பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ। விவிக்ததேஷஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி॥ 13.10 ॥ |
வேறு எதையும் நாடாமல் என்னிடம் மாறாத பக்தி கொள்ளல், தனியிடத்தை நாடுதல், மக்கள் கூட்டத்தை விரும்பாதிருத்தல்.
அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்। ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோ அந்யதா॥ 13.11 ॥ |
ஆன்ம உணர்வில் நிலைபெற்றிருத்தல், லட்சிய நாட்டம் ஆகியவை ஞானம் என்று சொல்லபடுகிறது. இதற்கு வேறானது அஞ்ஞானம்.
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா அம்ருதமஷ்நுதே। அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே॥ 13.12 ॥ |
எதை அறிய வேண்டுமோ, எதை அறிந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாமோ அதை சொல்கிறேன். அது ஆரம்பம் இல்லாதது, மேலானது, பெரியது, இருப்பது என்றோ இல்லாதது என்றோ சொல்ல முடியாது.
ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ அக்ஷிஷிரோமுகம்। ஸர்வத: ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி॥ 13.13 ॥ |
அந்த பரம்பொருள் எங்கும் கைகள், கால்கள், கண்கள், தலைகள், வாய்கள், காதுகளை உடையவர். அவர் உலகில் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கிறார்.
ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்। அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச॥ 13.14 ॥ |
அவர் எல்லா புலன்களையும் இயங்க செய்கிறார் ஆனால் அவர் எந்த புலன்களும் இல்லாதவர், பற்றற்றவர், ஆனால் அனைத்தையும் தாங்குகிறார். குணமே இல்லாதவர் ஆனால் எல்லா குணங்களையும் அனுபவிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதின்மூன்றாவது, அவர், ஸ்ரீமத், அத்தியாயம், க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக, யோகம், இல்லாதவர், எல்லா, ஸர்வத, இல்லாதது, gita, இந்து, bhagavad, என்றோ