இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 26
2 வாயில்களைத் திறந்து விடுங்கள்@ உண்மையைக் கடைப்பிடிக்கும் நீதியுள்ள மக்களினம் உள்ளே வரட்டும்.
3 மன உறுதியுள்ளவனை நீர் சமாதானத்தில் உறுதிப்படுத்துகிறீர், ஏனெனில் உம்மீது அவன் நம்பிக்கை வைக்கிறான்.
4 ஆண்டவர் பேரில் என்றென்றும் நம்பிக்கை வையுங்கள்@ ஏனெனில் ஆண்டவர் என்றென்றும் நிலைத்திருக்கும் பாறை!
5 உயர்வான இடத்தில் வாழ்ந்தவர்களைத் தாழ்த்தினார், மேலோங்கியிருந்த கோட்டையைத் தகர்த்தார், புழுதியில் அதை வீழ்த்தினார்.
6 காலால் அது மிதிபடும், ஏழையின் கால்களும் எளியவர்களின் அடிகளும் அதனை மிதிக்கும்."
7 நீதிமானின் நெறி நேரானது. நீதிமானின் பாதை நடப்பதற்குச் செவ்வையானது.
8 ஆண்டவரே, உம்முடைய கற்பனைகளின் நெறி நடந்து, உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்@ உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்கள் ஆன்மாவின் ஆவலாய் இருக்கின்றன.
9 என் ஆன்மா இரவில் உம்மேல் ஆவல் கொள்ளுகிறது, என் ஆவி எனக்குள்ளே ஏக்கத்தோடு உம்மைத் தேடுகிறது@ உம்முடைய நீதித்தீர்ப்புகளை நீர் பூமியின் மேல் செலுத்தும் போது, பூமியின் மக்கள் நீதி என்ன என்பதை அறிகின்றனர்.
10 இறைப்பற்றில்லாதவனுக்கு இரக்கம் காட்டினாலும் அவன் நீதியைக் கற்றுக் கொள்ளமாட்டான்@ பரிசுத்தர்களின் நாட்டில் அவன் பாவங்களைச் செய்தான், ஆண்டவருடைய மகிமையை அவன் காணவில்லை.
11 ஆண்டவரே, உமது கை ஓங்கியுள்ளது, அவர்களோ அதைப் பார்க்கவில்லை. உம் மக்கள் மேல் உமக்குள்ள ஆர்வத்தைக் கண்டு, அவர்கள் வெட்சி நாணட்டும். உம்முடைய எதிரிகளுக்கென மூண்ட தீ அவர்களை விழுங்கட்டும்.
12 ஆண்டவரே, நீர் எங்களுக்குச் சமாதானம் அளிப்பீர், ஏனெனில் எங்கள் வேலைகளையெல்லாம் எங்களுக்காக நீரே செய்து முடித்தீர்.
13 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மையன்றி வேறே ஆளுநர்கள் எங்கள் மேல் ஆட்சி செய்தனர்@ ஆனால் உமது திருப்பெயரை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம்.
14 இறந்த கொடுங்கோலர் வாழ்வு பெறமாட்டார்கள், அரக்கரையொத்த அவர்கள் உயிர்த்தெழமாட்டார்கள்@ ஏனெனில் அவர்களைத் தண்டித்து நொறுக்கினீர், அவர்களைப்பற்றிய ஞாபகமே இராதபடி அழித்தீர்.
15 இந்த மக்களைப் பலுகச் செய்தீர், ஆண்டவரே, இந்த மக்களைப் பலுகச் செய்தீர்@ உமது மகிமையை விளங்கச் செய்தீர், நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தினீர்.
16 ஆண்டவரே, துன்பத்தில் உம்மைத் தேடினோம், தண்டனை பெறும் போது உம்மைப் பார்த்து மன்றாடினோம்.
17 பேறுகாலம் நெருங்கும் போது தன் வேதனையில் துயருற்றுக் கதறுகின்ற கர்ப்பவதியைப் போலவே, ஆண்டவரே, உம் முன்னிலையில் நாங்களும் இருக்கிறோம்.
18 நாங்களும் கர்ப்பமானோம், வேதனைப்பட்டோம், ஆனால் காற்றைப் பெற்றவர்களைப் போலத் தான் இருக்கிறோம்@ நாட்டுக்கு எங்களால் மீட்பு கிட்டவில்லை, உலகத்தின் மக்கள் வீழ்ச்சியடையவில்லை.
19 இறந்து போன உம் மக்கள் வாழ்வு பெறுவார்கள், கொலையுண்ட என் இனத்தார் உயிர்தெழுவர். புழுதியில் குடியிருப்பவர்களே, விழித்தெழுங்கள், மகிழ்ச்சியினால் புகழ்பாடுங்கள்@ ஏனெனில் நீர் பெய்யும் பனி ஒளி வீசும் பனி, கீழ் உலகமானது உயிர் கொடுக்கும்.
20 எம் மக்களே, உங்கள் அறைகளில் நுழைந்து கொள்ளுங்கள், உள்ளிருந்து கதவைச் சாத்திக்கொள்ளுங்கள்@ ஆத்திரம் தணியும் வரையில் கொஞ்ச நேரம் நீங்கள் மறைந்திருங்கள்.
21 ஏனெனில், இதோ தம்முடைய இடத்திலிருந்து ஆண்டவர் வெளியே வருகிறார்@ உலக மக்கள் அவருக்கெதிராய்ச் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிக்க வருகிறார்@ தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை நிலம் வெளிப்படுத்தும்@ கொலையுண்டவர்களை மறைத்து வைக்காது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஆண்டவரே, ஏனெனில், உமது, ஏற்பாடு, மக்கள், எங்கள், நீர், அவன், பழைய, உம்முடைய, இசையாஸ், ஆண்டவர், நம்பிக்கை, போது, மேல், ஆகமம், வருகிறார்@, நாங்களும், வாழ்வு, செய்தீர், மக்களைப், அவர்களைத், பலுகச், மகிமையை, நெறி, ", நாட்டில், ஆன்மிகம், திருவிவிலியம், உம்மீது, என்றென்றும், உம்மைத், நீதிமானின், புழுதியில், பூமியின்