பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அந்யே த்வேவமஜாநந்த: ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே। தே அபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஷ்ருதிபராயணா:॥ 13.25 ॥ |
இன்னும் சிலரோ இவ்வாறு அறியாதவர்கள், ஆனால் பிறரிடமிருந்து கேட்டு வழிபடுகின்றனர். கேட்டதில் முழு மனத்துடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற அவர்களும் மரணத்தை நிச்சயமாக கடக்கின்றனர்.
யாவத்ஸம்ஜாயதே கிம்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்। க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப॥ 13.26 ॥ |
பரத குலத்தில் சிறந்தவனே ! அசையாததும் அசைவதுமாகிய எந்த பொருள் தோன்றியிருந்தாலும், அது வீடு மற்றும் குடியிருப்பவன் இரண்டின் சேர்க்கையாலேயே தோன்றியுள்ளது என்று அறிந்து கொள்.
ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்। விநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 13.27 ॥ |
எல்லா உயிரினங்களிலும் சமமாக உறைபவரும், அழிகின்ற பொருட்களுக்குள் அழியாமல் இருப்பவரும் ஆகிய மேலான இறைவனை யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.
ஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்। ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்॥ 13.28 ॥ |
எங்கும் சமமாக நிறைந்து இருக்கின்ற இறைவனை காண்பவன் தன்னால் தன்னை அழித்துகொல்வதில்லை. அதனால் மேலான கதியை அடைகிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், அத்தியாயம், பதின்மூன்றாவது, க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக, யோகம், மேலான, இறைவனை, சமமாக, இந்து, gita, bhagavad, ஸமம்