கேள்வி எண் 92 - சட்டக்கேள்விகள் 100
92. என் தந்தையின் குடும்ப சொத்தில் என் அனுமதியில்லாமல், அவருடைய சகோதரர்கள் பாகப்பிரிவினை செய்துகொண்டார்கள். அந்த சொத்தினை திரும்பப்பெற சட்டரீதியான வழிமுறை என்ன?
என் பெயர் கலைவாணன், என்னுடைய தந்தைக்கும் அவருடைய இரண்டு சகோதரர்களுக்கும் சேர்த்து குடும்ப சொத்து ஒன்று உளுந்தூர்பேட்டையில் உள்ளது. என்னுடைய தந்தை கடந்த 2007ம் ஆண்டு இறந்துவிட்டார். என்னுடைய சித்தப்பாமார்கள் (என் தந்தையில் சகோதரர்கள்) என்னுடைய அனுமதி இல்லாமல் மொத்த சொத்தினையும் அவர்கள் பெயருக்கு பாகப்பிரிவினை செய்துள்ளது தற்போதுதான் எனக்கு தெரியவந்தது. அந்த சொத்தில் விவசாயத்திற்காக மின்இணைப்பு பெறப்பட்டு உள்ளது, அந்த இணைப்பு என் தந்தையின் பெயரிலேயே உள்ளது. நான் அந்த மின் இணைப்பை துண்டிக்க என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகக் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
- K.. சௌந்தரராஜன், தாம்பரம்
பதில் :
பாகப்பிரிவினை செய்துள்ளதாக கூறியுள்ளீர்கள், அது எப்பொழுது செய்யப்பட்டது என்று நீங்கள் குறிப்பிடவில்லை, மேலும் தற்போது அந்த சொத்து யார் பெயரில் உள்ளது என்பதும் இங்கு முக்கியம். இருப்பினும் உங்கள் தந்தை இறந்த பிறகு இந்த பாகப்பிரிவினை பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்றால் அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். உங்கள் தந்தையின் பாகத்தினை அவருடைய வாரிசான உங்களுடைய அனுமதி யில்லாமல் யாருடைய பெயருக்கும் பாகப்பிரிவினை செய்ய அனுமதி இல்லை.
மேலும் மின் இணைப்பை துண்டிப்பதால் மட்டுமே உங்களுடைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. ஆகையால் ஒரு நல்ல சிவில் வழக்கறிஞரை அணுகி நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை கோரி வழக்கு தாக்கல் செய்யுங்கள்... விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, பாகப்பிரிவினை, அந்த, உள்ளது, என்னுடைய, தந்தையின், அனுமதி, அவருடைய, இணைப்பை, மேலும், உங்கள், நல்ல, மின், உங்களுடைய, சொத்து, குடும்ப, சொத்தில், சகோதரர்கள், என்ன, தந்தை