பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 6
2 நீங்கள் பபிலோனுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, அவ்விடத்திலேயே பல்லாண்டுகளாய் நெடுங்காலம்- ஏழு தலைமுறைகளுக்கு இருப்பீர்கள்@ அதன் பிறகு அங்கிருந்து உங்களைச் சமாதானமாய்ப் புறப்படச் செய்வோம்.
3 பபிலோனில் பொன், வெள்ளி, கல், மரம் முதலியவற்றால் செய்யப்பட்ட பயங்கரமான தெய்வங்களைச் சுமந்துகொண்டு மக்கள் ஊர்வலம் வருவதைக் காண்பீர்கள்.
4 நீங்களோ அந்நியருடைய செயல்களைப் பின்பற்றாமல் எச்சரிக்கையாய் இருங்கள்@ அந்தத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள். அவற்றைப் பற்றிய அச்சத்திற்கு இடங் கொடாதீர்கள்.
5 முன்னும் பின்னுமாக இருந்து மக்கட் கூட்டம் அந்தத் தெய்வங்களை வணங்கும் போது, நீங்கள், "ஆண்டவரே, உம்மையே மனிதர் வணங்க வேண்டும்" என்று உங்கள் மனத்திலே சொல்லிக் கொள்ளுங்கள்.
6 ஏனெனில் நம்முடைய தூதர் உங்களோடு இருக்கிறார்@ உங்கள் வாழ்க்கை அவர் கண்காணிப்பில் இருக்கிறது.
7 அச்சிலைகளின் நாக்கு தச்சனால் செதுக்கப்பட்டது@ பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருந்தாலும், அவை (சிலைகள்) பொய்யுருவங்கள்@ ஆகவே பேசமாட்டா.
8 நகைகளை விரும்பும் கன்னிப்பெண் ஒருத்திக்குச் செய்வது போல,
9 பொன்னையெடுத்து அவர்களுடைய தெய்வங்களின் தலைகளில் பொன் முடிகள் வைக்கிறார்கள். ஆனால் அந்தப் பொன், வெள்ளியைப் பூசாரிகள் தங்களுக்கென்று எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
10 அப்பொன்னை வேசிகளுக்கும் கொடுக்கிறார்கள். மனிதர்களை அலங்கரிப்பது போலப் பொன்னாலும் வெள்ளியாலும் மரத்தாலும் செய்யப்பட்ட தங்கள் தெய்வங்களை அலங்கரிக்கிறார்கள்.
11 துருப் பிடிக்காமலும் பூச்சி அரிக்காமலும் தங்களையே காப்பாற்றிக் கொள்ள அத்தெய்வங்களால் முடியாது.
12 அத்தெய்வங்களுக்குப் பட்டாடைகளை உடுத்தின பின்பு, அவற்றின் முகத்தைத் துடைக்க வேண்டியிருக்கிறது@ ஏனெனில் அவை இருக்கும் இடத்தின் புழுதியெல்லாம் அவற்றின் மேல் தான் படிந்துள்ளது.
13 ஒரு சிலை மனிதனைப் போலவே தன் கையில் செங்கோல் ஏந்திக் கொண்டிருந்தாலும், நாடாள்பவனைப் போலத் தன்னை அவமதித்தவனை ஒழிக்க முடியாது.
14 மேலும் சிலை தன் கையில் வாளையோ கோடரியையோ பிடித்துக் கொண்டிருந்தாலும், போரிலிருந்தோ கள்ளர்களிடமிருந்தோ தன்னைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்த முடியாது@ இதிலிருந்து அவை மெய்யான தெய்வங்கள் அல்ல என்பது உங்களுக்கு விளங்கும்.
15 அந்தத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்@ அவை ஒன்றுக்கும் உதவாத உடைபட்ட பாண்டத்துக்கு ஒப்பானவை.
16 அவற்றை ஒரு வீட்டில் வைத்தால், வீட்டுக்குள் நுழைகிறவர்களுடைய கால் தூசியால் அவற்றின் கண்கள் நிரம்புகின்றன.
17 அரச துரோகம் செய்த ஒருவனைச் சிறைக்கூடத்தில் அடைப்பது போல், அந்தத் தெய்வங்களின் பூசாரிகள் அவற்றைக் கள்ளர்களின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டுப் போட்டுக் காவல் செய்கிறார்கள்.
