பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
பஷ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஷ்விநௌ மருதஸ்ததா। பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஷ்யாஷ்சர்யாணி பாரத॥ 11.6 ॥ |
அர்ஜுனா ! ஆதித்தர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அசுவினிகள், மருத்துகள் என்று பலரையும் பார். இது வரை காணாத பல ஆச்சர்யங்களையும் பார்.
இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஷ்யாத்ய ஸசராசரம்। மம தேஹே குடாகேஷ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி॥ 11.7 ॥ |
தூக்கத்தை வென்றவனே ! அசைவதும் அசையாததுமாகிய உலகம் முழுவதையும் இன்னும் வேறு எதையெல்லாம் பார்க்க விரும்பினாயோ அவையெல்லாம் எனது இந்த உடம்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை இப்போது பார்.
ந து மாம் ஷக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா। திவ்யம் ததாமி தே சக்ஷு: பஷ்ய மே யோகமைஷ்வரம்॥ 11.8 ॥ |
உனது இந்த கண்ணினால் என்னை பார்க்க இயலாது.எனவே உனக்கு தெய்வீக கண்ணை தருகிறேன். எனது யோக சக்தி மகிமையை பார்.
ஸம்ஜய உவாச। |
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஷ்வரோ ஹரி:। தர்ஷயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஷ்வரம்॥ 11.9 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: மன்னா ! மகா யோகேசுவரராகிய கிருஷ்ணர் இவ்வாறு கூறிவிட்டு, மேலான தமது தெய்வீக வடிவை அர்ஜுனனுக்கு காட்டினார்.
அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஷநம்। அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்॥ 11.10 ॥ |
அந்த வடிவம் எண்ணற்ற முகங்களும் கண்களும் உடையது. பல அதிசிய காட்சிகள் நிறைந்தது. பல தெய்வீக ஆபரணங்கள் அணிந்து தெய்வீகமான பல ஆயுதங்கள் ஏந்தியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பார், பகவத்கீதை, விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், தெய்வீக, பதினொன்றாவது, ஸ்ரீமத், யோகம், எனது, பார்க்க, bhagavad, இந்து, gita