இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
மனிதன் ( அல்லது ) ஒரு ஜீவன் ( அல்லது ) ஒரு உயிரி என்பது ஜட உடல் மற்றும் ஆன்மா இவை இரண்டின் கூட்டமைப்பே மனிதன் அல்லது உயிரி. இதில் மனிதன் இறந்து விட்டால் மனித உடல் மட்டுமே அழியும் அதில் உள்ளே இருக்கும் ஆன்மா அழியாது.
நிர்ணயிக்கப்பட்ட கர்மத்தை ( அல்லது ) வேலையை ஒருவன் செய்தே ஆகவேண்டும். வேலை ( அல்லது ) கடமை செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் அதை செய்யாமல் விட்டால் அவனை பாவம் வந்து சேரும். மேலும் அனைத்து கொடுக்கப்பட்ட வேலையை / கடமையை செய்ய வெறுப்போ விருப்போ கொள்ள கூடாது. அவ்வாறு விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தால் தான் புத்தி விழித்தெழும். புத்தி விழித்தெழுந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவனை நோக்கி முன்னேறலாம்.
ஆசை, காமம், கோபம் இவற்றை முற்றிலும் விட வேண்டும். இவை மூன்றும் தான் மனிதனை அங்கும் இங்கும் இழுத்து அலைக்கழிக்கிறது. ஆகையால் இந்த மூன்றையும் விட்டு மனத்தை அமைதியாக நிலையாக வைத்து தனது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.
ஒரு வேலையை செய்து விட்ட பிறகு அந்த வேலையின் முடிவு தோல்வியாக இருந்தாலும் அதற்காக மிகுந்த வருத்தம் கொள்ள வேண்டாம். ஏனெனில் அந்த வேலையை அவன் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் முழுமையாக செய்து இருக்கிறான். அதன் பலனில் / முடிவில் அவனின் அதிகாரம் இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
“கடமையை கண்ணும்கருத்துமாக செய்வதற்கு மட்டுமே நமக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலனில் எந்த வித அதிகாரமும் இல்லை.”
இன்பம் – துன்பம், சூடு – குளிர், கோடை – மழை, சுகம் – துக்கம் இவை இயற்கையிலிருந்து தோன்றுகின்றன. இவற்றால் மனம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதாவது இவை நிலையானவை அல்ல. தோன்றி மறைபவை.
இன்பம் வரும் போது மிகுந்த இன்பத்தை அடைவதும் துன்பம் வரும்போது மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்து விடுவதும் நல்ல கதிக்கு ஒரு மனிதனை கொண்டு செல்லாது. இங்கே ஏற்படுகின்ற இன்பமும் துன்பமும் தற்காலிகமானவை. அவற்றில் ஆழ்ந்துவிட கூடாது. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை இயற்கையிலிருந்து தோன்றுபவை. இறைவனை அடைந்த பிறகு கிடைக்கும் இன்பமே நிரந்தரமானது. அந்த நிரந்தரமான இன்பத்தை அடைய இறைவனை நோக்கி முன்னேற வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, வேண்டும், கொள்ள, அல்லது, பகவத்கீதை, வேலையை, வெறுப்பு, மனம், அமைதியாக, மிகுந்த, இரண்டாவது, அந்த, மனிதன், ஸாங்க்ய, அத்தியாயம், யோகம், இறைவனை, ஸ்ரீமத், இல்லாமல், மனிதனை, செய்து, எந்த, இன்பம், துன்பம், இயற்கையிலிருந்து, இன்பத்தை, இல்லை, அதிகாரம், ஏனெனில், நோக்கி, பலனில், பிறகு, விருப்பு, உடல், ஆன்மா, விட்டால், உயிரி, இந்து, bhagavad, gita, மட்டுமே, இருக்கும், இருந்தால், தான், கூடாது, செய்ய, செய்வதற்கு, இருக்கிறது, புத்தி