18 (இவர்கள்) அவற்றின் முன் விளக்குகளைத் தங்களுக்கு ஏற்றுவதை விட அதிகமான விளக்குகளை ஏற்றினாலும், அவற்றில் ஒன்றையும் அவை காண்பதில்லை@ வீட்டின் விட்டங்களைப் போல் அத்தெய்வங்கள் இருக்கின்றன@
19 அத்தெய்வங்களுக்குத் தெரியாமலே அவற்றையும், அவற்றின் உடைகளையும் செல்லரிக்கின்றது@ இதைக் கண்டு அவர்களின் உள்ளம் உருகி விட்டதாகக் கூறுகிறார்கள்.
20 அவை இருக்கும் இடத்தில் உண்டாகும் புகையினால் அவற்றின் முகம் கறுத்துப் போகின்றது.
21 வெளவால்களும் குருவிகளும் மற்றப் பறவைகளும் அத்தெய்வங்களின் உடல் மேலும் தலை மேலும் வட்டமிடுகின்றன@ பூனைகளும் அவ்வாறே அவற்றின் மேல் விளையாடும்.
22 இதிலிருந்து அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்@ ஆகையால் அவற்றுக்கு அஞ்சவேண்டா.
23 இனி, அத்தெய்வங்கள் மேலிருக்கும் பொன் வெறும் பகட்டு@ அதைத் துலக்கினாலன்றி ஒளி வீசாது@ அச்சிலைகளை உலையிலிட்டு உருக்கிய போதும் அவற்றிற்கு உணர்ச்சியில்லை.
24 உயர்ந்த விலைக்கு அவை வாங்கப்பட்டவை@ ஆனால் அவற்றில் உயிர் மூச்சு இல்லை.
25 காலில்லாத அந்தத் தெய்வங்கள் தோளில் சுமந்து செல்லப்படுகின்றன@ இவ்வாறு தங்கள் பலவீனத்தைக் காட்டிவிடுகின்றன@ அவற்றை வணங்குகிறவர்களோ தலை நாணி வெட்கிப்போகின்றனர். ஏனெனில் அவர்களோ அவற்றைக் கீழே விழாமல் பிடித்து நிறுத்துகிறார்கள்.
26 அவை தரையில் விழுந்தால் தாமாகவே எழுந்திருக்க மாட்டா@ தூக்கி நிறுத்தினாலும், பாத நிலையில் நிற்க மாட்டா@ ஆனால் செத்தவர்களுக்கு முன் காணிக்கைகள் வைக்கப்படுவது போல் அவற்றின் முன்னும் வைக்கப்படுகின்றன.
27 அத்தெய்வங்களுக்கு வைக்கப்படும் காணிக்கைகளை அவற்றின் பூசாரிகள் எடுத்து விற்றுத் தங்கள் விருப்பம் போலச் செலவிடுகிறார்கள்@ இவர்களின் மனைவியர் அக்காணிக்கைகளில் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்@ அவற்றைக் கொண்டு ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்வதில்லை.
28 அவர்களுடைய பெண்கள் தீட்டுப்பட்ட காலத்திலும் சூலான காலத்திலும் தெய்வங்களின் காணிக்கைகளைத் தீண்டுகிறார்கள்@ இதிலிருந்து அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்@ ஆகவே அவற்றுக்கு அஞ்சவேண்டா.
29 இனி, அவற்றைத் தெய்வங்கள் என்று சொல்லக் காரணந்தான் இருக்கிறதா? பொன், வெள்ளி, மரம் முதலியவற்றால் செய்யப்பட்ட அந்தத் தெய்வங்களுக்குப் பெண்கள் காணிக்கை படைக்கிறார்கள்!
30 அவற்றின் பூசாரிகளோ தாடியை மழித்து விட்டுத் தலையை மொட்டையடித்துக் கொண்டு கிழிந்த உடைகளை உடுத்தித் தலையில் முக்காடு போடாது நாள் முழுவதும் கோயில்களில் உட்கார்ந்து கிடக்கிறார்கள்.
31 செத்தவரைக் குறித்துச் செய்விக்கும் விருந்தில் நடப்பது போலத் தங்கள் தெய்வங்களின் முன் ஊளையிட்டு அந்தப் பூசாரிகள் கூக்குரலிடுகிறார்கள்.
32 அந்தப் பூசாரிகள் தங்கள் தெய்வங்களுக்கு உடுத்திய உடைகளை உரிந்து தங்கள் மனைவி, மக்களுக்கு உடுத்துகிறார்கள்.
