எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 41
2 வாயில் நடையின் அகலம் பத்து முழம்@ அதன் பக்கங்கள் இந்தப் புறத்தில் ஐந்து முழமும், அந்தப் புறத்தில் ஐந்து முழமும் இருந்தன@ அதன் நீளத்தை அளந்தார்@ நாற்பது முழம் இருந்தது@ அதன் அகலத்தை அளந்தார்@ இருபது முழம் இருந்தது.
3 அவர் இன்னும் உள்ளே போய் வாயிலின் கட்டையை அளந்தார்@ அது இரண்டு முழமும், நடை ஆறு முழமும், இதன் அகலம் ஏழு முழமும் இருந்தன.
4 பிறகு அவர் கோயிலின் உள்ளறையை அளந்தார்@ அதன் நீளம் இருபது முழம், அகலம் இருபது முழம்@ அதை எனக்குக் காண்பித்து@ "இது திருத்தூயகம்" என்று சொன்னார்.
5 அடுத்து அவர் கோயிலின் சுவரை அளந்தார்@ அதன் கனம் ஆறு முழம்@ கோயிலைச் சுற்றிலுமிருந்த சுற்றுக் கட்டினுடைய அகலம் நான்கு முழம் இருந்தது.
6 இந்தச் சுற்றுக் கட்டுகள் மூன்றடுக்கு மெத்தையாக முப்பது அறைகளைக் கொண்டிருந்தன@ இந்த அறைகள் கோயில் சுவரின் மேல் ஊன்றியிராமல், இரு புறத்திலுமுள்ள சுற்றுக்கட்டுகளில் அமைந்திருந்த வரம்புகளின் மேல் ஊன்றியிருந்தன@
7 ஒரு மெத்தையிலிருந்து இன்னொரு மெத்தைக்குச் செல்ல அகலமான ஒரு சுற்று வழியுமிருந்தது@ அதில் படிக்கட்டொன்று சுற்றிப் போய் மிக உச்சியிலுள்ள அறைக்குச் செல்லும்@ ஆகவே மேலே போகப் போக கோயில் குறுகியில்லாமல் அகன்றிருக்கும்@ அவ்வாறே கீழ்நிலையிலிருந்து மேல்நிலையின் மைய இடத்திற்கு ஏறிப்போகக் கூடுமாயிருக்கும்.
8 கோயிலைச் சுற்றிலும் உயரமான வரம்பைக் கண்டேன்@ சுற்றுக்கட்டுகளின் அடிப்படைகளை அளவு கோலால் அளந்த போது, ஆறு முழங்கள் இடையில் இருந்தன.
9 புறம்பே சுற்றுக்கட்டிற்கு இருந்த சுவரின் அகலமோ ஐந்து முழம்@ உள்கோயில் சுற்றிலும் வேறே கட்டுக் கோப்புகளால் சூழப்பட்டிருந்தது.
10 அறைக்கும் அறைக்கும் நடுவில் கோயிலின் நான்கு பக்கத்திலும் இருபது முழ அகலமான வெற்றிடம் விட்டிருக்கிறது@
11 ஒவ்வொரு அறையின் கதவும் செபக்கூடத்தை நோக்கியிருந்தது@ ஒன்று வடக்கேயும், மற்றொன்று தெற்கேயும் இருந்தன@ செபக் கூடத்தின் அகலம் ஐந்து முழம்.
12 மேற்குப் பக்கத்தை நோக்கியிருந்த தனிக் கட்டடத்தின் நீளம் எழுபது முழம்@ அதன் சுற்றுச்சுவரின் அகலம் ஐந்து முழம்@ இதன் நீளம் தொண்ணுறு முழம்.
13 அவர் கோயிலை நூறு முழ நீளமாகவும், தனியாக ஒதுக்கப்பட்ட கட்டடத்தை நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
14 கோயிலின் முகப்புக்கும், கிழக்கே கட்டப்பட்ட தனிக் கட்டடத்திற்கும் இடையிலிருந்த முற்றம் நூறு முழ அகலம் கொண்டது@
15 பின்னும் அவர் பின்புறத்தில் தனியாய் இருந்த கட்டடத்திற்கு எதிரேயுள்ள வீட்டின் நீளத்தையும் அளந்தார்@ அது இரு பக்கத்திலுமிருந்த தாழ்வாரங்கள், உள்கோயில், பிராகாரத்தின் மண்டபம் எல்லாம் உட்பட நூறு முழமிருந்தது.
