இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 39
2 அந்தத் தூதுவர்களை எசேக்கியாஸ் அன்போடு வரவேற்றான்@ மேலும் அவர்களுக்குத் தன் கருவூல அறையையும், வெள்ளி, பொன், நறுமணப் பொருட்கள், பரிமளத் தைலம் இவற்றையும், படைக்கலங்களின் கொட்டிலையும், தன் கிடங்குகளில் இருந்த எல்லாவற்றையும் காட்டினான். எசேக்கியாஸ் தன் அரண்மனையிலோ தன் ஆதீனத்திலோ அவர்களுக்குக் காட்டாதது ஒன்றுமே இல்லை.
3 அப்போது இசையாஸ் இறைவாக்கினர் எசேக்கியாஸ் அரசனிடம் வந்து, "இவர்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று கேட்டார். எசேக்கியாஸ், மிகத் தொலைவிலுள்ள நாடாகிய பபிலோனிலிருந்து என்னைக் காண வந்தனர்" என்று மறுமொழி சொன்னான்.
4 உன் அரண்மணையில் அவர்கள் என்ன பார்த்தார்கள்?" என்று அவர் கேட்க, எசேக்கியாஸ், "என் வீட்டிலுள்ள யாவற்றையும் பார்த்தார்கள்@ அவர்களுக்கு நான் காட்டாதது என் கிடங்குகளில் ஒன்றுமே இல்லை" என விடை கொடுத்தான்.
5 அப்போது, இசையாஸ் எசேக்கியாசைப் பார்த்து, "சேனைகளின் ஆண்டவரது வாக்கைக் கேள்:
6 இதோ நாட்கள் வருகின்றன@ அப்போது உன் வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களும், உன் தந்தையர் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் யாவும் பபிலோனுக்குக் கொண்டு போகப்படும்@ ஒன்றும் விடப்படாது என்கிறார் ஆண்டவர்.
7 உனக்குப் பிறக்கும் உன் சொந்த மக்களுள் சிலரும் கொண்டுபோகப்படுவர்@ அவர்கள் பபிலோன் அரசருடைய அரண்மனையில் அண்ணகராய் இருப்பார்கள்" என்று சொன்னார்.
8 எசேக்கியாஸ் இசையாசை நோக்கி, "நீர் கூறிய ஆண்டவருடைய வாக்கு நல்லது தான்" என்றான். மேலும், "என்னுடைய வாழ்நாட்களில் சமாதானமும் உண்மையும் நிலவினால் போதும்" என்று நினைத்துக் கொண்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ", எசேக்கியாஸ், இசையாஸ், ஏற்பாடு, பழைய, அப்போது, ஆகமம், ஒன்றுமே, வீட்டிலுள்ள, என்ன, காட்டாதது, மேலும், திருவிவிலியம், ஆன்மிகம், பபிலோன், பலாதான், கிடங்குகளில்