இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 35
2 வளமாக முளை கிளம்பித் தளிர் கொள்ளும், மகிழ்ச்சி பொங்கப் புகழ் கூறி நடனமாடும்@ லீபானின் மகிமை பாலைக்குக் கிடைக்கும், கர்மேல், சாரோன் அழகு அதனில் ஒளிரும், ஆண்டவருடைய மகிமை அங்கே விளங்கும், நம் கடவுளின் அழகொளி அங்கே புலனாகும்.
3 தளர்ந்துபோன கைகளை வலிமைப் படுத்துங்கள், நடுக்கமுற்ற முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.
4 உள்ளத்தில் உரமில்லாதவர்களை நோக்கி, "உறுதியாய் இருங்கள், அஞ்சவேண்டா@ இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருகிறார், வந்து கைம்மாறு கொடுப்பார், கடவுள் தாமே வந்து உங்ளை மீட்பார்" என்று சொல்லுங்கள்.
5 அப்போது குருடருடைய கண்கள் திறக்கப்படும், செவிடரின் காதுகள் கேட்கும் ஆற்றல் பெறும்@
6 அப்போது முடவன் மான் கன்று போலத் துள்ளுவான், ஊமைகளின் நாக்கு மகிழ்ச்சியால் பாடும்@ பாழ்வெளியில் நீரூற்றுகள் பீறிட்டுக் கிளம்பும், பாலை நிலத்தில் நீரோடைகள் வழிந்தோடும்.
7 கொதிக்கும் மணல் பரப்பு நீர் நிறைந்த குளமாகும், வறண்ட பூமி நீரூற்றுகள் நிறைந்திருக்கும்@ குள்ள நரிகள் குடியிருந்த குகைகளிலும் நாணல், கோரை முதலியவை முளைத்து வளரும்.
8 நெடுஞ்சாலையும் வழியும் அங்கே உண்டாகும். ~திருப்பாதை~ என்று அது பெயர் பெறும்@ அசுத்தர் அதன் வழியாய்ச் செல்ல மாட்டார்கள், உங்களுக்கு நேர் வழி அதுவே ஆகும், பேதைகளும் அதில் வழி தவற முடியாது.
9 சிங்கம் அங்கே இருக்காது, கொடிய மிருகம் அவ்வழியாய் ஏறிப் போகாது@ அப்படிப் பட்டது எதுவும் அங்குத் தென்படாது, மீட்படைந்தவர்களே அவ்வழியாய் நடந்து போவார்கள்.
10 ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவர், வாழ்த்திக் கொண்டு சீயோனுக்கு வந்து சேருவர்@ அவர்கள் தலை மேல் அகமகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும், அவர்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பெற்றுக் கொள்வர், துன்பமும் அழுகையும் பறந்து போய்விடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, அங்கே, பழைய, வந்து, இசையாஸ், ஆகமம், அப்போது, அவ்வழியாய், நீரூற்றுகள், பெறும்@, பாலை, திருவிவிலியம், ஆன்மிகம், வறண்ட, மகிமை, கடவுள்