கேள்வி எண் 97 - சட்டக்கேள்விகள் 100
97. சில காலங்களாக என் தோழியை ஈவ்டீசிங் செய்து வந்த ஒருவன் திடீரென அவள் பெயரை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டான். என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?
சமீபத்தில் என் தோழி அவருடன் வேலை பார்க்கும் நபரின் தொல்லையால் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டாள். அதாவது அவளும் நானும் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் என் தோழியை தொடர்ந்து ஈவ்-டீசிங் செய்து வந்தான். ஆகையால் முதலில் கம்பெனி நிர்வாகத்திடம் எனது தோழி வாய்மொழியாக புகார் அளித்ததுடன் பிஸினஸ் மேனேஜருக்கு ஈ.மெயிலில் புகார் அனுப்பியிருந்தாள். கம்பெனி நிர்வாகத்தின் எச்சரிக்கை யையும் மீறி தொடர்ந்து அந்த நபர் ஈவ்டீசிங் செய்து வந்தான். ஒருநாள் கம்பெனிக்கு வெளியே திடீரென்று எனது தோழியை தாக்கியது மட்டுமல்லாமல் புகார் அளித்தது பற்றி கடுமையான வார்த்தைகளால் சாடினான். உடனே செக்யூரிட்டியை அழைத்தாள் என் தோழி, அவர்கள் விரட்டிவருவதைக் கண்டவுடன் அவன் விரைந்து ஓடிவிட்டான்.
மறுநாள் அந்த நபரை கம்பெனியிலிருந்து விலக்கி விட்டனர், உடனே அவன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டான். மேலும், இந்த தற்கொலைக்கு எனது தோழி தான் காரணம் என்றும் எழுதி வைத்து விட்டான். இதைக் கண்டதும் அவனது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து FIR போட்டுவிட்டனர்.
இந்நிலையில் என் தோழி எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று கூறினால் உதவியாக இருக்கும்.
- U.சந்தான லட்சுமி, பெங்களுரு
பதில் :
தற்போது உங்கள் தோழி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதனால் வேறு வழியே இல்லை. உங்கள் தோழி அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை எதிர் கொண்டு உங்கள் தோழி தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டியது அவரது கடமை. உங்கள் தோழி எந்த விதத்திலும் அவனது தற்கொலைக்கு காரணமில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த உண்மையை நீதிமன்றம் முன்னிலையில் நீங்கள் நிருபிக்க வேண்டியது அவசியம்.
உங்கள் தோழி கம்பெனி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரும், அவர் அனுப்பிய ஈ.மெயிலும், மேலும் அந்த நபர் உங்கள் தோழியை தாக்க முனையும் போது கம்பெனி செக்யூரிட்டி விரைந்து வந்த நிகழ்வுகள் எல்லாம் உங்கள் வழக்கினை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும், உங்கள் தோழி குற்றமற்றவர். ஒன்றுமறியாதவர் என்று நீதிமன்றம் முன் நிரூபிக்க முடியும். மேலும், உங்கள் தோழி உடனடியாக பிணை ஆணை (Bail) கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்வது நல்லது இல்லையென்றால் காவல் துறையினர் வெகு விரைவில் உங்கள் தோழியை கைது செய்யக்கூடும். உடனடியாக ஒரு நல்ல குற்றவியல் வழக்குரைஞரை அணுகி உரிய நீதிமன்றத்தை நாடுவதன் மூலம் நீங்கள் இந்த வழக்கிலிருந்து விடுபடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தோழி, உங்கள், தோழியை, புகார், கம்பெனி, செய்து, மேலும், அந்த, எனது, வேலை, காவல், உதவியாக, இருக்கும், அவனது, மீது, நீதிமன்றம், நீங்கள், உடனடியாக, வேண்டியது, நிரூபிக்க, அவர், வழக்கினை, தான், நபர், என்ன, பார்க்கும், தற்கொலை, ஒருவன், ஈவ்டீசிங், வந்த, கம்பெனியில், தொடர்ந்து, அவன், விரைந்து, உடனே, நிர்வாகத்திடம், வந்தான், தற்கொலைக்கு