ஆமோஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 7
2 நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்த பின்," இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்@ உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்@ யாக்கோபு எப்படிப் பிழைக்கக் கூடும்? அவன் மிகச் சிறியவனாயிற்றே!" என்றேன்.
3 ஆண்டவர் அதைக் குறித்து மனம் மாறினார்@ "அது நிகழாது" என்றார் ஆண்டவர்.
4 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, இறைவனாகிய கடவுள் தாமே பழிவாங்குவதற்காக நெருப்பைத் தருவித்தார்@ அது ஆழ்ந்த கடலை வற்றச் செய்து விட்டு, நிலத்தையும் இரையாக்கிக் கொண்டிருந்தது.
5 நான்: "இறைவனாகிய ஆண்டவரே, நிறுத்தும், உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்@ யாக்கோபு எப்படிப் பிழைக்கக் கூடும்? அவன் மிகச் சிறியவனாயிற்றே!" என்றேன்.
6 ஆண்டவர் அதைக் குறித்து மனம் மாறினார்@ "இதுவும் நிகழாது" என்றார் இறைவனாகிய ஆண்டவர்.
7 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, தூக்கு நூற்குண்டைக் கையில் பிடித்தவராய் ஒரு மதிலருகில் ஆண்டவர் நின்று கொண்டிருந்தார்.
8 ஆமோசே, நீ காண்பதென்ன?" என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், "அது தூக்கு நூற்குண்டு" என்றேன்@ ஆண்டவர் தொடர்ந்து சொன்னார்: "இதோ, தூக்கு நூற்குண்டு நம் மக்களாகிய இஸ்ராயேலின் நடுவில் தொங்க விட்டுப் பரிசோதிக்கப் போகிறோம்@ இனி அவர்களை ஒரு போதும் மன்னியோம்@
9 ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும், இஸ்ராயேலின் பரிசுத்த இடங்கள் பாலை வெளியாக்கப்படும், யெரோபோவாம் வீட்டார்க்கு எதிராய் நாம் வாளுடன் வருவோம்."
10 அப்போது, பேத்தேலின் அர்ச்சகனாகிய அமாசியாஸ் என்பவன் இஸ்ராயேல் அரசனாகிய யெரோபோவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: "இஸ்ராயேல் வீட்டார்களின் நடுவில் ஆமோஸ் உமக்கு எதிராகக் கலகம் விளைவிக்கிறான்@ நாடு அவன் சொற்களைப் பொறுக்க இயலாது.
11 ஏனெனில், ஆமோஸ், ~யெரோபோவாம் வாளால் மடிவான்@ அவனது நாட்டை விட்டு இஸ்ராயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும் ~ என்று சொல்லுகிறான்."
12 பின்பு அமாசியாஸ் ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, போய்விடு@ யூதாவின் நாட்டுக்கு ஓடி விடு@ அங்கே போய் இறைவாக்குச் சொல், பிழைப்புத் தேடிக்கொள்.
13 இனிப் பேத்தேலில் மறுபடியும் இறைவாக்குச் சொல்லாதே@ ஏனெனில் இது அரசரின் பரிசுத்த இடம், அரசுக்குரிய கோயில்" என்று சொன்னான்.
14 ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமாசியாசைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினனுமல்லேன், இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனுமல்லேன்@ நான் ஆடுமாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரங்களைக் கண்காணிப்பவன்.
15 ஆடுகளை ஓட்டிக் கொண்டு போன என்னை ஆண்டவர் தெரிந்தெடுத்து, ~ நம் மக்களாகிய இஸ்ராயேலிடம் போய், இறைவாக்குக் கூறு~ என்று அனுப்பினார்.
16 இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: ~இஸ்ராயேலுக்கு எதிராக இறைவாக்குச் சொல்லாதே, ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே~ என்று நீ சொல்லுகிறாயே!
17 ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ~உன் மனைவி நகரத்தில் விலைமகளாய் இருப்பாள், உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவார்கள், உன் நிலபுலம் பங்குபோட்டுக் கொள்ளப்படும், நீயோ தீட்டுள்ள நாட்டிலே மாண்டு போவாய்@ இஸ்ராயேல் தன் நாட்டை விட்டுத் தொலை நாட்டுக்கு அடிமையாய்க் கூட்டிப் போகப்படும்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆமோஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ", ஆண்டவர், இறைவனாகிய, ஆமோஸ், ஏற்பாடு, இஸ்ராயேல், நான், பழைய, காட்சி, அவன், இதுவே, இறைவாக்குச், ஆகமம், காட்டிய, தூக்கு, எனக்குக், பார்த்துக், பரிசுத்த, இடங்கள், மக்களாகிய, நடுவில், இஸ்ராயேலின், ஈசாக்கின், அடிமையாய்க், போகப்படும், நாட்டுக்கு, போய், கொண்டு, நாட்டை, இவ்வாறு, ஏனெனில், வாளால், அமாசியாஸ், அதைக், உம்மைக், கெஞ்சி, மன்றாடுகிறேன்@, யாக்கோபு, ஆண்டவரே, கொண்டிருந்தார், திருவிவிலியம், ஆன்மிகம், பின், எப்படிப், பிழைக்கக், மனம், மாறினார்@, நிகழாது", என்றார், குறித்து, என்றேன், கூடும், மிகச், சிறியவனாயிற்றே, விட்டு