எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 37
2 அவற்றைச் சுற்றி என்னை அழைத்துச் சென்றார்@ இதோ, அந்தப் பள்ளத்தாக்கில் எலும்புகள் மிகப்பல கிடந்தன@ அவை முற்றும் உலர்ந்திருந்தன.
3 அவர் என்னை நோக்கி, "மனிதா, இந்த எலும்புகள் உயிர் பெறக் கூடுமோ?" என்று வினவினார். "ஆண்டவராகிய இறைவா, உமக்குத் தெரியுமே" என்று விடை பகர்ந்தேன்.
4 மீண்டும் அவர் என்னிடம், "இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரைத்து அவற்றுக்குச் சொல்: உலர்ந்த எலும்புகளே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 இந்த எலும்புகளுக்கு ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, உங்களுக்குள் ஆவி நுழையச் செய்வோம், நீங்கள் உயிர் பெற்று வாழ்வீர்கள்.
6 பின்னும், உங்கள் மேல் நரம்புகளை வைப்போம், உங்கள் மேல் சதை பிடிக்கச் செய்வோம்@ உங்களைத் தோலால் மூடுவோம்@ உங்களில் ஆவியை ஊட்டுவோம்@ நீங்கள் உயிர் பெற்று வாழ்வீர்கள். அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்" என்று சொல் எனக் கூறினார்.
7 அவர் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குச் சொன்னேன்@ அவ்வாறு நான் இறைவாக்குரைக்கும் போது, ஓர் ஒலி கேட்டது@ இதோ, அசைவும் உண்டாயிற்று@ ஒவ்வொரு எலும்பும் மற்றொரு எலும்பை அணுகி ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டன.
8 நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, இதோ, அவற்றின் மேல் நரம்புகள் காணப்பட்டன@ அவற்றில் சதை பிடித்திருந்தது@ அவற்றைத் தோல் மூடியிருந்தது@ ஆயினும் அவற்றில் உயிர் இல்லை.
9 அப்பொழுது அவர் என்னை நோக்கி, "ஆவிக்கு இறைவாக்குக் கூறு, மனிதா, இறைவாக்குச் சொல்@ ஆவிக்கு நீ சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஆவியே, நாற்றிசையிலிருந்தும் வா@ வந்து உயிரிழந்த இவர்கள் மீது ஊதி, இவர்கள் உய்யும்படி செய்" என்றார்.
10 அவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குரைத்தேன்@ அவர்களுள் ஆவி புகுந்தது@ அவர்கள் உயிர் பெற்றுத் தரையில் காலூன்றி நின்றனர்@ அவர்கள் மாபெரும் சேனை போல் இருந்தனர்.
11 பின்னும் அவர் என்னிடம் சொன்னார்: "மனிதா, இந்த எலும்புகள் இஸ்ராயேல் வீட்டாரனைவரும். இதோ, அவர்கள், ~எங்கள் எலும்புகள் முற்றிலும் உலர்ந்து போயின@ எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று@ நாங்கள் முற்றிலும் அறுபட்டோம்~ என்கிறார்கள்.
12 ஆகையால் நீ அவர்களுக்கு இறைவாக்குக் கூறு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எம் மக்களே, இதோ நாம் உங்கள் கல்லறைகளைத் திறப்போம்@ கல்லறைகளிலிருந்து உங்களை எழுப்புவோம்@ இஸ்ராயேல் நாட்டுக்கு உங்களைத் திரும்பக் கூட்டிவருவோம்.
13 எம் மக்களே, உங்கள் கல்லறைகளைத் திறந்து, அவற்றினின்று நாம் உங்களை எழுப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
14 உங்களுக்குள் நம் ஆவியைப் புகுத்துவோம்@ நீங்கள் உயிர் பெறுவீர்கள். உங்கள் சொந்த நாட்டில் உங்களை வாழ வைப்போம்@ அப்போது, ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம், நாமே இதைச் செய்து முடித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், என்கிறார் ஆண்டவர்."
15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
16 மனிதா, நீ ஒரு கோலை எடுத்து அதில், ~யூதாவும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்களும்~ என்று எழுது@ பிறகு வேறொரு கோலை எடுத்து, அதில், ~எப்பிராயீம் கோலாகிய யோசேப்பும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் வீட்டாரனைவரும்~ என்று எழுது.
17 பிறகு அவ்விரு கோல்களும் உன் கையில் ஒரே கோலாகும்படி அவற்றைச் சேர்த்துப் பிடி.
