கேள்வி எண் 94 - சட்டக்கேள்விகள் 100
94. ஒரு கம்பெனியில் பணியிலிருந்து விலகி அதே துறையைச் சேர்ந்த வேறு கம்பெனியில் பணியைச் செய்ய ஏதெனும் தடை உள்ளதா?
நான் ஒரு பிரபல தொழில் நிறுவனத்தில் பணிபுரிகிறேன், நான் பணியில் சேரும்போது என்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். அதாவது, அந்த ஒப்பந்தத்தில் நான் வேலைக்கு சேர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் இங்கு நிச்சய மாக பணிபுரிய வேண்டும் என்பதும், மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கம்பெனியிலிருந்து வேறு கம்பெனிக்கு செல்ல நினைத்தால் இதே பணியைச் செய்யும் வேறு எந்த நிறுவனத்திற்கும் வேலைக்கு செல்லாக்கூடாது என்றும் ஒப்பந்தம் செய்து என்னிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகுமா?
- G.கார்த்திக் ராஜா, கோயமுத்தூர்
பதில் :
நீங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் முதல் ஷரத்தானது பொதுவானதே, இது அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் இரண்டாவது ஷரத்தானது அதாவது ஒரே பணியை செய்யும் வேறு எந்த நிறுவனத்திலும் பணியில் சேரக்கூடாது என்பது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது. இந்த ஒப்பந்தமானது இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) பிரிவு 27 ன் படி சட்ட மீறலாகும். இந்திய ஒப்பந்தச் சட்டமானது சுதந்திரமாக வேலை செய்வதை உறுதி செய்கிறது. உச்சநீதிமன்றத்தின் தெளிவுரைப்படி ஒப்பந்தம் முடிந்த பின்பு ஒருவருடைய சுதந்திரத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே உங்களுடைய இந்த ஒப்பந்தமானது செல்லத்தக்கதல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, ஒப்பந்தம், வேறு, நான், எந்த, செய்யும், ஷரத்தானது, இந்திய, ஒப்பந்தச், இரண்டு, ஒப்பந்தமானது, அதாவது, தொழில், பணியைச், பணியில், என்னிடம், ஒப்பந்தத்தில், கம்பெனியில், வேலைக்கு