33 அத்தெய்வங்களுக்கு நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி அதற்கு அவற்றால் பதிலுக்குப் பதில் செய்ய முடியாது@ அவற்றால் ஒருவனை அரசனாக்கவும் இயலாது@ அவனுடைய மணிமுடியை எடுக்கவும் முடியாது.
34 அவற்றால் செல்வங்களைத் தரமுடியாது@ தீமைகளை வருவிக்கவும் முடியாது@ ஒருவன் தன் தெய்வங்களுக்கு நேர்ந்து கொண்டு அந்த நேர்ச்சிக் கடனைச் செலுத்தாமல் போவானாகில், அந்தத் தவற்றுக்காக அவனைத் தண்டிக்க அவற்றால் இயலாது.
35 அவை ஒருவனைச் சாவிலிருந்து தப்பச் செய்ய முடியாது@ வலிமையுள்ளவர்கள் கையிலிருந்து வலிமையற்றவர்களை மீட்கிறதில்லை.
36 அவை குருடனுக்குப் பார்வை கொடுக்கமாட்டா@ நெருக்கடியில் உள்ளவனை விடுவிக்கமாட்டா@
37 கைம் பெண்ணின் மேல் இரக்கங்கொள்ளா@ அனாதைப் பிள்ளைகளைக் காப்பாற்றமாட்டா.
38 இவர்கள் வணங்கும் அத்தெய்வங்களோ மலையிலிருந்து எடுக்கப்படும் கற்களுக்கு ஒப்பானவை@ கல்லாலும் மரத்தாலும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டவை@ இவற்றை வணங்குகிறவர்கள் வெட்கி நாணுவர்.
39 ஆகையால் இவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருத முடியும்? அல்லது சொல்ல முடியும்?
40 மேலும், கல்தேயர்களே இவற்றை அவமதிக்கிறார்கள்@ ஊமையன் ஒருவனை அவர்கள் பேல் என்னும் சிலைக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தி, அவனுக்குப் பேசும் ஆற்றலைத் தரும்படி கேட்கிறார்கள்@ இந்தச் சிலைகளுக்கு உணர்ச்சியுண்டு என நினைக்கிறார்கள் போலும்!
41 இதைக்கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே! அவ்வளவு அறிவிலிகள் அவர்கள்! கண்டுபிடித்தால் அவற்றைக் கைவிடுவாரன்றோ?
42 பெண்கள் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு வழியோரங்களில் உட்கார்ந்து சாம்பிராணிக்குப் பதிலாக உமியால் தீ வளர்த்துக் கொண்டிருப்பார்@
43 இந்தப் பெண்களுள் ஒருத்தியை வழிப்போக்கன் ஒருவன் அழைத்துப்போய் அவளோடு உறவுகொள்வானாகில், அவள் தன் பக்கத்தில் இருக்கிற வெறொருத்தியைப் பார்த்து, "நீ என்னைப் போல மதிக்கப்படவில்லை, உன் இடுப்பில் கட்டப்பட்ட கயிறு தெறிக்கப்படவில்லை" என்று சொல்லி, அவளை இகழ்ந்து பேசுவாள்.
44 இந்தத் தெய்வங்களுக்குச் செய்வதெல்லாம் பொய்@ அப்படியிருக்கும் போது, இவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருத முடியும்? அல்லது சொல்ல முடியும்?
45 இவை தச்சனாலும் தட்டானாலும் செய்யப்பட்டவை@ பூசாரிகள் விரும்பியபடியே உருவாக்கப்பட்டவை.
46 இவற்றை உருவாக்கிய வேலைக்காரர்களே நெடுநாள் வாழாமலிருக்க, இவர்களுடைய கைவேலையாகிய உருவங்கள் எப்படித் தெய்வங்களாய் இருக்க முடியும்?
47 தங்களுக்குப் பின் வருகிறவர்களுக்குப் பொய்களையும் வெட்கத்தையுமே விட்டுச் சென்றார்கள்.
48 ஏனெனில் ஏதேனும் சண்டையோ தீமையோ உண்டானால், இந்தப் பூசாரிகள் தங்கள் தெய்வங்களோடு எங்கே போய் ஒளிந்து கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள்.
49 சண்டைக் காலத்திலே தங்களைக் காத்துக்கொள்ளவோ, தீமைகளினின்று தங்களை மீட்டுக் கொள்ளவோ இயலாதவர்களைத் தெய்வங்கள் என்று எப்படி நினைக்கக் கூடும்?
