இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 4
2 அந் நாளில் ஆண்டவரின் தளிர் அழகும் மகிமையும் வாய்ந்திருக்கும்@ நாட்டில் விளையும் நற்கனி, இஸ்ராயேலில் எஞ்சியோரின் மகிமையும் பெருமையுமாயிருக்கும்.
3 சீயோனில் எஞ்சி யிருப்பவர்களும் யெருசலேமில் விடப்பட்டவர்களும் புனிதர்கள் என்றே சொல்லப்படுவர்@ யெருசலேமில் வாழ்வதற்கெனப் பேரெழுதப்பட்டவன் ஒவ்வொருவனும் புனிதன் எனப்படுவான்.
4 ஆண்டவர் சீயோன் மகளின் அசுத்தத்தையும், யெருசலேமின் இரத்தக் கறைகளையும், நீதியின் ஆவியாலும் நெருப்பின் ஆவியாலும், அதினின்று கழுவித் தூய்மைப் படுத்துவார்@
5 பின்னர், சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், ஆங்கே கூடிவரும் சபைகள் மேலும், பகலில் மேகமும் இரவில் புகைப் படலமும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச்சுடரும் ஆண்டவர் தாமே படைத்தருள்வார்@ ஏனெனில், அனைத்திற்கும் மேலே ஆண்டவரின் மகிமை கவிகையாகவும் கூடாரமாகவும் இருக்கும்@
6 அது பகலில் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், மழைக்கும் காற்றுக்கும் தப்பிக்கப் புகலிடமும் பாதுகாப்புமாயிருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, இசையாஸ், எங்கள், ஆகமம், ஆவியாலும், சீயோன், மேலும், பகலில், ஆண்டவர், நெருப்பின், ஆண்டவரின், திருவிவிலியம், ஆன்மிகம், நாளில், மகிமையும், யெருசலேமில்