இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 15
2 அழுது புலம்புவதற்காக அரச வீட்டாரும் தீபோன் மக்களும் உயர்ந்த இடங்களுக்குப் போகிறார்கள்@ நாபோ, மேதாபா இவற்றின் அழிவைக் குறித்து மோவாப் நாட்டினர் அழுகின்றார்கள்@ தலைகள் யாவும் மழிக்கப்படும், தாடிகள் அனைத்தும் சிரைக்கப்படும்.
3 தெருக்களில் கோணி உடுத்திக்கொண்டு திரிவார்கள், வீடுகளின் மாடிகளிலும் பொதுவிடங்களிலும், அனைவரும் புலம்பிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
4 எசேபோன், எலயாலே ஓலமிடுகின்றன, யாசா வரை அவற்றின் குரல் கேட்கின்றது@ அதைக் கேட்டு மோவாப் வீரர்களும் புலம்புகிறார்கள், அவர்களின் இதயமும் உள்ளுக்குள் குமுறுகிறது.
5 மோவாபுக்காக என்னுள்ளமும் கதறுகிறது, தப்பிப் பிழைத்தவர்கள் சேகோர், எக்லாத் - ஷெலிஷியா முதலிய இடங்களுக்கு ஓடுகின்றனர்@ லூவித் குன்றின் மேல் அழுது கொண்டே ஏறுகின்றனர், ஒரோநாகிம் வழியிலெல்லாம் உள்ளம் உருகும்படி புலம்புகின்றனர்.
6 நெம்ரிம் நீர் நிலைகள் வறண்டு போயின. புல் உலர்ந்தது, முளைகள் கருகிவிட்டன, பசுமை என்பதே இல்லாமற் போனது.
7 ஆதலால் தங்கள் சொத்தில் மிகுந்திருந்ததையும், தாங்கள் சேமித்து வைத்திருந்ததையும், அராவிம் நீரோடையின் அக்கரைக்குத் தூக்கிக் கொண்டு கடக்கிறார்கள்.
8 மோவாபின் எல்லையெங்கும் அழுகைக் குரல் கேட்கிறது, அவர்களின் புலம்பல் கல்லிம் வரையில் எட்டுகிறது, அவர்களின் ஓலம் எலிம் கேணிகள் வரைக் கேட்கிறது.
9 தீபோன் நீர் நிலைகள் இரத்தம் நிறைந்துள்ளன, தீபோன் மேல் வேதனை மேல் வேதனை கொண்டு வருவோம்@ மோவாப் மக்களுள் தப்பினவர் மேலும், நாட்டிலே எஞ்சியிருப்போர் மேலும் சிங்கத்தை வரச் செய்வோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இசையாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, மோவாப், பழைய, அவர்களின், இசையாஸ், தீபோன், ஆகமம், மேல், நீர், கொண்டு, மேலும், வேதனை, கேட்கிறது, நிலைகள், அழுது, ஆன்மிகம், திருவிவிலியம், நகரம், அழிவுற்ற, இரவிலேயே, அந்த, குரல்