50 இவர்கள் உண்மையில் மரத்தினாலும் பொன், வெள்ளித்தகட்டினாலும் அமைக்கப்பட்ட சிலைகளானதால், ஒருநாள் இவற்றின் பொய்மை எல்லா மக்களுக்கும், எல்லா அரசர்களுக்கும் வெட்ட வெளியாகிவிடும்@ இவை தெய்வங்கள் அல்ல என்பதும், மனிதர்களின் கைவேலைப்பாடாகிய வெறும் சிலைகளே என்பதும், இவற்றுக்குத் தெய்வ வல்லமை ஒன்றுமில்லை என்பதும் பட்டப் பகலாகக் காணப்படும்.
51 ஆம், இவை தெய்வங்கள் அல்ல என்பது யாருக்குத்தான் தெளிவாகாது?
52 ஒரு நாட்டுக்கு ஒர் அரசனை அவை ஏற்படுத்துகிறதில்லை, மனிதர்களுக்கு மழையைத் தருகிறதுமில்லை.
53 அவை தங்களுக்கே நீதி வழங்க முடியாது@ பலாத்காரத்தினின்று நாடுகளை மீட்கவும் இயலாது@ வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பறக்கும் காகங்களைப் போல் அவை வல்லமையற்றவை.
54 மரம், பொன், வெள்ளி இவற்றால் செய்யப்பட்ட தெய்வங்கள் அமர்ந்திருக்கும் கோயிலில் தீப்பற்றிக் கொண்டால், அவற்றின் பூசாரிகள் தப்பிப் பிழைத்தோடிப் போக, வீட்டின் விட்டங்களைப் போல் அவை சுட்டெரிக்கப்படும்.
55 அரசனையோ போரையோ அவற்றால் எதிர்க்க இயலாது. அப்படியிருக்க, அவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருதமுடியும் அல்லது ஏற்றுக்கொள்ள முடியும்?
56 மரம், கல், பொன், வெள்ளி இவற்றால் உருவாக்கப்பட்ட இத்தெய்வங்கள் திருடர்களிடமிருந்தோ, கள்ளர்களிடமிருந்தோ தங்களைக் காத்துக் கொள்ள முடியாது.
57 வலிமை வாய்ந்த மனிதர்கள், இவை அணிந்திருக்கும் பொன், வெள்ளி அணிகலன்களையும் உடைகளையும் திருடிக் கொண்டு போகும் போது, இவை தங்களைக் காத்துக் கொள்ள இயலாது.
58 ஆதலால் இத்தகைய பொய்த் தெய்வங்களாய் இருத்தலை விடத் தன் வல்லமையைக் காட்டுகின்ற ஒர் அரசனாக இருத்தல் மேலானது@ அல்லது தன்னை வைத்திருப்பவனுக்குப் பயன்படுகின்ற ஒரு பாண்டமாய் இருத்தல் மேலானது@ அல்லது வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைப் பத்திரமாய்க் காக்கும் ஒரு கதவாய் இருத்தல் மேலானது. அரண்மனையில் ஒரு மரத்தூணாய் இருப்பது மேலானது.
59 கதிரவன், நிலா, விண்மீன்கள் இவையெல்லாம் ஒளி வீசுகின்றன@ அவை மனிதர்களின் நன்மைக்காக அனுப்பப்பட்டவையாதலால், கடவுளுக்கு அமைந்திருக்கின்றன.
60 அவ்வாறே மின்னல்கள் மின்னும் போது தங்கள் மகத்துவத்தைக் காட்டுகின்றன@ காற்றும் நாட்டின் நாலா பக்கங்களிலும் வீசுகிறது.
61 கடவுள் கட்டளையிடுகிறார். வானத்து மேகங்கள் அந்தக் கட்டளையின்படியே உலகெங்கும் பரவுகின்றன.
62 வானத்தினின்று இறங்கும் நெருப்பும் கடவுளின் கட்டளைப்படி மலைகளையும் காடுகளையும் அழிக்கின்றது@ இப்படைப்புப் பொருட்களுக்குள்ள அழகு, ஆற்றல் இத்தெய்வங்களில் எதற்கும் கிடையாது.
63 அவற்றைத் தெய்வங்கள் என்று கருதவோ சொல்லவோ கூடாது@ ஏனெனில் அவற்றால் மனிதருக்கு நீதி வழங்க முடியாது@ நன்மையோ தீமையோ செய்யவும் இயலாது.
