பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:। ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:॥ 18.70 ॥ |
தர்மபரமான இந்த நமது உரையாடலை யார் படிக்கிறானோ அவன் என்னை அறிவு வேள்வியால் வழிப்பட்டவன் ஆவான். இது எனது கருத்து.
ஷ்ரத்தாவாநநஸூயஷ்ச ஷ்ருணுயாதபி யோ நர:। ஸோ அபி முக்த: ஷுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்॥ 18.71 ॥ |
இதனை அவமதிக்காமல், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையோடு ஒருவன் கேட்டால் அவனும் முக்தனாகி புண்ணியம் செய்தவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைவான்.
கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா। கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநம்ஜய॥ 18.72 ॥ |
அர்ஜுனா ! இதனை நீ ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்டாயா ? தனஞ்சயா ! அறியாமையிலிருந்து தோன்றியதான உனது மனக்குழப்பம் தெளிந்ததா ?
அர்ஜுன உவாச। |
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயா அச்யுத। ஸ்திதோ அஸ்மி கதஸம்தேஹ: கரிஷ்யே வசநம் தவ॥ 18.73 ॥ |
அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! உனதருளால் என் மனமயக்கம் ஒழிந்தது. சுயநினைவு வந்தது. சந்தேகங்கள் விலகின . என் மனம் உறுதி பெற்று விட்டது. உனது சொற்படியே செய்கிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பதினெட்டாவது, யோகம், அத்தியாயம், சன்யாஸ, மோட்ச, உனது, இதனை, bhagavad, gita, இந்து