எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 35
2 மனிதா, நீ செயீர் மலைக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கு எதிராக இறைவாக்குக் கூறு:
3 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: செயீர் மலையே, இதோ நாம் உனக்கு எதிராக வருவோம்@ உனக்கு விரோதமாக நமது கையை நீட்டி உன்னைப் பாழும் பாலைநிலமாக்குவோம்:
4 உன் பட்டணங்களை அழிக்கப்போகிறோம்@ மனித நடமாட்டம் இல்லாத நிலமாவாய்@ நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்.
5 நீடித்த பகைமையை நீ விரும்பினாய் அன்றோ? இஸ்ராயேல் மக்களை அவர்களுடைய துன்ப நாட்களில்- அவர்கள் கொடிய தண்டனை அடைந்த நாட்களில்- நீ வாளின் வலிமைக்குக் கையளித்தாய்@
6 ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்@ நம் உயிர்மேல் ஆணை! நாம் உன்னை இரத்தப்பழிக்கு உட்படுத்துவோம்@ இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும்@ நீ இரத்தம் சிந்திக் குற்றம் செய்ததால், இரத்தப்பழி உன்னைவிடாது தொடரும்.
7 நாம் செயீர் மலையைப் பாழும் பாலை நிலமாக்குவோம்@ அதில் போவார் வருவார் இல்லாதபடி செய்வோம்.
8 உன்னுடைய மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவோம்@ குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் கணவாய்களிலும் வாளால் வெட்டுண்டவர்கள் வீழ்வார்கள்.
9 உன்னை என்றென்றும் பாழ்வெளியாய் இருக்கச் செய்வோம்@ உன் பட்டணங்கள் குடியற்றுப் போகும்@ அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வாய்.
10 ஆண்டவர் அங்கே குடியிருந்ததை அறிந்திருந்தும், நீ, ~இந்த இரண்டு இனத்தாரும், இரண்டு நாடுகளும் எனக்கு உரித்தாகும்@ இவ்விரண்டையும் நானே உரிமையாக்கிக் கொள்வேன்~ என்று சொல்லத் துணிந்தாய்@
11 ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராக வர்மம் கொண்டு அவர்கள் மேல் கோபமும் பொறாமையும் காட்டி நடத்தியது போலவே நாமும் உன்னை நடத்துவோம்@ உன் மீது தீர்ப்புச் செலுத்தும் போது நாம் யாரென்பதை உன் நடுவில் வெளிப்படுத்துவோம்.
12 இஸ்ராயேல் மலைகளுக்கு எதிராக, ~அவை பாழாக்கப்பட்டன, ஆதலால் அவை எங்களுக்கு இரையாகத் தரப்பட்டன~ என்று நீ சொன்ன இழிச்சொற்களையெல்லாம் ஆண்டவராகிய நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம் என்பதை அப்போது நீ அறிந்து கொள்வாய்.
13 உன் வாயால் நமக்கு எதிராக உன்னையே நீ பெருமையாகப் பேசி, நமக்கு எதிரான வார்த்தைகளைச் சொன்னாய்@ அவற்றை நாம் கேட்காமல் போகவில்லை.
14 ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உலகமெல்லாம் மகிழ உன்னை நாம் பாழாக்குவோம்.
15 இஸ்ராயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழான போது, அதைக் கண்டு நீ அக்களித்ததால் உனக்கும் அவ்வாறே நடக்கச் செய்வோம்@ செயீர் மலையே, நீ பாழாவாய்@ ஏதோம் முழுவதும் பாழாகும்@ அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, நாம், ஆண்டவராகிய, ஏற்பாடு, எதிராக, பழைய, என்பதை, ஆண்டவர், இறைவன், செயீர், உன்னை, ஆதலால், இஸ்ராயேல், ஆகமம், கூறுகிறார், நாமே, எசேக்கியேல், அறிந்து, அப்பொழுது, மேல், போது, நமக்கு, கொண்டு, செய்வோம்@, இரண்டு, கொள்வாய், பாழும், எனக்கு, ஆன்மிகம், திருவிவிலியம், மலையே, உனக்கு, நாட்களில், உன்னைப், இரத்தப்பழி