பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந। பூய: கதய த்ருப்திர்ஹி ஷ்ருண்வதோ நாஸ்தி மே அம்ருதம்॥ 10.18 ॥ |
ஜனார்த்தனா ! உனது யோகத்தையும் மகிமையையும் மீண்டும் எனக்கு விரிவாக சொல்ல வேண்டும், ஏனெனில் அந்த அமுத மொழிகளை கேட்பதில் எனக்கு திருப்தியே வருவதில்லை .
ஸ்ரீபகவாநுவாச। |
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:। ப்ராதாந்யத: குருஷ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே॥ 10.19 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: குருகுல பெருவீரனே ! நல்லது, எனது தெய்வீக மகிமைகளில் முக்கியமானவற்றை மட்டும் உனக்கு சொல்கிறேன். ஏனெனில் எனது மகிமைகளுக்கு எல்லையே இல்லை.
அஹமாத்மா குடாகேஷ ஸர்வபூதாஷயஸ்தித:। அஹமாதிஷ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச॥ 10.20 ॥ |
தூக்கத்தை வென்றவனே ! எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கின்ற ஆன்மா நான். உயிர்களின் ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே.
ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஷுமாந்। மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஷஷீ॥ 10.21 ॥ |
நான் ஆதித்தர்களில் விஷ்ணு, ஒளிர்பவற்றில் கிரணங்களை உடைய சூரியன், மருத்துக்களில் மரிசியாக இருக்கிறேன். நட்சத்திரங்களில் நான் சந்திரன்.
வேதாநாம் ஸாமவேதோ அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:। இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா॥ 10.22 ॥ |
நான் வேதங்களில் சாம வேதம், தேவர்களில் இந்திரன், புலன்களில் மனம், உயிர்களில் உணர்வு.
ருத்ராணாம் ஷங்கரஷ்சாஸ்மி வித்தேஷோ யக்ஷரக்ஷஸாம்। வஸூநாம் பாவகஷ்சாஸ்மி மேரு: ஷிகரிணாமஹம்॥ 10.23 ॥ |
நான் ருத்திரர்களில் சங்கரன், யட்சர்கள் மற்றும் ரட்சஷர்களுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரனாகவும், வசுக்களில் அக்னியாகவும், சிகரமுள்ள மலைகளில் மேருவாகவும் நான் இருக்கிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, நான், பகவத்கீதை, யோகம், பத்தாவது, ஸ்ரீமத், அத்தியாயம், விபூதி, உயிர்களின், இருக்கிறேன், எனது, எனக்கு, bhagavad, இந்து, gita, ஏனெனில்