பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந। ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்॥ 10.39 ॥ |
அர்ஜுனா ! எல்லா உயிர்களுக்கும் எது விதையாகிறதோ, அது நான், அசைவதும் அசையாததுமான பொருள் எது இருக்கிறதோ அது என்னை தவிர வேறில்லை.
நாந்தோ அஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரம்தப। ஏஷ தூத்தேஷத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா॥ 10.40 ॥ |
எதிரிகளை வாட்டுபவனே ! எனது தெய்வீக மகிமைகளுக்கு முடிவு இல்லை. கோடிகாட்டுவது போல் இதுவரை சிலவற்றை சொன்னேன்.
யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா। தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ஷஸம்பவம்॥ 10.41 ॥ |
மிக மேலான மகிமையுடனும், ஐசுவரியத்துடனும் சோர்வற்ற முயற்சியுடனும் எவையெல்லாம் உள்ளனவோ அவை எல்லாம் எனது தேஜசின் ஒரு பகுதியால் உண்டானது என அறிந்துகொள்.
அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந। விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஷேந ஸ்திதோ ஜகத்॥ 10.42 ॥ |
அர்ஜுனா ! இவ்வாறு பலவற்றை அறிந்துகொல்வதால் உனக்கு ஆவதென்ன ? எனது ஓர் அம்சத்தால் இந்த பிரபஞ்சம் முழுவதையுமே தாங்குகிறேன்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே விபூதியோகோ நாம தஷமோ அத்யாய:॥ 10 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'விபூதி யோகம்' எனப் பெயர் படைத்த பத்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பத்தாவது, யோகம், அத்தியாயம், விபூதி, எனது, அர்ஜுனா, gita, bhagavad, இந்து