பவனின் மக்களிருக்கும் கருவூல அறைக்கு ஆண்டவரின் கோயிலுள் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனேன்@ அது தலைவர்களின் கருவூல அறைக்கு அருகில் இருந்தது@ அது வாயிற் காவலான செல்லோம் என்பவனின் மகனான மவாசியாசின் கருவூல அறைக்கு மேலே இருந்தது.
5 இரெக்காபித்தர் வீட்டின் மக்கள் முன்னிலையில் இரசம் நிறைந்த குடங்களையும் பாத்திரங்களையும் வைத்து, அவர்களை நோக்கி, ",இரசம் குடியுங்கள்" என்றேன்.
6 அவர்கள், "நாங்கள் இரசம் குடிக்க மாட்டோம்@ ஏனெனில், இரெக்காபின் மகனும் எங்கள் தந்மையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்: ~நீங்களும் உங்கள் மக்களும் என்றென்றும் இரசம் பருகாதீர்கள்@
7 நீங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டாம்@ விதை விதைக்க வேண்டாம்@ திராட்சைக் கொடிகள் நட வேண்டாம். திராட்சைத் தோட்டங்கள் வைக்க வேண்டாம்@ ஆனால் நீங்கள் வழிப் போக்கராய் இருக்கும் இந்தப் பூமியில் நெடுங்காலம் வாழும்படிக்கு உங்கள் வாழ்நாளெல்லாம் கூடாரங்களில் குடியிருங்கள்~ என்றார்.
8 நாங்களோ எல்லாவற்றிலும் இரெக்காபின் மகனான எங்கள் தந்தை யோனதாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, நாங்களும் எங்கள் மனைவியரும் எங்கள் புதல்வர், புதல்வியரும் எங்கள் வாழ்நாளெல்லாம் இரசம் பருகவில்லை@
9 நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டிக்கொள்ளவில்லை@ திராட்சைத் தோட்டமோ கழனியோ விதையோ எங்களுக்கில்லை@
10 ஆனால் நாங்கள் கூடாரங்களில் குடியிருக்கிறோம்@ எங்கள் தந்தை யோனதாவு எங்களுக்குக் கற்பித்த எல்லாவற்றுக்கும் அமைந்து நடந்து வருகிறோம்.
11 ஆனால், பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் எங்கள் நாட்டின் மேல் படையெடுத்த போது, நாங்கள், ~கல்தேயர் படையும் சீரியர் படையும் வருகின்றன@ வாருங்கள், நாம் யெருசலேமுக்கு ஓடிவிடுவோம்~ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு, யெருசலேமுக்கு வந்தோம், இங்கேயே வாழ்கிறோம்" என்று சொன்னார்கள்.
12 அன்றியும் ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
13 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீ போய் யூதாவின் மனிதரையும், யெருசலேமின் குடிகளையும் பார்த்து, ~நீங்கள் திருந்தி நமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியமாட்டீர்களோ?~ என்று சொல், என்கிறார் ஆண்டவர்.
14 இரெக்காபு மகன் யோனதாபு இரசம் குடிக்க வேண்டாமெனத் தன் மக்களுக்குச் சொன்ன வார்த்தைகளை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அவர்கள் இந்நாள் வரையில் இரசம் பருகவில்லை@ ஏனெனில் தங்கள் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள்@ நாமோவெனில் தொடக்கத்திலிருந்து திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை@
15 திரும்பத் திரும்ப நாம் நம் ஊழியர்களான இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பி, ~நீங்கள் அனைவரும் உங்கள் தீய நெறியை விட்டுத் திரும்பி, உங்கள் செயல்களைச் செவ்வைப்படுத்துங்கள்@ அந்நிய தெய்வங்களைப் பின் செல்லாதீர்கள்@ அவர்களை வணங்காதீர்கள்@ நம் சொற்படி நடந்தால் உங்களுக்கும் உங்கள் தந்தையர்க்கும் நாம் கொடுத்த இந்நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்~ என்று சொன்னோம்@ நீங்களோ நமக்குச் செவி சாய்க்கவுமில்லை, கேட்கவுமில்லை@
16 இரெக்காபுடைய மகன் யோனதாபின் மக்கள் தங்கள் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடித்தார்கள்@ இம்மக்களோ நமக்குக் கீழ்ப்படியவில்லை.
17 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் யூதாவின் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், ஏற்கெனவே நாம் அவர்களுக்கு விரோதமாய் அறிவித்திருந்த எல்லாவகையான துன்பங்களையும் கொண்டுவருவோம்@ ஏனெனில் அவர்களுக்குச் சொன்னோம், அவர்கள் கேட்கவில்லை@ அவர்களை அழைத்தோம், அவர்கள் மறுமொழி தரவில்லை."
18 எரெமியாஸ் இரெக்காபித்தரின் வீட்டாருக்கு, "இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் உங்கள் தந்தையாகிய யோனதாபின் கட்டனைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கட்டளைகளையெல்லாம் கடைபிடித்து, அவன் விதித்ததையெல்லாம் நிறைவேற்றி வந்தீர்கள்@
19 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நம் திருமுன் நிற்பதற்கேற்றவன் இரெக்காபின் மகன் யோனதாபின் சந்ததியில் எப்போதுமே இருப்பான்" என்று அறிவித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, இரசம், எங்கள், உங்கள், நீங்கள், ஆண்டவர், மகன், ஏற்பாடு, நாம், கொண்டு, நாங்கள், கருவூல, கூறுகிறார், ", பழைய, சேனைகளின், கடவுளாகிய, இஸ்ராயேலின், அவர்களை, வேண்டாம்@, அறைக்கு, ஏனெனில், இரெக்காபின், மகனான, எரேமியாஸ், அவன், குடிக்க, யெருசலேமின், ஆகமம், மேலும், யோனதாபின், யூதாவின், யெருசலேமுக்கு, படையும், அனைவர், ஆதலால், குடிகள், திரும்ப, ~நீங்கள், பருகவில்லை@, தங்கள், தந்தையின், திரும்பத், கேட்கவில்லை@, யோனதாபு, அருளப்பட்டது, போய், ஆண்டவரின், அழைத்துக், எரெமியாசுக்கு, வாக்கு, திருவிவிலியம், ஆன்மிகம், ஆண்டவருடைய, அவர்களுக்கு, என்றார், திராட்சைத், வாழ்நாளெல்லாம், கூடாரங்களில், தந்தை, வீடுகளைக், எங்களுக்குக், இரெக்காபித்தர், என்பவனின், மக்கள், கீழ்ப்படிந்து