எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 10
2 அப்போது ஆண்டவர் சணல் நூலாடை அணிந்திருந்தவனிடம், "கெருபீம்களுக்குக் கீழே இருக்கும் சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபீம்களின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கைநிறைய வாரிப் பட்டணத்தின் மீது வீசு" என்றார். அவ்வாறே அவன் செய்தான்@ நான் கண்டேன்.
3 அவன் உள்ளே நுழையும் போது, கெருபீம்கள் கோயிலின் வலப்புறத்தில் நின்று கொண்டிருந்தன@ அப்போது மேகம் ஒன்று உள் முற்றத்தை மூடிக்கொண்டது.
4 ஆண்டவரின் மகிமை கெருபீம்கள் மேலிருந்து எழும்பி கோயிலின் வாயிற்படிக்கு வந்தது@ ஆலயம் முழுதும் மேகம் நிறைந்திருந்தது. கோயிலோ ஆண்டவரது மகிமையின் பேரொளியால் நிரம்பிற்று.
5 கெருபீம்களுடைய இறக்கைகளின் இரைச்சல் வெளி முற்றம் வரையில் கேட்டது@ அது எல்லாம் வல்லவர் பேசுங் குரல் போல் இருந்தது.
6 சணல் நூலாடை அணிந்தவனுக்கு, "நீ கெருபீம்களின் நடுவிலுள்ள சக்கரங்களிடையிலிருக்கும் அக்கினியை எடு" என்று கட்டளையிட்டவுடனே, அவன் போய்ச் சக்கரங்களின் அருகில் நின்றான்.
7 அந்நேரத்தில் ஒரு கெருபீம் தன் கையை நீட்டிக் கெருபீம்களின் நடுவில் உள்ள நெருப்பை எடுத்து, சணல் நூலாடை அணிந்திருந்தவன் கையில் கொடுக்க, அவன் அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
8 அப்போது கெருபீம்களுடைய இறக்கைகளின் கீழ் மனிதனின் கைச் சாயல் காணப்பட்டது.
9 இதோ, கெருபீம்களின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன்@ ஒவ்வொரு கெருபீம் அருகில் ஒரு சக்கரம் இருந்தது@ ஒவ்வொன்றுக்கும் (கெருபீம்) அருகில் தனித்தனிச் சக்கரம் இருந்தது@ சக்கரங்கள் பளிங்கு போல மின்னின@
10 அவை நான்கும் ஒரே வடிவாய் இருந்தன@ சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றிற்று.
11 அவை ஒடும்போது நாற்றிசையிலும் ஒடும்@ ஒடும் போது அங்குமிங்கும் திரும்ப மாட்டா@ ஒரு சக்கரம் ஒடும் இடத்திற்கே மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் ஒடின.
12 அவை முழுவதும், கழுத்து, கை, இறக்கைகள், சக்கரங்களின் வட்டங்கள் யாவும் கண்களால் நிறைந்து இருந்தன@ சக்கரத்தைச் சுற்றிலும் அவ்வாறே நிறைந்திருந்தது.
13 சூழல் சக்கரங்கள்" என்பது அவற்றின் பெயர் எனக் கேட்டறிந்தேன்.
14 ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது கெருபீம் முகமும், இரண்டாவது மனிதா முகமும், மூன்றாவது சிங்க முகமும், நான்காவது கழுகு முகமும் இருந்தன.
15 கெருபீம்கள் மேலே உயர்ந்தன@ கேபார் நதியருகில் நான் கண்ட மிருகங்கள் இவைகளே.
16 கெருபீம்கள் நடக்கும் போது சக்கரங்களும் அவற்றின் அருகில் ஒடும்@ பூமியில் மேலெழும்பக் கெருபீம்கள் தங்கள் இறக்கைகளை விரிக்கும் போதோ, சக்கரங்கள் அவற்றின் அருகிலேயே இருந்தன.
17 அவை நிற்கும் போது இவையும் நிற்கும்@ அவை மேலே எழும்பும் போது இவையும் மேலே எழும்பும்@ ஏனெனில் மிருகங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
18 ஆண்டவரின் மகிமை கோயிலின் வாயிற்படியை விட்டுக் கெருபீம்கள் மேல் வந்து நின்றது.
19 நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கெருபீம்கள் தங்கள் இறைக்கைகளை விரித்துப் பூமியை விட்டு மேலெழும்பின@ அவை புறப்படுகையில் சக்கரங்களும் அவற்றுடன் புறப்பட்டன@ ஆண்டவருடைய கோயிலின் கீழ்த்திசை வாயிற்படியில் வந்து நின்றன@ இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை அவற்றின் மேல் இருந்தது.
20 கேபார் நதியருகில் இஸ்ராயேலின் கடவுளுக்குக் கீழே அன்று நான் கண்ட மிருகங்கள் இவையே@ அவற்றுக்குக் கெருபீம்கள் என்பது பெயர் என அறிந்து கொண்டேன்.
21 அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன@ இறக்கைகளின் கீழ் மனித கையின் சாயல் தென்பட்டது.
22 இவற்றின் முகச்சாயல், நான் கேபார் நதியருகில் கண்டதைப் போலவே இருந்தது. அவை ஒவ்வொன்றும் நேராகச் சென்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, கெருபீம்கள், நான், கெருபீம்களின், அருகில், போது, ஏற்பாடு, கோயிலின், அவற்றின், அவன், கெருபீம், முகமும், சக்கரம், பழைய, நான்கு, ஒவ்வொன்றுக்கும், மகிமை, இறக்கைகளின், எசேக்கியேல், சக்கரங்களும், இருந்தன, மேலே, சணல், அப்போது, இருந்தன@, ஆகமம், நூலாடை, கேபார், நதியருகில், சக்கரங்களின், வந்து, இஸ்ராயேலின், ஒடும், மேல், ஒடும்@, மிருகங்கள், கண்ட, பெயர், தங்கள், இவையும், என்பது, கெருபீம்களுடைய, தென்பட்டது, ", கீழே, ஒன்று, போல், திருவிவிலியம், ஆன்மிகம், கண்டேன், நடுவில், நடுவிலுள்ள, கீழ், சாயல், இருந்தது@, நிறைந்திருந்தது, ஆண்டவரின், அவ்வாறே, மேகம், சக்கரங்கள்