64 ஆகவே அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்திருக்கும் நீங்கள் அவற்றுக்குச் சிறிதும் அஞ்சவேண்டா.
65 நாடாளும் மன்னர்களை அவை ஆசீர்வதிக்கிறதுமில்லை, சபிக்கிறதுமில்லை.
66 மக்களுக்கு வானத்தில் அருங்குறிகளைக் காட்ட முடியாது. கதிரவனைப் போலச் சுடர் விடுவதுமில்லை@ நிலாவைப் போல் ஒளி வீசுவதுமில்லை.
67 அவற்றைவிட மிருகங்கள் எவ்வளவோ மேலானவை@ ஏனெனில் இருப்பிடத்துக்கு ஓடித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளவாவது அவற்றால் இயலுகிறது@
68 அவை தெய்வங்கள் என்பதற்கு யாதொரு ஆதாரமும் இல்லை@ ஆகவே அவற்றுக்கு அஞ்ச வேண்டா.
69 வெள்ளரித் தோட்டத்துக்குக் காவலாக வைக்கப்படும் பொம்மை எதையும் காவல் காக்காதது போலவே, மரம், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த அந்தத் தெய்வங்களும் இருக்கின்றன.
70 மரம், பொன், வெள்ளி இவற்றால் ஆன அத்தெய்வங்கள், வானத்துப் பறவைகள் தங்கி இளைப்பாறும் தோட்டத்து முட்செடிக்கும், காரிருளடர்ந்த ஒரிடத்தில் எறியப்பட்ட பிணத்துக்கும் ஒப்பானவை.
71 அவற்றைப் போர்த்தியிருக்கும் பட்டுப் பட்டாவளிகள் மக்கிப் போவதிலிருந்தே, அவை தெய்வங்கள் அல்ல என்பது தெளிவாகிறது@ இறுதியில் அவையும் அரித்துத் தின்னப்பட்டு, நாட்டுக்கே நிந்தையாகவும் நகைப்பாகவும் இருக்கும்.
72 ஆகவே, சிலைகளை வைத்திராத நீதிமானே மேலானவன்@ ஏனெனில் அவன் நிந்தை அவமானத்திற்கு உள்ளாகமாட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு, தெய்வங்கள், பொன், அவற்றின், தங்கள், அந்தத், பூசாரிகள், அவற்றால், ஏனெனில், அல்ல, வெள்ளி, கொண்டு, போல், முடியாது@, மரம், முடியும், ஆகவே, ஏற்பாடு, அல்லது, முடியாது, செய்யப்பட்ட, நீங்கள், தெய்வங்களின், காத்துக், போது, இயலாது, அவற்றைக், பழைய, மேலும், தெய்வங்களுக்கு, இவற்றை, எவ்வாறு, பாரூக், அவற்றைத், பெண்கள், அவற்றுக்கு, அஞ்சவேண்டா, அத்தெய்வங்கள், முன், ஆகமம், என்பது, இவர்கள், இதிலிருந்து, மேல், பொன்னாலும், வெள்ளியாலும், என்பதும், இவற்றால், இருத்தல், அந்தப், தங்களைக், இருக்கும், கொள்ள, வழங்க, உட்கார்ந்து, செய்தாலும், நீதி, உடைகளை, மக்களுக்கு, காலத்திலும், மேலானது, வைக்கப்படும், மேலானது@, போலச், மனிதர்களின், கருத, செய்ய, செய்யப்பட்டவை@, தெய்வங்களாய், இந்தப், கயிறு, இடுப்பில், இவற்றைத், ஒருவன், இயலாது@, ஒருவனை, போய், எல்லா, சொல்ல, தீமையோ, அத்தெய்வங்களுக்கு, ஒருவனைச், உங்கள், ", வணங்கும், தெய்வங்களை, அவர்களுடைய, மரத்தாலும், கையில், போலவே, சிலை, முன்னும், அவற்றைப், பபிலோனிய, ஆன்மிகம், திருவிவிலியம், அடிமைகளாய்க், கடவுள், முதலியவற்றால், பிறகு, கடவுளுக்கு, கொண்டிருந்தாலும், போலத், உடைகளையும், விட்டங்களைப், வீட்டின், அவ்வாறே, அறிந்து, வெறும், ஆகையால், கொள்ளுங்கள்@, அவற்றில், தங்களுக்கு, ஒப்பானவை, கள்ளர்களிடமிருந்தோ, தன்னை, அவற்றை, வீட்டில், காவல், கையிலிருந்து, செய்த, மாட்டா@