பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்। ந த்வத்ஸமோ அஸ்த்யப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயே அப்யப்ரதிமப்ரபாவ॥ 11.43 ॥ |
ஒப்பற்ற பெருமை உடையவனே ! அசைவதும் அசையாததும் நிறைந்த இந்த உலகின் தந்தை நீயே. பூஜிக்கதக்கவனும் மேலான குருவும் நீயே. மூன்று உலகங்களிலும் உனக்கு சமமானவர் இல்லை. உன்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்। பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்॥ 11.44 ॥ |
தேவா ! இறைவனும் போற்றதக்கவனுமாகிய உன்முன் நான் கீழே விழுந்து வணங்குகிறேன். அருள்புரிய வேண்டும். மகனை தந்தையும், நண்பனை நண்பனும், காதலியை காதலனும் பொருத்து கொள்வதுபோல் என்னை பொருத்து அருள் மாறு வேண்டுகிறேன்.
அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ அஸ்மி த்ருஷ்ட்வா
பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே। ததேவ மே தர்ஷய தேவ ரூபம் ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.45 ॥ |
தேவா ! தேவர் தலைவா உலகின் இருப்பிடமானவனே ! முன்பு காணாததை கண்டு மகிழ்கிறேன். ஆனாலும் பயத்தால் என் மனம் நடுங்குகிறது. ( இனிமை ததும்பும் ) அந்த பழைய உருவத்தையே எனக்கு காட்ட வேண்டும், அருள் புரிக.
கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம்
இச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ। தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே॥ 11.46 ॥ |
ஆயிரம் கைககள் உடையவனே, உலககெங்கும் நிறைந்த வடிவத்தை உடையவனே ! உன்னை முன் போலவே கிரீடம் தரித்தவனாக, கதை ஏன்தியவனாக, சக்கரத்தை கையில் தாங்கியவனாக நான் தரிசிக்க விரும்புகிறேன், நான்கு கைகள் உடைய அந்த உருவத்துடனேயே இருப்பாயாக.
ஸ்ரீபகவாநுவாச। |
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம்
ரூபம் பரம் தர்ஷிதமாத்மயோகாத்। தேஜோமயம் விஷ்வமநந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்॥ 11.47 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ஒளிமயமானதும் எங்கும் நிறைந்ததும், முடிவற்றதும், முதலில் இருந்ததுமான எனது மேலான உருவத்தை மகிழ்ச்சி காரணமாக நான் எனது யோக சக்தியில் உனக்கு காட்டினேன். உன்னை தவிர வேறு யாரும் இந்த முன்பு இதனை கண்டதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, நான், உடையவனே, பதினொன்றாவது, உன்னை, ஸ்ரீமத், யோகம், விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், பொருத்து, வேண்டும், ரூபம், எனது, முன்பு, அந்த, அருள், நீயே, இந்து, gita, bhagavad, நிறைந்த, உலகின், உனக்கு, மேலான, தேவா