இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:। ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்॥ 2.51 ॥ |
புத்தியில் நிலை பெற்ற மகான்கள் செயலினால் உண்டாகின்ற பலனை விட்டுவிட்டு, அதனால் பிறவி தலையிலிருந்து விடுபட்டு துன்பமற்ற நிலையை நிச்சயமாக அடைகிறார்கள்.
யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி। ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச॥ 2.52 ॥ |
உனது அறிவு எப்போது மனமயக்கமாகிய குற்றத்தை கடக்குமோ அப்போது கேட்க வேண்டியதிலும் கேட்டவற்றிலும் உனது பற்று விலகும்.
ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா। ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥ |
பலவற்றை கேட்டு கலக்கம் அடைந்துள்ள உனது அறிவு எப்போது நிலையாக அசையாமல் உன்னில் நிற்குமோ அப்போது புத்தி யோகத்தை அடைவாய்.
அர்ஜுன உவாச। |
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஷவ। ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்॥ 2.54 ॥ |
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா , மனம் ஒருமுக பட்ட ஒருவனின் அடையாளம் என்ன ? புத்தி விழிபுற்றவனான அவன் எப்படி பேசுவான் ? எப்படி இருப்பான் ? எப்படி நடந்து கொள்வான்.
ஸ்ரீபகவாநுவாச। |
ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்। ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே॥ 2.55 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! எப்போது ஒருவன் தன்னாலேயே தன்னில் திருப்தி கொண்டு, அதனால் மனத்தின் எல்லா ஆசைகளையும் விடுகிறானோ அப்போது அவன் புத்தி யோகி என்று சொல்லபடுகிறது.
து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:। வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥ |
யாருடைய மனம் துக்கத்தில் துவல்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ அவன் புத்தி விழிப்புற்ற முனிவன் என்று கூறபடுகின்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, புத்தி, பகவத்கீதை, உனது, அத்தியாயம், எப்போது, அப்போது, இரண்டாவது, ஸ்ரீமத், அவன், யோகம், ஸாங்க்ய, எப்படி, பற்று, மனம், அதனால், bhagavad, gita, இந்து, அறிவு