18 உன் இனத்தார் உன்னிடத்தில் வந்து, ~இவற்றால் நீர் எதைக் காட்ட எண்ணினீர் என்பதை எங்களுக்கு விளக்கமாட்டீரோ?~ என்று உன்னைக் கேட்கும் போது,
19 நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, எப்பிராயீமின் கையிலிருக்கும் யோசேப்பின் கோலையும், அவனோடு சேர்ந்துள்ள இஸ்ராயேல் கோத்திரங்களையும் எடுத்து, யூதாவின் கோலோடு ஒன்று சேர்த்து, அவற்றை ஒரே கோலாகச் செய்வோம்@ அவை நம் கையில் ஒரே கோலாய் இருக்கும்.
20 நீ எழுதிய கோல்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக உன் கையில் இருக்கும் போது, நீ அவர்களுக்குச் சொல்:
21 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் இஸ்ராயேல் மக்களை அவர்கள் போயிருக்கும் புறவினத்தாரிடமிருந்து அழைத்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்களைச் சேர்த்து, அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவோம்@
22 இஸ்ராயேல் மலைகளின் மேல் அவர்களை அந்த நாட்டில் ஒரே இனத்தவராய் ஆக்குவோம்@ அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன்தான் இருப்பான்@ இனி அவர்கள் இரண்டு இனத்தவராய் இருக்கமாட்டார்கள், இரண்டு அரசுகளாய்ப் பிரிந்திருக்கமாட்டார்கள்.
23 இனி மேல் அவர்கள் தங்கள் சிலைகளாலும், அருவருப்பான பொருட்களாலும், யாதொரு குற்றத்தாலும் தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்@ ஆனால் அவர்கள் நடந்துவந்த பிரமாணிக்கமில்லாத நெறியிலிருந்து அவர்களை மீட்போம்@ அவர்களைத் தூய்மைப்படுத்துவோம்@ அப்போது அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள்@ நாம் அவர்கள் கடவுளாய் இருப்போம்.
24 நம் ஊழியனாகிய தாவீது அவர்களுக்கு அரசனாயிருப்பான்@ அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன் தான் இருப்பான்@ அவர்கள் நம் நீதிமுறைகளைப் பின்பற்றுவார்கள்@ நம் கற்பனைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருப்பார்கள்.
25 நம் ஊழியனாகிய யாக்கோபுக்கு நாம் தந்ததும், உங்கள் தந்தையர் வாழ்ந்ததுமான நாட்டில் அவர்கள் வாழ்வார்கள்@ அவர்களும், அவர்கள் பிள்ளைகளும், அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் அங்கே வாழ்வார்கள்@ நம் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
26 நாம் அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்வோம்@ அது அவர்களோடு முடிவில்லா உடன்படிக்கையாய் இருக்கும்@ அவர்களை நாம் ஆசீர்வதித்துப் பலுகச் செய்வோம்@ அவர்கள் நடுவில் நமது பரிசுத்த இடத்தை என்றென்றும் நிலைக்கச் செய்வோம்.
27 நம் இருப்பிடம் அவர்களுடன் இருக்கும்@ நாம் அவர்கள் கடவுளாக இருப்போம்@ அவர்கள் நம் மக்களாய் இருப்பர்.
28 நமது பரிசுத்த இடம் அவர்கள் நடுவில் என்றென்றும் நிலைக்கும் போது, ஆண்டவராகிய நாமே இஸ்ராயேலைப் பரிசுத்தப்படுத்துபவர் என்பதைப் புறவினத்தார் அறிந்துகொள்வர்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஆண்டவராகிய, நாம், ", இஸ்ராயேல், உயிர், உங்கள், அவர், போது, மேல், சொல், இறைவன், நீங்கள், நாமே, கூறுகிறார், ஏற்பாடு, எலும்புகள், பழைய, நான், என்றென்றும், என்பதை, மனிதா, செய்வோம்@, எசேக்கியேல், ஆண்டவர், அவர்களை, இருக்கும், அவனோடு, நாட்டில், உங்களை, ஆகமம், எடுத்து, அப்போது, கையில், நடுவில், என்னை, ஆண்டவருடைய, ஊழியனாகிய, நமது, வாழ்வார்கள்@, அதில், கோலை, அவர்களோடு, பிள்ளைகளும், இதைச், சேர்ந்திருக்கும், தாவீது, இரண்டு, இருப்பான்@, சொந்த, இருக்கும்@, மக்களாய், சேர்த்து, இனத்தவராய், அவர்களுக்குச், பரிசுத்த, பிறகு, இறைவாக்குக், செய்வோம், உங்களுக்குள், பெற்று, வாழ்வீர்கள், பின்னும், எலும்புகளுக்கு, என்னிடம், அவற்றைச், அங்கே, நோக்கி, ஆன்மிகம், திருவிவிலியம், உங்களைத், கட்டளையிட்டவாறே, முற்றிலும், இவர்கள், அவர்களுக்கு, மக்களே, கல்லறைகளைத், வந்து, கூறு, இறைவாக்குச், அவற்றில், ஆவிக்கு, கொண்டு, அறிவீர்கள்