16 மீண்டும் அவர் வாயிற்படிகளையும், வளைந்த பலகணிகளையும், மூன்று பக்கத்திலுமிருந்த நடைப் பந்தல்களையும் அளந்தார்@ ஒவ்வொன்றின் வாயிற்படிக்கு எதிரே நடைப்பந்தலைச் சுற்றிலும் மரப்பலகைகள் பொருத்தியிருந்தன@ இவை தரையிலிருந்து பலகணிகள் வரை எட்டும்@ பலகணிகளோ மூடியிருந்தன.
17 உள் மாளிகை உட்பட நடைப்பந்தலான வெளிச்சுவரில் உள்ளும் புறமுமாய் இருந்த பலகணியாவற்றுக்கும் அவ்வாறே இருந்தது@ யாவும் தன்தன் அளவின்படி இருந்தது.
18 அவற்றின் முகப்பில் கெருபீம்களும், பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன@ ஒரு கெருபீமுக்கும் மற்றொரு கெருபீமுக்கும் நடுவில் ஒரு பேரீச்ச மரம் இருந்தது@ ஒவ்வொரு கெருபீமுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன.
19 இப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் மனித முகமாயும், அப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் சிங்க முகமாயும் இருந்தன@ கோயிலைச் சுற்றிலும் அவ்வாறே இருந்தது.
20 தரையிலிருந்து வாயிற் கதவின் மேற்புறம் வரை அவ்வகைக் கெருபீம்களும் பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன.
21 கோயிலின் தூண்கள் சதுரமானவை. தூயகத்தின் முகப்பும் கோயிலின் முகப்பும் ஒன்றுக் கொன்று எதிரெதிரே இருந்தன.
22 மரத்தினால் அமைக்கப்பட்ட பலி பீடத்தின் உயரம் மூன்று முழம்@ நீளம் இரண்டு முழம்@ அகலம் இரண்டு முழம்@ அதன் கோணங்களும் விளிம்புகளும் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அவர் என்னை நோக்கி: "இது ஆண்டவரின் திருமுன் இருக்கிற பீடம்" என்றார்.
23 கோயிலுக்கும் தூயகத்துக்கும் இரண்டு வாயில்கள் இருந்தன.
24 இவ்விரண்டு வாயில்களிலும் இருபுறத்துக் கதவுகளும் ஒன்றின் மேலொன்று மடங்கும் இரட்டைக் கதவுகளாய் இருந்தன@ வாயிலின் இந்தப் புறத்துக்கும் அந்தப் புறத்துக்கும் இரட்டையான கதவுகள் தான் இருந்தன.
25 கோயிற்சுவரின் சித்திரிக்கப்பட்டிருந்தவாறே, கோயிலின் வாயிற் கதவுகளிலும் கெருபீம்களும் பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன@ ஆதலால் வெளி மண்டபத்தின் கதவுமரங்கள் அதிகக் கனமானவை.
26 அவற்றின்மேல் வளைந்த பலகணிகள் காணப்பட்டன@ மண்டபத்தின் பக்கங்களில் இரு பக்கமும் மாளிகையின் நெடுஞ்சுவர்களின் அகலத்தில் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, முழம்@, அளந்தார்@, அவர், அகலம், பேரீச்ச, கோயிலின், முழம், இருந்தன, முழமும், இரண்டு, இருந்தன@, ஐந்து, ஏற்பாடு, நீளம், இருபது, பழைய, சுற்றிலும், நூறு, எசேக்கியேல், ஆகமம், கெருபீமுக்கும், கோயிலைச், அவ்வாறே, இருந்த, மரங்களும், இருந்தது@, கெருபீம்களும், கோயில், மூன்று, தரையிலிருந்து, பலகணிகள், வளைந்த, உட்பட, முகம், முகப்பும், மரத்தினால், புறத்துக்கும், மண்டபத்தின், சித்திரிக்கப்பட்டிருந்தன, வாயிற், மரத்தை, நோக்கும், பக்கத்திலுமிருந்த, முகமாயும், சித்திரிக்கப்பட்டிருந்தன@, சுவரின், அந்தப், போய், வாயிலின், இதன், புறத்தில், இந்தப், திருவிவிலியம், ஆன்மிகம், கூடத்தின், ", சுற்றுக், நடுவில், ஒவ்வொரு, தனிக், அறைக்கும், உள்கோயில், நான்கு, மேல், அகலமான, நீளமாகவும்