இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 53
2 இளந்தளிர் போல் அவர் வளர்ந்தார், வறண்ட நிலத்திலிருக்கும் வேர் போலத் துளிர்த்தார்@ அவரைப் பார்த்தோம், அவரிடம் அழகோ அமைப்போ இல்லை@ கவர்ச்சியான தோற்றமும் இல்லை.
3 இகழப்பட்டவர், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவர்@ அவர் துன்புறும் மனிதனாய் துயரத்திலாழ்ந்தவராய் இருந்தார்@ கண்டோர் கண் மறைத்து அருவருக்கும் ஒரு மனிதனைப் போல், அவர் இகழப்பட்டார், நாம் அவரை மதிக்கவில்லை.
4 மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார், நம்முடைய நோய்களைச் சுமந்துகொண்டார்@ ஆனால் அவர் தண்டனைக்குள்ளானவர் எனவும், கடவுளால் ஒறுக்கப்பட்டவர் எனவும், வாதிக்கப் பட்டவர் எனவும் நாம் எண்ணினோம்.
5 ஆனால் நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்@ நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்.
6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழி தவறி அலைந்தோம், கால் போன வழியே ஒவ்வொருவரும் போனோம்@ நம் அனைவருடைய அக்கிரமங்களையும் ஆண்டவர் அவர் மேல் சுமத்தினார்.
7 அவர் கொடுமையாய் நடத்தப்பட்டார்@ தாழ்மையாய் அதைத் தாங்கிக்கொண்டார்@ அவர் வாய்கூடத் திறக்கவில்லை@ கொல்வதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டிபோலும், மயிர் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறியாடு போலும் அவர் வாய் திறக்கவில்லை.
8 கொடிய தீர்ப்புக்குப் பின் அவர் கொண்டு செல்லப்பட்டார், அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவன் யார்? ஆம், அவர் வாழ்வோர் உலகினின்று எடுக்கப்பட்டார், தம் இனத்தாரின் அக்கிரமங்களுக்காகவே அவர் வதைக்கப்பட்டார்.
9 பொல்லாதவர்களோடு அவருக்குக் கல்லறை தந்தார்கள், சாகும் போது அவர் தீமை செய்கிறவர்களோடு இருந்தார்@ ஆயினும் வன்முறைச் செயல் ஏதும் அவர் செய்தவர் அல்லர், அவருடைய வாயில் பொய்யே வந்ததில்லை.
10 அவரை வேதனையிலாழ்த்தி நொறுக்க ஆண்டவர் விரும்பினார். தம்மையே பாவத்திற்காக அவர் பலியாக்கினால், பெரியதொரு சந்ததியைக் கண்டு நீடுவாழ்வார்@ ஆண்டவரின் திருவுளம் அவர் கையால் நிறைவேறும்.
11 தம் ஆன்மா பட்ட வேதனையின் பலனை அவர் கண்டு நிறைவு கொள்வார்@ நம் ஊழியனாகிய அந்த நீதிமான் தமது அறிவினால் பலரை நீதிமான்களாக்குவார்@ அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்.
12 ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம், அவரும் வல்லவர்களோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வார்@ ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்@ ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், நாம், ஏற்பாடு, பழைய, ஆகமம், இசையாஸ், எனவும், அவருக்கு, ஆண்டவர், கொண்டு, கொள்வார்@, சுமந்து, தாமே, அவருடைய, கண்டு, ஆயினும், அவரை, யார், ஆன்மிகம், திருவிவிலியம், ஆண்டவரின், போல், அக்கிரமங்களுக்காகவே, இருந்தார்@, மேல்